Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, May 06, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
தமிழர்களுக்கெதிரான இலங்கையின் தாக்குதல்களுக்கு இந்திய அரசு வேண்டுமென்றே துணை நிற்கிறது
[06 - May - 2008] [Font Size - A - A - A]
* விசனம் தெரிவித்து வைகோ மன்மோகன் சிங்கிற்கு கடிதம்த

வறுக்கு மேல் தவறு செய்யும் இந்திய அரசை மனவேதனையோடு குற்றம் சாட்டுவதைத் தவிர வேறு வழி இல்லை என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இந்திய முன்னாள் பிரதமர்கள் பண்டிதர் ஜவஹர்லால் நேரு, திருமதி இந்திரா காந்தி ஆகியோரால் தொலைநோக்குப் பார்வையோடு உருவாக்கப்பட்ட இந்திய வெளியுறவுக் கொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, தவறுக்கு மேல் தவறு செய்யும் இந்திய அரசை மனவேதனையோடு குற்றம் சாட்டுவதைத் தவிர வேறு வழி இல்லை என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

ஆயுதங்கள் வாங்க இலங்கை அரசுக்கு இந்தியா நிதிக் கடன் வழங்கக்கூடாது என்று வலியுறுத்தி நேற்று திங்கட்கிழமை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கும் வைகோ கடிதம் அனுப்பியுள்ளார்.

வைகோ எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; "ஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு இந்தியா உதவி" என்ற தலைப்பில் 27 ஏப்ரல் 2008 திகதியிட்ட "எகனொமிக் ரைம்ஸ்" ஆங்கில நாளிதழில் வந்த, வேதனை தரக்கூடிய செய்தியை தங்களின் உடனடி கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

இலங்கையின் விடுதலைப் புலிகளை எதிர்த்துப் போரிட இந்தியா நிதி உதவி என்று சொல்லலாம். அரசியல் மற்றும் இராஜாங்க ரீதியாகவும் பிரிவுகளை ஏற்படுத்தும் நடவடிக்கையாக புதுடில்லி, இலங்கை அரசின் பாதுகாப்புத்துறைக்கு ஆயுதங்களும் இராணுவத் தளபாடங்களும் வாங்குவதற்காக 100 மில்லியன் டொலர் (400 கோடி) கடன் உதவி செய்ய ஏற்பாடு செய்து இருப்பதாக, நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தெரியவந்திருப்பதாக, சண்டே எகனொமிக் ரைம்ஸ் செய்தித் தாளில் செய்தி வெளியாகி இருக்கிறது. இந்திய அரசு வரையறுத்து உள்ள குறைந்த அளவில் முன்னேறிய நாடுகளின் பட்டியலில் இலங்கை இடம்பெறவில்லை என்ற போதிலும், இந்திய அரசாங்கம் குறைந்தபட்ச வட்டியாக 2 சதவீதத்துக்கு ஷ்ரீலங்கா அரசுக்குக் கடன் தர முன்வந்துள்ளது. சாதாரணமாக இந்தியா, இங்கிலாந்தின் அனைத்து வங்கிகள் கட்டமைப்பு அளிக்கக்கூடிய வட்டி வீதத்தோடு 1-2 சதவீதம் சேர்த்து இலங்கை போன்று தகுதி படைத்த நாடுகளுக்கு கடன் வழங்குவதுதான் வழக்கம்.

இலங்கையில் தொடருந்து மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த மேலும் 100 மில்லியன் டொலர் கடன் வழங்க இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. வெளிவிவகாரத்துறை அமைச்சகத்தின் முதலீடு மற்றும் வணிக மேம்பாட்டுப்பிரிவு இந்த விவகாரத்தை இந்நாள் வரை கையாண்டு வருகிறது. மேலே குறிப்பிடப்பட்ட இந்தச் செய்தியைக் கண்டதும் நான் பேரதிர்ச்சி அடைந்தேன். இந்திய அரசும் இந்தச் செய்தியை இதுவரையிலும் மறுக்கவில்லை. அதிர்ச்சி தரக்கூடிய இந்தச் செய்தியை தொடக்கத்தில் நான் முற்றிலும் நம்பவில்லை. ஆனால், இந்தச் செய்தி உண்மையானதுதான் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து உறுதியானதும் நான் நடுங்கினேன்.

