நீர்கொழும்பு - தலத்துவ ஷ்ரீ கருமாரியம்மன் தேவஸ்தான முன்னாள் செயலாளரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வை நீர்கொழும்பு நற்பணி மன்றம் அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. கௌரவிக்கப்பட்ட முன்னாள் செயலாளர் ஆர்.நடராஜா மாலையுடன் அமர்ந்திருப்பதையும், பிரதம அதிதியான விஜயரத்தினம், மத்திய கல்லூரி அதிபர் என்.கணேசலிங்கம் அருகிலிருப்பதையும் அவர்களுடன் நற்பணிமன்ற உறுப்பினர்களையும் நீர்கொழும்பு நற்பணிமன்ற பொருளாளர் துரைசாமி சந்திரன் வாழ்த்துப் பாடுவதையும் காண்கிறீர்கள்.
கொழும்பு முகத்துவாரம் பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை மாலை சென்.ஜுட் பகுதியில் நடைபெற்றபோது பொதுமக்கள் பாதுகாப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் பியபாலா விளக்கமளிப்பதையும், அருகே கான்ஸ்டபிள்களான ஏக்கநாயக்க, அஜித், ஜெகத், அசாங்க ஆகியோர் நிற்பதையும் கலந்துகொண்ட பொதுமக்களையும் இங்கு காணலாம்.