Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, May 07, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
மலையக மண்ணை அபகரிக்க தீயசக்திகள் திட்டமிட்டுச் செயற்பட்டு வருகின்றன
[07 - May - 2008] [Font Size - A - A - A]
* தோட்டத் தொழிலாளர்கள் நடுத்தெருவுக்கு வரும் அபாயம்; எச்சரிக்கின்றார் முத்துசிவலிங்கம்

மலையக மண்ணை அபகரிக்க இன்று நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலைமை தொடருமானால் பெருந்தோட்ட தொழிலாளர்கள் தமது தொழில் வாய்ப்புகளையும், குடியிருப்புகளையும் இழந்து அநாதைகளாக நடு வீதிக்கு வர நேரிடும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான முத்துசிவலிங்கம் கூறினார்.

கடந்த சனிக்கிழமை மாத்தளை பாக்கியம் தேசிய கல்லூரிக்கான மூன்று மாடிக் கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில்;

மலையக மண்ணை பறித்தெடுக்க மேற்கொள்ளும் முயற்சிகளை தடுத்து நிறுத்த வேண்டிய கடமை மலையகத் தொழிற்சங்க தலைமைத்துவங்களையே சார்ந்துள்ளது. எனவே இத்தலைமைத்துவங்கள் தமக்கிடையிலான அரசியல் கட்சிபேதங்களையும், கொள்கை வேறுபாடுகளையும் ஓரங்கட்டி வைத்துவிட்டு கருத்தொருமித்து ஒன்றுபட்டு செயல்பட முன்வரவேண்டும்.

சுமார் இருபது வருடங்களுக்கு முன் இறப்பர் தோட்டங்களில் தொழில் செய்து வந்த மலேசியா நாட்டு தொழிலாளர்கள் செல்வந்தர்களாக வாழ்ந்து பின் குடியிருப்புகளை இழந்து வீதி ஓரங்களில் சிறு குடியிருப்புகளை அமைத்துக் கொண்டு வாழ்ந்தனர்.

இதேநிலை எமது தோட்டத் தொழிலாளர்களுக்கும் ஏற்படும் முன் தடுத்து நிறுத்த வேண்டியது எமது தலையாய கடமையாகும் என்பதை மலையக அரசியல் தொழிற்சங்க தலைமைத்துவங்கள் மனதில் கொண்டு செயற்பட வேண்டும்.

எனவே, நாம் தமிழ் மக்கள் செறிந்து வாழும் நுவரெலியா மாவட்டத்தை மட்டும் அபிவிருத்தி செய்யாது கண்டி, மாத்தளை, பதுளை, களுத்துறை போன்ற தமிழ் மக்கள் செறிந்து வாழும் அனைத்து பிரதேசங்களையும் பாரபட்சமின்றி அபிவிருத்தி செய்து வருகின்றோம்.

இன்று ஒரு சில பேரின வாதிகள் சிறுபான்மை சமூகங்களான எம்மை மேலும் சிறுபான்மையாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, நாம் ஒற்றுமையுடனும் கட்டுப்பாடுடனும் வாழ்வது அவசியமானதாகும். அன்று எம் மக்கள் மத்தியில் ஒற்றுமையும் கட்டுக் கோப்பும் ஓங்கி இருந்தமையாலேயே அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான் தனியொரு மனிதராக செயற்பட்டு அளப்பரிய சாதனைகளை படைத்தார்.

எம்மில் ஐவர் அமைச்சர்களா இருந்த போதும் ஐவரும் ஒன்று சேர்ந்தேனும் அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமானைப் போன்று சாதனை படைக்க முடியாமல் உள்ளது.

அமரர் தொண்டமான் போன்றே முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தலைவர் ஏ.எச்.எம். அஸ்ரப்பும் தனி ஒரு மனிதராகச் செயல்பட்டு முஸ்லிம் சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுத்தார்.

ஆனால், இன்று சகோதர முஸ்லிம் சமூகத்தின் நிலையை நோக்கும் போது பெரும் வேதனையாக உள்ளது. அவர்கள் இன்று ஐந்து, ஆறு பிரிவுகளாக பிரிந்து நின்று செயற்படுகின்றனர். இது எம்மை பிரித்து வைத்து வேடிக்கை பார்க்கும் பேரினவாதிகளுக்கு பெரும் வாய்ப்பாக அமைந்து விடும்.

எனவே, தமிழ் முஸ்லிம் சமூகங்கள் முதலில் தத்தமது சமூகத்துக்குள் ஒன்றுமையை ஏற்படுத்திக் கொண்டு பின் இரு சமூகங்களும் கருத்தொருமித்து ஒற்றுமையுடனும் வாழ்வது மூலமே இந்நாட்டில் சிறுபான்மை சமூகங்களான நாம் தன்மானத்துடனும் சுபிட்சமாகவும் சுய கௌரவத்துடனும் சுதந்திரமாக வாழ முடியும்.

இப் பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலைப் பிள்ளைகளில் ஒரு சிலர் மட்டுமே விபூதி திலகமிட்டு பாடசாலைக்கு வருகின்றனர். ஆசிரியர்கள் இவ்விடயத்தில் கூடிய கவனம் எடுக்க வேண்டும். எமது கலாசார பண்பாட்டு பாரம்பரியங்களை கட்டாயமாக கடைப்பிடிக்குமாறு மாணவர்களு க்கு வலியுறுத்த வேண்டும்.

மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சர் எஸ். அருள்சாமி பேசும் போது கூறியதாவது;

கடந்த வருடம் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சு மூலம் 31 பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டது. இவ்வருடம் மேலும் ஒரு சில பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது. கல்வி வளர்ச்சி மூலம் மட்டுமே எமது மலையக சமூகத்தை சகல வளமும் பெற்ற சமூகமாக வளர்த்தெடுக்க முடியும்.

இதனை கருத்தில் கொண்டே மலையக கல்வி வளர்ச்சிக்கு தடையாக உள்ள அனைத்து காரணிகளையும் தகர்த்தெறிந்து மலையக கல்வியை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்கின்றேன் என்றார்.

Email this page Your Opinion Print this page
வவுனியாவில் கிளைமோர் தாக்குதல் இரு பொதுமக்கள் பலி; ஒருவர் காயம்
பாராளுமன்றக் கூட்டத் தொடர் ஜனாதிபதியால் ஜுன் 5ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது
கைதானோர், காணாமற்போனோர் விபரத்தை அறிந்துகொள்ள உடனடி தொலைபேசி சேவை
பாகிஸ்தான் படைத்தளபதிகளுடன் சரத் பொன்சேகா பேச்சு வார்த்தை
மியன்மாரில் சூறாவளி கோர தாண்டவம் 15 ஆயிரம் மக்கள் பலி; 30 ஆயிரம் பேர் மாயம் இலங்கையின் அரிசி இறக்குமதிக்கும் ஆபத்து
பிலியந்தல தாக்குதலில் சிங்களவர்களுக்கு தொடர்பு ஏப்ரலில் 177 பேர் உயிரிழப்பு ; 990 பேர் காயம்
வவுனியா துப்பாக்கிச் சூட்டில் புளொட் முக்கியஸ்தர் உயிரிழப்பு
ஹபரண படைவீரர் இடைத்தங்கல் முகாம் பாதுகாப்பு அமைச்சிடம் கையளிப்பு
திருச்சொரூபத்தை பழைய இடத்தில் வைக்க மன்னார் ஆயர் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்கக்கூடாது
மட்டு. ஆசிரியர் பயிற்சி கலாசாலை மாணவரை விடுவிக்குமாறு ஆர்ப்பாட்டம்
வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் இன்று ஊவா மாகாண முன்றிலில் ஆர்ப்பாட்டம்
கிளைமோர் தாக்குதலில் பௌத்த பிக்கு மயிரிழையில் உயிர் தப்பினார்
ஆதரவாளர் மீதான தாக்குதலை கண்டித்து ஜே.வி.பி. அம்பாறையில் ஆர்ப்பாட்டப் பேரணி
யாழ்.செயலக இலங்கை வங்கிக் கிளை இன்று முதல் கணினி மயமாகின்றது
வடக்கு நோக்கிய யுத்தத்தைக்காட்டி பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து சிங்கள மக்களின் கவனம் திசை திருப்பப்படுகிறது
அவசரகால நீடிப்புக்கு சபை அங்கீகாரம்
பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் நியமனம் ரணிலின் தலையீட்டால் சர்ச்சை தவிர்ப்பு
தமிழ் வர்த்தகரை கடத்தி கப்பம் கோரிய வழக்கில் ஓய்வு பெற்ற விங் கொமாண்டர் உட்பட ஐவருக்கு அழைப்பாணை
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவுகூர்ந்து கோட்டை ரயில் நிலையம் முன்பாக நேற்று மாலை அஞ்சலி நிகழ்வு
நீதியான தேர்தலுக்கான வாய்ப்பு கிழக்கு மாகாணத்தில் இல்லை
மு.கா. பிரதேச சபை உறுப்பினர்களுக்கு வாள் வெட்டு; கைவிரல்கள் துண்டிப்பு
வாக்களிப்புக்கு முன்னரே முறைகேடு குறித்து ஆரூடம் கூறுவதை ஏற்கமுடியாது
திருமலையிலிருந்து வந்த கொமாண்டோ அணியினர் புலிகளிடமிருந்து மூதூர் நகரை மீட்கப்போவதாக கூறினர்
மடுதேவாலயம் ஒருபோதும் இராணுவப் பிரதேசமாக்கப்படாது
இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் மேதினக் கோரிக்கைகள்
மலையக மண்ணை அபகரிக்க தீயசக்திகள் திட்டமிட்டுச் செயற்பட்டு வருகின்றன
ஐ.தே.கட்சிக்கு போடப்படும் ஒவ்வொரு வாக்கும் முஸ்லிம்களுக்கெதிரான நாடுகளையே பலப்படுத்தும்
ஆண்களைவிட பெண்களுக்கே அரசியல் தெரியும் யானைக்கு வாக்களித்தால் நடுவீதியில் நிற்போம்
தந்திரமான கபடப் பேச்சுக்களில் ஏமாறாது ஐ.ம.சு.முன்னணிக்கே வாக்களிக்க வேண்டும்
கிழக்கை ஜனாதிபதி மீட்டதாலேயே மாகாணசபைத் தேர்தலை நடாத்த முடிந்துள்ளது
முதலமைச்சரைப் பெறுவது நோக்கமில்லையென ஹக்கீம் கூறுவதில் எந்த உண்மையுமில்லை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com