நான் தங்களிடம் நேரில் அளித்த கோரிக்கை மனுவில், இந்திய அரசு இலங்கை அரசுக்கு ஆயுதங்கள் வழங்குவதாக இலங்கை அரசின் அமைச்சர்களும் அதிகாரிகளும் கூறிய செய்திகளைக் குறிப்பிட்டு இருந்தேன். ஆனால், இந்தியா, இலங்கைக்கு எந்தவிதமான ஆயுதங்களும் வழங்கவில்லை என்று தாங்கள் எனக்கு அளித்த வாக்குறுதியை இங்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

இலங்கை அரசு அங்கு வாழும் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலையைத் தொடர்ந்து நடத்தி வருகிறது என்பது அனைவரும் ஏற்றுக்கொண்ட ஓர் உண்மை ஆகும். இந்த உண்மை 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8 ஆம் நாள், பிரான்ஸ் அரசு ஏற்பாடு செய்திருந்த ஆழிப்பேரலை மறுவாழ்வு மையத்தின் தன்னார்வத் தொண்டர்களாகப் பணியாற்றி வந்த 17 தமிழ் இளைஞர்கள் உச்சந்தலையில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக உண்மை கண்டறியும் உயர்நிலைக் குழு அளித்த அறிக்கையின் மூலம் உறுதிசெய்யப்பட்டு இருக்கிறது. மேலும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 5 மாணவர்கள் இலங்கை இராணுவத்தால் கொலை செய்யப்பட்டதும் அந்தக் குழு உறுதி செய்து இருக்கிறது.

ஐ.நா. சபை, கொழும்பில் அலுவலகம் அமைக்க இலங்கை அனுமதி மறுத்ததும், மனித உரிமைகள் கழகத்தின் தலைவர் திருமதி லூயிஸ் ஆர்பர், இலங்கையின் வடக்குப் பகுதியில் தமிழர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட அனுமதி அளிக்காததும், இலங்கை அரசு தமிழர்களை இனப்படுகொலையை நிகழ்த்தி வருகிறது என்பதை உலக நாடுகளுக்கு வெளிப்படுத்தியது. இலங்கை அரசின் மனித உரிமை அத்துமீறல்களைக் கண்டித்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ஐ.நா. சபையில் கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா கடுமையாக எதிர்த்தது என்ற குற்றச்சாட்டை மிகுந்த கவலையோடு தெரிவிக்கிறேன்.

தாங்கள் எனக்கு அளித்த வாக்குறுதிக்கு மாறாக இந்தியா, இலங்கை அரசுக்கு நிதி உதவி செய்வதால், அதைக் கொண்டு சீனா மற்றும் பாகிஸ்தானிடம் இருந்தும் ஆயுதங்களை வாங்கி, தங்கள் இராணுவத்தை பலப்படுத்திக்கொண்டு தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி அழித்து வருகிறது. அப்பாவித் தமிழர்களும் பெண்களும் குழந்தைகளும் கொல்லப்படுகிறார்கள். சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் தலையீட்டைத் தவிர்க்கின்ற வகையில் இந்தியா, இலங்கை அரசுடன் இருதரப்பு உறவை வலுப்படுத்த முயல்கிறது என்று வெளிவிவகாரத்துறை அமைச்சகம் முன்வைக்கும் வாதம் நியாயம் அற்றதும் பொருள் அற்றதும் ஆகும். இது தமிழ் இனத்தை அழிப்பதற்கு இலங்கை மேற்கொள்ளும் தாக்குதல்களுக்கு துணை போகிற ஒரு துரோகச் செயலே தவிர, வேறொன்றும் இல்லை.

