Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, May 07, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
ஐ.தே.கட்சிக்கு போடப்படும் ஒவ்வொரு வாக்கும் முஸ்லிம்களுக்கெதிரான நாடுகளையே பலப்படுத்தும்
[07 - May - 2008] [Font Size - A - A - A]
* பிரதியமைச்சர் நிஜாமுதீன் தெரிவிப்பு

கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஐ.தே.க.வுக்கு முஸ்லிம்கள் போடும் ஒவ்வொரு வாக்கும் முஸ்லிம்களுக்கெதிரான நாடுகள், சக்திகளை பலப்படுத்துவதாகவே அமையுமென பிரதியமைச்சர் நிஜாமுதீன் தெரிவித்தார்.

சம்மாந்துறை மல்வத்தையில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அளிக்கின்ற ஒவ்வொரு வாக்கும் முஸ்லிம்களுக்கெதிரான சக்திகளான நோர்வே, அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளை பலப்படுத்துவதுடன் முஸ்லிம்களின் கருத்துக்களில் வைக்கின்ற கத்தியாகவும் மாறும் என்பதை முஸ்லிம்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

2001ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் விக்கிரமசிங்கவின் ஒரு வருட ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட மூதூர் தொடக்கம் பொத்துவில் வரையான சம்பவங்களை சற்று எடுத்துப் பார்க்க வேண்டும். முஸ்லிம் இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்தது மட்டுமல்ல உறவினர்கள் கண்முன்னே ஜனாஸாக்களை பெற்றோல் ஊற்றி எரித்த போதும் ரணிலுடைய ஆட்சிக் காலமும் ஆட்சியாளர்களும் கைகட்டி வேடிக்கை பார்த்த நிகழ்வும் இன்னும் எம் மனதை விட்டு அகலவில்லை.

நாம் பாதுகாப்பற்றவர்களாக இருந்த போது எமக்கு பாதுகாப்பு வழங்கியது ஷ்ரீலங்கா சுதந்திர கட்சியும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவும் என்பதை நாம் ஒரு போதும் மறந்துவிடக் கூடாது.

கிழக்கு மாகாண சபை தேர்தலில் அரசாங்கம் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. முதலமைச்சரை பெறுவதாக இருந்தால் கிழக்கில் வாழுகின்ற அனைத்து முஸ்லிம்களும் வெற்றிலைக்கு வாக்களிப்பதன் மூலம் தான் அதனை பெறக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் இருக்கிறது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கிழக்கு மாகாண சபைத் தேர்தல்களில் கூடுதலாக ஆசனங்களை பெறுகின்றவர்கள் முதலமைச்சர் பதவியை பெற்றுக் கொள்ள முடியும் என உறுதிபடக் கூறியுள்ளார். அந்த வகையில் கிழக்கு மாகாணம் முஸ்லிம் மாகாணம் என்பதை உறுதிப்படுத்துகின்ற தேர்தல் இந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலே ஆகும். கிழக்கு முஸ்லிம்கள் தமது வாக்குகளை சிதற விடாமல் சிந்தித்து வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களிப்பதன் ஊடாக கிழக்கு முஸ்லிம் மாகாண சபையையும் முதலமைச்சரையும் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்தர்ப்பத்தை கை நழுவவிட்டு பின்னர் தலையில் கை வைப்பதில் எந்தவிதமான பிரயோசனமும் இல்லை. இத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடுகின்ற மு.கா. தலைமைக்கு வாக்களிப்பதன் மூலம் எமக்கு எவ்விதமான பிரயோசனமும் கிடைக்க போவதில்லை. முஸ்லிம் காங்கிரஸ் மரத்துக்கு நாங்கள் வாக்களித்து பழக்கப்பட்டிருந்தாலும் பழக்கப்பட்ட அந்த மரச்சின்னம் இன்று எங்கள் மத்தியில் இல்லை. மரத்தை வெட்டி யானைக்கு இரை போட்டுவிட்டு யானையில் பவனி வருகிறார்கள்.

மு.கா.தலைமையை நம்பி ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்திற்கு அளிக்கின்ற ஒவ்வொரு வாக்குகளும் எமது சிறார்களின் எதிர்கால வளர்ச்சியை பாழாக்குகின்ற ஒரு சக்தியாக மாறி விடும். ஆகவே, நீங்கள் அளிக்கவுள்ள இந்த வாக்கை வெற்றிலைச் சின்னத்திற்கு போட்டு எமது இன வரலாறு, உரிமை, அபிவிருத்தி என்ற இலட்சியப் பாதையில் ஒன்று பட்டு இச்சந்தர்ப்பத்தை பெறுமதிமிக்கதாக மாற்றி அமைப்போம்.

