இலங்கையில் சண்டை உக்கிரமடைந்துவரும் நிலையில் அங்கிருந்து 40 தமிழர்கள் அகதிகளாக ராமேஸ்வரம் வந்துள்ளனர்.
இலங்கையில் இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சண்டை மேலும் உக்கிரமடைந்து வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் விடுதலைப் புலிகள் விமானத் தாக்குதலில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில் அங்கிருந்து வரும் அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தற்போது 40 அகதிகள் இலங்கையிலிருந்து தனுஷ்கோடி வந்துள்ளனர். தனுஷ்கோடி அருகே உள்ள முகுந்தராயர் சத்திரத்தில் அவர்கள் வந்திறங்கினர். அவர்களிடம் கியூ பிரிவு பொலிஸார் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.