இலங்கை இராணுவத்தின் தாக்குதலுக்கு ஆளாகி அங்கு வாழும் தமிழன் சிந்துகின்ற ஒவ்வொரு சொட்டு இரத்தத்துக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பதில் சொல்ல வேண்டும். குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தப்படும் என்று எனது முன்னைய கடிதங்களில் குறிப்பிட்டு இருக்கிறேன்.

இலங்கையில் துன்பப்பட்டுக் கொண்டு இருக்கும் தமிழர்களுக்கு தமிழக மக்கள் வழங்கிய மருந்துகளையும் உணவுப் பொருட்களையும் செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் அனுப்புவதற்கு இந்திய அரசு அனுமதி மறுத்து வருவது பொறுத்துக்கொள்ள இயலாத, வேதனைக்குரிய ஒன்று. இந்திய அரசின் இந்த மனிதாபிமானமற்ற அணுகுமுறை. அனைத்துலக விதிகளுக்கும் நடைமுறைகளுக்கும் எதிரானது மட்டும் அல்லாமல், ஜெனீவா ஒப்பந்தத்தின் கொள்கைகளுக்கும் மாறானது ஆகும். இலங்கையில் அவதியுறும் தமிழர்களுக்கு அளிக்க வேண்டிய உணவுப் பொருட்களுக்கும் மருந்துப் பொருட்களுக்கும் தடை விதித்து விட்டு, இலங்கை அரசுக்குப் பெருமளவில் நிதி உதவியை கிட்டத்தட்ட அன்பளிப்பாகக் கொடுப்பதுபோல் அளித்து அவர்களது இராணுவத்தைப் பலப்படுத்த இந்தியா உதவுவது மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளது.

பண்டிதர் ஜவஹர்லால் நேரு, திருமதி இந்திரா காந்தி ஆகியோரால் தொலைநோக்குப் பார்வையோடு உருவாக்கப்பட்ட இந்திய வெளியுறவுக் கொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, தவறுக்கு மேல் தவறு செய்யும் இந்திய அரசை மனவேதனையோடு குற்றம் சாட்டுவதைத் தவிர வேறு வழி இல்லை. இந்திய அரசாங்கம் வேண்டுமென்றே, தெரிந்தே இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு மேற்கொள்ளும் கொடூரத் தாக்குதல்களுக்குத் துணை போகிறது என்று குற்றம் சாட்டுகிறேன். இலங்கை மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் அமைச்சரவையில் அடங்கிய கட்சிகளுமே பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் பதில் கூற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

