Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, May 07, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
ஆண்களைவிட பெண்களுக்கே அரசியல் தெரியும் யானைக்கு வாக்களித்தால் நடுவீதியில் நிற்போம்
[07 - May - 2008] [Font Size - A - A - A]
* அமைச்சர் பேரியல் அஷ்ரப் தெரிவிப்பு

ஐ.தே.க.வுக்கு வாக்களிக்கும்படி கிழக்கு முஸ்லிம்களை அஷ்ரப் ஒருபோதும் கேட்டுக்கொண்டதில்லை. ஐ.தே.க.வுக்கு வாக்களித்தால் சொப்பிங் பையுடன் ஓடவேண்டிவருமென்றே எச்சரித்திருந்தாரென தெரிவித்த அமைச்சர் பேரியல் அஷ்ரப், ஆண்களைவிட பெண்களுக்கே அரசியல் அதிகம் தெரியுமெனவும் ஆண்களுக்கு அரசியலை சொல்லிக்கொடுக்கவேண்டிய கட்டாய தேவை தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.

ஐ.ம.சு.முன்னணி சார்பில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் உஷா சலீமை ஆதரித்து சாய்ந்தமருதில் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்துள்ள அவர், மேலும் கூறியதாவது,

சாய்ந்தமருது மக்கள் அரசியலில் அனுபவம் வாய்ந்தவர்கள். சகலவற்றையும் எடுத்துக்கூறத் தேவையில்லை. ஆண்களைவிட பெண்களுக்கு நன்கு அரசியல் தெரியும். ஆண்கள் உணர்ச்சிவசப்பட்டவர்கள். கோபம் உள்ளவர்கள் எதையும் பொறுமையுடன் இருந்து பெறமுடியாதவர்கள். அந்தவகையில்தான் சொல்லுகின்றேன், பெண்கள்தான் ஆண்களுக்கு அரசியலை சொல்லிக்கொடுக்கவேண்டிய கட்டாயத்தேவை இன்று எழுந்துள்ளது.

நோன்பு பிடித்து முந்தானைகளை ஏந்தி வளர்த்தெடுத்த முஸ்லிம் காங்கிரஸ் இன்று எம்மத்தியில் இல்லை. முஸ்லிம் காங்கிரஸை அழித்துவிட்டு முஸ்லிம்களை அழிக்கவேண்டும் என்று கங்கணம்கட்டி செயற்பட்டுக்கொண்டிருக்கும் ஐ.தே.கட்சியுடன் சேர்ந்து பவனி வருகிறார்கள்.

உரிமை என்ற வெறும் கோஷங்களினால் எங்களது பிரதேசங்கள் அழிந்த நிலையில் உள்ளது. அதனை கட்டியெழுப்பவேண்டும். தொழில் வாய்ப்புகளை எங்களது பிள்ளைகளுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும். உரிமையோடு அபிவிருத்தி காணவேண்டும். அதனால் இம்முறை வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களித்து ஜனாதிபதியின் கையைப் பலப்படுத்தவேண்டும்.

கிழக்கு மாகாணம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது நாங்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள், நிம்மதியற்ற வாழ்க்கை அனைத்தும் தெரியும். இந்நிலை தொடர்ந்தும் இனிவேண்டாம். அரசு கிழக்கை மீட்டெடுத்து நிம்மதியான சூழலை எற்படுத்தி மூவின மக்களும் ஒற்றுமையுடன் வாழக்கூடிய சூழலை ஏற்படுத்தி தேர்தலை நடாத்தி அபிவிருத்தி வேலைகளை துரிதமாக முன்னெடுப்பதற்கு மக்களின் ஆணையைக் கோரியுள்ளது.

அந்தவகையில், வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களித்து அரசின் கையை பலப்படுத்தவேண்டும். ஐ.தே.கட்சிக்கு வாக்களிக்கச் செய்து எங்களது பிரதேச அபிவிருத்திகளை பாழடையச்செய்து மூவின மக்களாகிய சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் இனவாதங்களைத் தூண்டி நிம்மதியாக இருக்கும் கிழக்குமாகாண சூழலை சீர்குலைக்க வேண்டாம்.

ஐ.தே.கட்சிக்கு கொடுக்கும் ஒவ்வொரு வாக்குகளும் எமது பிரதேசங்கள் சூறையாடவும், பிள்ளைகளின் எதிர்காலம் இருளாக்கவும், அபிவிருத்திகளை தடைசெய்யவும் பயன்படுத்தப்படுவதுடன், சொப்பிங் பையுடன் நடுத்தெருவில் நிற்கக்கூடிய சூழ்நிலையையும் ஏற்படுத்தும்.

