Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, May 07, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
திருச்சொரூபத்தை பழைய இடத்தில் வைக்க மன்னார் ஆயர் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்கக்கூடாது
[07 - May - 2008] [Font Size - A - A - A]
* ஹெல உறுமயவின் மேதானந்த தேரர்

மடுமாதா திருச்சொரூபத்தை மீண்டும் கொண்டுவருவதற்கு மன்னார் ஆயர் தலைமையிலான 30 மதகுருமார் அடங்கிய குழு விதித்துள்ள நிபந்தனையை ஏற்கக்கூடாதென ஹெல உறுமய கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் எல்லாவெல மேதானந்த தேரர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

மடு தேவாலயம் முதலில் பௌத்த விகாரையாகவிருந்தது. பின்னர் இந்து ஆலயமானது. அதன் பின்னர் ஒல்லாந்தர்களால் மடு அன்னையின் சிலை வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் மத மாற்றம் செய்யப்பட்டனர்.

மடு தேவாலயத்தையும் அண்டிய பகுதிகளையும் புலிகள் தாக்குதல் மத்திய நிலையமாகவே பயன்படுத்தி வந்தனர். இந்நிலையிலேயே எமது படையினர் மடுதேவாலயத்தை மீட்டெடுத்தனர்.

இந்நிலையில் மடுமாதா திருச்சொரூபத்தை மீண்டும் கொண்டு வந்து வைப்பதற்கு மன்னார் ஆயர் தலைமையிலான குழுவினர் நிபந்தனை விதித்துள்ளனர். இதனை ஏற்றுக்கொள்ளக்கூடாது. சமாதான வலய பிரகடனமென்பது கேலிக்குரியது. இராணுவமும் புலிகளும் தேவாலயத்திலிருந்து 100 மீற்றர் தூரத்தில் இருக்க வேண்டுமென்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. இடம்பெயர்ந்த மக்களுக்கு அரசு உணவு வழங்குகின்றது. எனவே, மடுப் பிரதேசத்தில் அம்மக்களை வாழவைக்க வேண்டிய அவசியம் இல்லை.

இதேவேளை, மலையகத்திலிருந்து வன்னிக்குச் சென்று புலிகளிடம் பயிற்சி பெற்று மலையகத்திற்குள் புகுந்தவர்களை கைது செய்ததும் மனித உரிமைகள் பற்றிப் பேசுகிறார்கள்.

பல இடங்களில் புலிகளின் நடவடிக்கைகளுக்கு உதவி வழங்கிய சிங்களவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான தேசத்துரோகிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும். அவர்களின் சொத்துகளை அரசு பறிமுதல் செய்ய வேண்டும்.

பிள்ளையான் ஜனநாயக நீரோட்டத்துக்கு வந்ததை வரவேற்கிறோம். இவ்வாறு பிரபாகரன் வந்தாலும் மகிழ்வடைவோம். கிழக்கில் ரவூப் ஹக்கீம் முஸ்லிம் இன வாதத்தைப் பரப்பி வருகின்றார். இது பயங்கரமானது. முஸ்லிம் தாயகத்தை உருவாக்குவேன் எனக்கூறும் ரவூப் ஹக்கீம் இனங்களிடையே மோதல்களை உருவாக்க முனைகிறார்.

இந்நாட்டில் வாழும் இனங்களுக்கு தனித்தனியாக தாயகங்களையும் படையணிகளையும் உருவாக்க அனுமதித்தால் என்ன நடக்குமென்பதை அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

