திருக்கோவில், தம்பிலுவில் பகுதியில் தேர்தல் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்த ஜே.வி.பி. உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீது ஆயுதக் குழுவினர் தாக்குதல் நடத்தியதில் 15 க்கும்மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மேற்படி துண்டுப் பிரசுரங்களை விநியோகித்திருந்தவர்கள் மீது நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுதக் குழுவினர் சுற்றிவளைத்து இரும்புக் கம்பிகளாலும் பொல்லுகளாலும் தாக்கியதையடுத்தே இவர்கள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதால் அம்பாறை வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்கியவர்களிடம் ரி.-56 ரக துப்பாக்கி மற்றும் பிஸ்டலும் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் அம்பாறை பொலிஸ் நிலையத்திலும் தேர்தல் ஆணையாளரிடமும் அக்கட்சி முறையிட்டுள்ளது.