இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகள் மோதும் முக்கோண ஒரு நாள் கிரிக்கெட் தொடர் ஜூன் 8 ஆம் திகதி டாக்காவில் தொடங்குகிறது.
இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்) சார்பில் `ருவென்ரி-20' தொடர் நடக்கிறது. இதில் இந்திய வீரர்கள் அனைவரும் விளையாடி வருகின்றனர். இத்தொடர் முடித்தவுடன் அடுத்து நடக்கும் ஆசியக் கிண்ணத் தொடருக்கு இடையே உள்ள 20 நாட்களில் நன்றாக ஓய்வெடுக்கலாம் என்ற இந்திய வீரர்களின் ஆசை தற்போது நிறைவேறாமல் போயுள்ளது.
இந்த இடைப்பட்ட காலத்தில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் தொடர் பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடக்கும் என இந்திய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இதற்கான இந்திய அணி அடுத்த மாதம் 8 ஆம் திகதி டாக்கா செல்கிறது. அன்று நடக்கும் தொடக்கப் போட்டியில் பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகள் விளையாடுகின்றன. ஜூன் 10 இல் நடக்கும் தனது முதல் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 12 ஆம் திகதி நடக்கும் போட்டியில் இந்தியா, பங்களாதேஷ் எதிர்கொள்கிறது. இறுதியாட்டம் 14 ஆம் திகதி நடக்கிறது. அனைத்து போட்டிகளும் பகல்- இரவு போட்டிகளாக நடக்கும்.