Email this page Your Opinion Print this page
வவுனியாவில் கிளைமோர் தாக்குதல் இரு பொதுமக்கள் பலி; ஒருவர் காயம்
பாராளுமன்றக் கூட்டத் தொடர் ஜனாதிபதியால் ஜுன் 5ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது
கைதானோர், காணாமற்போனோர் விபரத்தை அறிந்துகொள்ள உடனடி தொலைபேசி சேவை
பாகிஸ்தான் படைத்தளபதிகளுடன் சரத் பொன்சேகா பேச்சு வார்த்தை
மியன்மாரில் சூறாவளி கோர தாண்டவம் 15 ஆயிரம் மக்கள் பலி; 30 ஆயிரம் பேர் மாயம் இலங்கையின் அரிசி இறக்குமதிக்கும் ஆபத்து
பிலியந்தல தாக்குதலில் சிங்களவர்களுக்கு தொடர்பு ஏப்ரலில் 177 பேர் உயிரிழப்பு ; 990 பேர் காயம்
வவுனியா துப்பாக்கிச் சூட்டில் புளொட் முக்கியஸ்தர் உயிரிழப்பு
ஹபரண படைவீரர் இடைத்தங்கல் முகாம் பாதுகாப்பு அமைச்சிடம் கையளிப்பு
திருச்சொரூபத்தை பழைய இடத்தில் வைக்க மன்னார் ஆயர் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்கக்கூடாது
மட்டு. ஆசிரியர் பயிற்சி கலாசாலை மாணவரை விடுவிக்குமாறு ஆர்ப்பாட்டம்
வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் இன்று ஊவா மாகாண முன்றிலில் ஆர்ப்பாட்டம்
கிளைமோர் தாக்குதலில் பௌத்த பிக்கு மயிரிழையில் உயிர் தப்பினார்
ஆதரவாளர் மீதான தாக்குதலை கண்டித்து ஜே.வி.பி. அம்பாறையில் ஆர்ப்பாட்டப் பேரணி
யாழ்.செயலக இலங்கை வங்கிக் கிளை இன்று முதல் கணினி மயமாகின்றது
வடக்கு நோக்கிய யுத்தத்தைக்காட்டி பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து சிங்கள மக்களின் கவனம் திசை திருப்பப்படுகிறது
அவசரகால நீடிப்புக்கு சபை அங்கீகாரம்
பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் நியமனம் ரணிலின் தலையீட்டால் சர்ச்சை தவிர்ப்பு
தமிழ் வர்த்தகரை கடத்தி கப்பம் கோரிய வழக்கில் ஓய்வு பெற்ற விங் கொமாண்டர் உட்பட ஐவருக்கு அழைப்பாணை
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவுகூர்ந்து கோட்டை ரயில் நிலையம் முன்பாக நேற்று மாலை அஞ்சலி நிகழ்வு
நீதியான தேர்தலுக்கான வாய்ப்பு கிழக்கு மாகாணத்தில் இல்லை
மு.கா. பிரதேச சபை உறுப்பினர்களுக்கு வாள் வெட்டு; கைவிரல்கள் துண்டிப்பு
வாக்களிப்புக்கு முன்னரே முறைகேடு குறித்து ஆரூடம் கூறுவதை ஏற்கமுடியாது
திருமலையிலிருந்து வந்த கொமாண்டோ அணியினர் புலிகளிடமிருந்து மூதூர் நகரை மீட்கப்போவதாக கூறினர்
மடுதேவாலயம் ஒருபோதும் இராணுவப் பிரதேசமாக்கப்படாது
இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் மேதினக் கோரிக்கைகள்
மலையக மண்ணை அபகரிக்க தீயசக்திகள் திட்டமிட்டுச் செயற்பட்டு வருகின்றன
ஐ.தே.கட்சிக்கு போடப்படும் ஒவ்வொரு வாக்கும் முஸ்லிம்களுக்கெதிரான நாடுகளையே பலப்படுத்தும்
ஆண்களைவிட பெண்களுக்கே அரசியல் தெரியும் யானைக்கு வாக்களித்தால் நடுவீதியில் நிற்போம்
தந்திரமான கபடப் பேச்சுக்களில் ஏமாறாது ஐ.ம.சு.முன்னணிக்கே வாக்களிக்க வேண்டும்
கிழக்கை ஜனாதிபதி மீட்டதாலேயே மாகாணசபைத் தேர்தலை நடாத்த முடிந்துள்ளது
முதலமைச்சரைப் பெறுவது நோக்கமில்லையென ஹக்கீம் கூறுவதில் எந்த உண்மையுமில்லை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com