இலங்கை அரசுக்கு நிதி, கடன் உதவி செய்ய இருக்கும் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும், நேர்முகமாகவோ மறைமுகமாகவோ அந்த நாட்டுக்கு அளிக்கும் எந்த உதவியையும் உடனடியாக நிறுத்துமாறும் பெருத்த மனவேதனையோடும் வருத்தத்தோடும் தங்களை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன் என்றும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Email this page Your Opinion Print this page
கிழக்கில் சகல கட்சிகளுமே சுதந்திரமாக தேர்தல் பிரசாரம்
வடக்கு, கிழக்கு அதிகாரத்தை பசிலிடம் ஜனாதிபதி கையளிப்பு
பள்ளிக்குடாவில் கடற்படையின் முகாம் மீது தாக்குதல்; 6 பேர் பலி
அச்சத்தால் உண்மையைக் கூறமுடியாத நிலை ஜனாதிபதி ஆணைக்குழு முன் அழுதார் கிறிஸ்தவ மதகுரு
பாராளுமன்ற பதில் செயலாளர் நாயக நியமனம் தொடர்பான சர்ச்சை நீடிப்பு
ரணில் பயணம் செய்த ஹெலிகொப்டர் மகியங்கனையில் அவசரமாக தரையிறக்கம்
தீவிரசிகிச்சை பிரிவில் வேடுவர் தலைவர்
தமிழர்களுக்கெதிரான இலங்கையின் தாக்குதல்களுக்கு இந்திய அரசு வேண்டுமென்றே துணை நிற்கிறது
திகண, அம்பாங்கோட்டையில் திடீர் தேடுதல் வெடிகுண்டு, மின் உபகரணங்கள் கண்டு பிடிப்பு
அம்பாறையில் ஜே.வி.பி. மீது தாக்குதல் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம்
தெல்தெனிய தேடுதலில் 12 கிலோ வெடிமருந்து மீட்பு
`மோசடிகளைத் தடுக்க சுயாதீனக்குழுக்கள் அவசியம் வெளிநாட்டுப் பிரதிநிதிகளை வரவழைப்பது கண்துடைப்பு'
எகலியகொடை பள்ளியவத்தையில் குடும்பஸ்தரை காணவில்லை
ஹந்தானை மலைப் பகுதியில் அழுகிய நிலையில் ஆணின் சடலம்
மகேஸ்வரன் கொலையுடன் 1 ஆவது சந்தேகநபருக்கு நேரடித் தொடர்பிருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது
வலி.வடக்கில் மீள்குடியேற்றத்திற்காக இரு வாரத்தில் ஏற்பாட்டுக் குழுவை நியமிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
கிழக்கு மக்களின் தேவைகளையும் உரிமைகளையும் பாதுகாக்க ஐ.தே.கட்சி நடவடிக்கையெடுக்கும்
பொலிஸ் திணைக்களத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்த சில ஊடகங்கள் முயற்சி
கோட்டை ரயில் நிலையம் முன்பாக இன்று உலக ஊடக சுதந்திர தின வைபவம்
தமிழகத்துக்கு 40 இலங்கை அகதிகள்
புலிகளின் பெயரைப் பயன்படுத்தி நித்தம்புவ பகுதியில் பெருந்தொகை பணத்தை கப்பமாகப் பெற்ற இருவர் கைது
ஆறு அமைச்சுக்களின் செயலாளர்கள் ஜனாதிபதியால் திடீர் இடமாற்றம்
வவுனியா கூமாங்குளம் பகுதியில் 3 வீடுகளில் ஆயுதபாணிகள் கொள்ளை
பேராசிரியர் வித்தியானந்தனின் நினைவுக் கருத்தாடல் நிகழ்வுகள்
தமிழ் - முஸ்லிம் சமூகங்கள் பேரினவாத ஒடுக்குமுறையிலிருந்து மீள்வதற்கு முஸ்லிம் காங்கிரஸை ஆதரிக்க வேண்டும்
ஐ.தே.க.வின் முறையற்ற நிர்வாகத்தன்மையே கடந்த கால தேர்தல் தோல்விக்கு காரணம்
கிழக்கில் தற்போதுள்ள அமைதியான சூழலை யானைக்கு வாக்களித்து அழித்துவிடக்கூடாது
முஸ்லிம் சமூகம் ஒற்றுமைபடுவதன் மூலம் உலகுக்கு முன்மாதிரியை காட்ட முடியும்
`தொழிலாளர்கள் உரிமையுடன் வாழுகின்ற சூழலை ஏற்படுத்துவதே இ.தொ.ஐ.மு. நோக்கம்'
கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கிய கஷ்டங்கள் குளிரூட்டப்பட்ட பைபர் கிளாஸ் படகினால் தீர்வு
தொழிலாளர் விடுதலை முன்னணியின் மே தின தீர்மானங்கள்
தமிழர்கள் அனைவரும் புலிகளல்ல என்பதை சகல பொலிஸாரும் உணர்ந்து கொள்ள வேண்டும்
இன்றைய முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் சுயநல அரசியலுக்கு துணை போகிறது
அரசின் காடைத்தனங்களிலிருந்து தமிழ், முஸ்லிம்களை பாதுகாக்க முதலமைச்சர் ஆசனத்தை கைப்பற்றியேயாக வேண்டும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com