Email this page Your Opinion Print this page
வவுனியாவில் கிளைமோர் தாக்குதல் இரு பொதுமக்கள் பலி; ஒருவர் காயம்
பாராளுமன்றக் கூட்டத் தொடர் ஜனாதிபதியால் ஜுன் 5ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது
கைதானோர், காணாமற்போனோர் விபரத்தை அறிந்துகொள்ள உடனடி தொலைபேசி சேவை
பாகிஸ்தான் படைத்தளபதிகளுடன் சரத் பொன்சேகா பேச்சு வார்த்தை
மியன்மாரில் சூறாவளி கோர தாண்டவம் 15 ஆயிரம் மக்கள் பலி; 30 ஆயிரம் பேர் மாயம் இலங்கையின் அரிசி இறக்குமதிக்கும் ஆபத்து
பிலியந்தல தாக்குதலில் சிங்களவர்களுக்கு தொடர்பு ஏப்ரலில் 177 பேர் உயிரிழப்பு ; 990 பேர் காயம்
வவுனியா துப்பாக்கிச் சூட்டில் புளொட் முக்கியஸ்தர் உயிரிழப்பு
ஹபரண படைவீரர் இடைத்தங்கல் முகாம் பாதுகாப்பு அமைச்சிடம் கையளிப்பு
திருச்சொரூபத்தை பழைய இடத்தில் வைக்க மன்னார் ஆயர் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்கக்கூடாது
மட்டு. ஆசிரியர் பயிற்சி கலாசாலை மாணவரை விடுவிக்குமாறு ஆர்ப்பாட்டம்
வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் இன்று ஊவா மாகாண முன்றிலில் ஆர்ப்பாட்டம்
கிளைமோர் தாக்குதலில் பௌத்த பிக்கு மயிரிழையில் உயிர் தப்பினார்
ஆதரவாளர் மீதான தாக்குதலை கண்டித்து ஜே.வி.பி. அம்பாறையில் ஆர்ப்பாட்டப் பேரணி
யாழ்.செயலக இலங்கை வங்கிக் கிளை இன்று முதல் கணினி மயமாகின்றது
வடக்கு நோக்கிய யுத்தத்தைக்காட்டி பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து சிங்கள மக்களின் கவனம் திசை திருப்பப்படுகிறது
அவசரகால நீடிப்புக்கு சபை அங்கீகாரம்
பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் நியமனம் ரணிலின் தலையீட்டால் சர்ச்சை தவிர்ப்பு
தமிழ் வர்த்தகரை கடத்தி கப்பம் கோரிய வழக்கில் ஓய்வு பெற்ற விங் கொமாண்டர் உட்பட ஐவருக்கு அழைப்பாணை
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவுகூர்ந்து கோட்டை ரயில் நிலையம் முன்பாக நேற்று மாலை அஞ்சலி நிகழ்வு
நீதியான தேர்தலுக்கான வாய்ப்பு கிழக்கு மாகாணத்தில் இல்லை
மு.கா. பிரதேச சபை உறுப்பினர்களுக்கு வாள் வெட்டு; கைவிரல்கள் துண்டிப்பு
வாக்களிப்புக்கு முன்னரே முறைகேடு குறித்து ஆரூடம் கூறுவதை ஏற்கமுடியாது
திருமலையிலிருந்து வந்த கொமாண்டோ அணியினர் புலிகளிடமிருந்து மூதூர் நகரை மீட்கப்போவதாக கூறினர்
மடுதேவாலயம் ஒருபோதும் இராணுவப் பிரதேசமாக்கப்படாது
இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் மேதினக் கோரிக்கைகள்
மலையக மண்ணை அபகரிக்க தீயசக்திகள் திட்டமிட்டுச் செயற்பட்டு வருகின்றன
ஐ.தே.கட்சிக்கு போடப்படும் ஒவ்வொரு வாக்கும் முஸ்லிம்களுக்கெதிரான நாடுகளையே பலப்படுத்தும்
ஆண்களைவிட பெண்களுக்கே அரசியல் தெரியும் யானைக்கு வாக்களித்தால் நடுவீதியில் நிற்போம்
தந்திரமான கபடப் பேச்சுக்களில் ஏமாறாது ஐ.ம.சு.முன்னணிக்கே வாக்களிக்க வேண்டும்
கிழக்கை ஜனாதிபதி மீட்டதாலேயே மாகாணசபைத் தேர்தலை நடாத்த முடிந்துள்ளது
முதலமைச்சரைப் பெறுவது நோக்கமில்லையென ஹக்கீம் கூறுவதில் எந்த உண்மையுமில்லை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com