Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, May 07, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
ஹபரண படைவீரர் இடைத்தங்கல் முகாம் பாதுகாப்பு அமைச்சிடம் கையளிப்பு
[07 - May - 2008] [Font Size - A - A - A]
கைத்தொழில் துறை அமைச்சினால் பாதுகாப்புப் படையினருக்காக 61 மில்லியன் ரூபா செலவில், ஹபரணவில் அமைக்கப்பட்டு வந்த இடைத்தங்கல் முகாமின் நிர்மாணப் பணிகள் யாவும் நிறைவுபெற்றதை அடுத்து அது பாதுகாப்பு அமைச்சிடம் உத்தியோகப் பூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

இராணுவ நலன்புரி மற்றும் கைத்தொழில் துறை அபிவிருத்தி அமைச்சருமான குமார் வெல்கமவினால் இராணுவ இடைத்தங்கல் முகாமின் கட்டிடங்களும் நிலப்பிரதேசமும் அரசாங்க பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் சுனில் சிறிசேனவிடம் கடந்தவாரம் கையளிக்கப்பட்டது.

2006 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் திகதி ஹபரண திகம்பத்தானவில் விடுமுறையின் பின் வீடுதிரும்பிக் கொண்டிருந்த கடற்படையினர் 102 பேரின் உயிர்கள் புலிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதலால் காவுகொள்ளப்பட்டதைத் தொடர்ந்து படையினருக்கான உயர் பாதுகாப்புடன் கூடிய இடைத் தங்கல் முகாமின் அவசியம் உணரப்பட்டது.

வனஜீவ பாதுகாப்புச் சபைக்குச் சொந்தமான 15 ஏக்கர் காணியில் அமைக்கப்பட்டுள்ள இப்புதிய இடைத்தங்கல் முகாமின் ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் தங்குவதற்கான சகல வசதிகளையும் கொண்ட விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனால் இது கிழக்கு மாகாணத்திற்கு சேவையின் பொருட்டு செல்லும் படையினருக்கு விடுமுறையில் வீடு திரும்பும் படை வீரர்களுக்கும் இவ் இடைத்தங்கல் முகாம் சிறந்த அடிப்படை வசதிகளைக் கொண்ட பாதுகாப்பான முகாமென அமைச்சர் குமார் வெல்கம தெரிவித்தார்.

கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் டபிள்யு குருகே, நலன்புரிப் பிரிவின் பணிப்பாளர் திருமதி மல்காந்து ஜயவர்தன, மேஜர் ஜெனரல் உபாலி பெரேரா ஆகியோருடன் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் பலரும் இவ்வைபவத்தின் போது சமூகமளித்திருந்தனர்.

Email this page Your Opinion Print this page
வவுனியாவில் கிளைமோர் தாக்குதல் இரு பொதுமக்கள் பலி; ஒருவர் காயம்
பாராளுமன்றக் கூட்டத் தொடர் ஜனாதிபதியால் ஜுன் 5ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது
கைதானோர், காணாமற்போனோர் விபரத்தை அறிந்துகொள்ள உடனடி தொலைபேசி சேவை
பாகிஸ்தான் படைத்தளபதிகளுடன் சரத் பொன்சேகா பேச்சு வார்த்தை
மியன்மாரில் சூறாவளி கோர தாண்டவம் 15 ஆயிரம் மக்கள் பலி; 30 ஆயிரம் பேர் மாயம் இலங்கையின் அரிசி இறக்குமதிக்கும் ஆபத்து
பிலியந்தல தாக்குதலில் சிங்களவர்களுக்கு தொடர்பு ஏப்ரலில் 177 பேர் உயிரிழப்பு ; 990 பேர் காயம்
வவுனியா துப்பாக்கிச் சூட்டில் புளொட் முக்கியஸ்தர் உயிரிழப்பு
ஹபரண படைவீரர் இடைத்தங்கல் முகாம் பாதுகாப்பு அமைச்சிடம் கையளிப்பு
திருச்சொரூபத்தை பழைய இடத்தில் வைக்க மன்னார் ஆயர் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்கக்கூடாது
மட்டு. ஆசிரியர் பயிற்சி கலாசாலை மாணவரை விடுவிக்குமாறு ஆர்ப்பாட்டம்
வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் இன்று ஊவா மாகாண முன்றிலில் ஆர்ப்பாட்டம்
கிளைமோர் தாக்குதலில் பௌத்த பிக்கு மயிரிழையில் உயிர் தப்பினார்
ஆதரவாளர் மீதான தாக்குதலை கண்டித்து ஜே.வி.பி. அம்பாறையில் ஆர்ப்பாட்டப் பேரணி
யாழ்.செயலக இலங்கை வங்கிக் கிளை இன்று முதல் கணினி மயமாகின்றது
வடக்கு நோக்கிய யுத்தத்தைக்காட்டி பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து சிங்கள மக்களின் கவனம் திசை திருப்பப்படுகிறது
அவசரகால நீடிப்புக்கு சபை அங்கீகாரம்
பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் நியமனம் ரணிலின் தலையீட்டால் சர்ச்சை தவிர்ப்பு
தமிழ் வர்த்தகரை கடத்தி கப்பம் கோரிய வழக்கில் ஓய்வு பெற்ற விங் கொமாண்டர் உட்பட ஐவருக்கு அழைப்பாணை
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவுகூர்ந்து கோட்டை ரயில் நிலையம் முன்பாக நேற்று மாலை அஞ்சலி நிகழ்வு
நீதியான தேர்தலுக்கான வாய்ப்பு கிழக்கு மாகாணத்தில் இல்லை
மு.கா. பிரதேச சபை உறுப்பினர்களுக்கு வாள் வெட்டு; கைவிரல்கள் துண்டிப்பு
வாக்களிப்புக்கு முன்னரே முறைகேடு குறித்து ஆரூடம் கூறுவதை ஏற்கமுடியாது
திருமலையிலிருந்து வந்த கொமாண்டோ அணியினர் புலிகளிடமிருந்து மூதூர் நகரை மீட்கப்போவதாக கூறினர்
மடுதேவாலயம் ஒருபோதும் இராணுவப் பிரதேசமாக்கப்படாது
இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் மேதினக் கோரிக்கைகள்
மலையக மண்ணை அபகரிக்க தீயசக்திகள் திட்டமிட்டுச் செயற்பட்டு வருகின்றன
ஐ.தே.கட்சிக்கு போடப்படும் ஒவ்வொரு வாக்கும் முஸ்லிம்களுக்கெதிரான நாடுகளையே பலப்படுத்தும்
ஆண்களைவிட பெண்களுக்கே அரசியல் தெரியும் யானைக்கு வாக்களித்தால் நடுவீதியில் நிற்போம்
தந்திரமான கபடப் பேச்சுக்களில் ஏமாறாது ஐ.ம.சு.முன்னணிக்கே வாக்களிக்க வேண்டும்
கிழக்கை ஜனாதிபதி மீட்டதாலேயே மாகாணசபைத் தேர்தலை நடாத்த முடிந்துள்ளது
முதலமைச்சரைப் பெறுவது நோக்கமில்லையென ஹக்கீம் கூறுவதில் எந்த உண்மையுமில்லை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com