Email this page Your Opinion Print this page
வவுனியாவில் கிளைமோர் தாக்குதல் இரு பொதுமக்கள் பலி; ஒருவர் காயம்
பாராளுமன்றக் கூட்டத் தொடர் ஜனாதிபதியால் ஜுன் 5ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது
கைதானோர், காணாமற்போனோர் விபரத்தை அறிந்துகொள்ள உடனடி தொலைபேசி சேவை
பாகிஸ்தான் படைத்தளபதிகளுடன் சரத் பொன்சேகா பேச்சு வார்த்தை
மியன்மாரில் சூறாவளி கோர தாண்டவம் 15 ஆயிரம் மக்கள் பலி; 30 ஆயிரம் பேர் மாயம் இலங்கையின் அரிசி இறக்குமதிக்கும் ஆபத்து
பிலியந்தல தாக்குதலில் சிங்களவர்களுக்கு தொடர்பு ஏப்ரலில் 177 பேர் உயிரிழப்பு ; 990 பேர் காயம்
வவுனியா துப்பாக்கிச் சூட்டில் புளொட் முக்கியஸ்தர் உயிரிழப்பு
ஹபரண படைவீரர் இடைத்தங்கல் முகாம் பாதுகாப்பு அமைச்சிடம் கையளிப்பு
திருச்சொரூபத்தை பழைய இடத்தில் வைக்க மன்னார் ஆயர் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்கக்கூடாது
மட்டு. ஆசிரியர் பயிற்சி கலாசாலை மாணவரை விடுவிக்குமாறு ஆர்ப்பாட்டம்
வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் இன்று ஊவா மாகாண முன்றிலில் ஆர்ப்பாட்டம்
கிளைமோர் தாக்குதலில் பௌத்த பிக்கு மயிரிழையில் உயிர் தப்பினார்
ஆதரவாளர் மீதான தாக்குதலை கண்டித்து ஜே.வி.பி. அம்பாறையில் ஆர்ப்பாட்டப் பேரணி
யாழ்.செயலக இலங்கை வங்கிக் கிளை இன்று முதல் கணினி மயமாகின்றது
வடக்கு நோக்கிய யுத்தத்தைக்காட்டி பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து சிங்கள மக்களின் கவனம் திசை திருப்பப்படுகிறது
அவசரகால நீடிப்புக்கு சபை அங்கீகாரம்
பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் நியமனம் ரணிலின் தலையீட்டால் சர்ச்சை தவிர்ப்பு
தமிழ் வர்த்தகரை கடத்தி கப்பம் கோரிய வழக்கில் ஓய்வு பெற்ற விங் கொமாண்டர் உட்பட ஐவருக்கு அழைப்பாணை
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவுகூர்ந்து கோட்டை ரயில் நிலையம் முன்பாக நேற்று மாலை அஞ்சலி நிகழ்வு
நீதியான தேர்தலுக்கான வாய்ப்பு கிழக்கு மாகாணத்தில் இல்லை
மு.கா. பிரதேச சபை உறுப்பினர்களுக்கு வாள் வெட்டு; கைவிரல்கள் துண்டிப்பு
வாக்களிப்புக்கு முன்னரே முறைகேடு குறித்து ஆரூடம் கூறுவதை ஏற்கமுடியாது
திருமலையிலிருந்து வந்த கொமாண்டோ அணியினர் புலிகளிடமிருந்து மூதூர் நகரை மீட்கப்போவதாக கூறினர்
மடுதேவாலயம் ஒருபோதும் இராணுவப் பிரதேசமாக்கப்படாது
இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் மேதினக் கோரிக்கைகள்
மலையக மண்ணை அபகரிக்க தீயசக்திகள் திட்டமிட்டுச் செயற்பட்டு வருகின்றன
ஐ.தே.கட்சிக்கு போடப்படும் ஒவ்வொரு வாக்கும் முஸ்லிம்களுக்கெதிரான நாடுகளையே பலப்படுத்தும்
ஆண்களைவிட பெண்களுக்கே அரசியல் தெரியும் யானைக்கு வாக்களித்தால் நடுவீதியில் நிற்போம்
தந்திரமான கபடப் பேச்சுக்களில் ஏமாறாது ஐ.ம.சு.முன்னணிக்கே வாக்களிக்க வேண்டும்
கிழக்கை ஜனாதிபதி மீட்டதாலேயே மாகாணசபைத் தேர்தலை நடாத்த முடிந்துள்ளது
முதலமைச்சரைப் பெறுவது நோக்கமில்லையென ஹக்கீம் கூறுவதில் எந்த உண்மையுமில்லை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com