Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, May 08, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
இராணுவத்தின் பாரிய இழப்புகளுக்கு அரசியல் கலந்திருப்பதே காரணம்
[08 - May - 2008] [Font Size - A - A - A]
*ஐ.தே.க. பொதுச் செயலாளர் அத்தநாயக்க

இராணுவம் பாரிய இழப்புகளை சந்திப்பதற்கு இராணுவ நடவடிக்கைகளில் அரசியல் நடவடிக்கைகள் கலந்திருப்பதே காரணமெனக் குற்றம்சாட்டிய ஐ.தே.க.வின் பொதுச் செயலரும் எம்.பி.யுமான திஸ்ஸ அத்தநாயக்க, இராணுவ நடவடிக்கைகளுக்கு அரசியல்வாதிகள் உத்தரவிடக்கூடாதெனவும் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த திஸ்ஸ அத்தநாயக்க மேலும் கூறியதாவது;

கடந்த மாதத்தில் மட்டும் முப்படையைச் சேர்ந்த 122 பேர் கொல்லப்பட்டும் 926 பேர் காயமடைந்துமுள்ளனர். பலர் காணாமல்போயுள்ளனர். இது தொடர்பில் பிரதமர் கணக்குக்காட்டும் விடயம் தொடர்பாகவே நாம் ஆராய்வோம். ஆனால் வெளியில் பொதுமக்களிடையே வேறு கணக்குகள் உள்ளன.

படையினர் நாட்டின் இறைமையை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர். அவர்களை கௌரவிக்கின்றோம். அவர்களின் முயற்சிகளுக்கு நாம் ஒத்துழைப்போம்.

முகமாலையில் இராணுவம் பின்னடைவை எதிர்கொண்டது. இது முதல் தடவையல்ல. பல தடவைகள் நடந்துள்ளன. படையினர் பின்னடைவை எதிர்கொள்ள அரசியல் நடவடிக்கைகளே காரணம்.

அவசரகால சட்டத்தை வைத்துக்கொண்டே கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படுகின்றது. கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் நாம் போட்டியிடமாட்டோமென்று நினைத்தே அரசு மாகாணசபைத் தேர்தலை நடத்த முன்வந்தது. ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது.

கிழக்கில் புலிகள் நடமாடிக்கொண்டிருக்கின்றனர். இதைவிட கிழக்கில் சட்டவிரோதக் குழுக்கள் ஆயுதங்களுடன் நடமாடுகின்றன. இவர்களின் நடமாட்டங்களை கட்டுப்படுத்த தேர்தல் ஆணையாளர் நடவடிக்கை எடுக்கவேண்டும். பிள்ளையான் குழுவின் துப்பாக்கி கலாசாரத்தை அரசு நிறுத்தவேண்டும்.

ஜனநாயகத்தை நிலைநிறுத்த அரசு விரும்பினால் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை கண்காணிப்புக் குழுவின் அறிக்கைகள் தொடர்பாக உடனடி நடவடிக்கையெடுக்க வேண்டும். கிழக்கில் 200 க்கு மேற்பட்ட சோதனை சாவடிகள் உள்ளன. ஆனால் பிள்ளையான் குழுவின் ஆயுதங்கள் பிடிபடுவதில்லை.

கிழக்கில் இராணுவ முகாம்களுக்கு அருகிலேயே பிள்ளையான் குழுவின் முகாம்கள் உள்ளன. அங்கே ஆயுதங்களுடன் அவர்கள் நடமாடுகின்றனர். இதனை நான் கண்ணால் கண்டேன். எந்த நாட்டில் இவ்வாறான நடைமுறை உள்ளது. அரச படையினர் முகாம்களுக்கு அருகில் சட்டவிரோத ஆயுதக்குழுவின் முகாம் இலங்கையில் மட்டுமே உள்ளது.

ஏறாவூர், கிரான். வாழைச்சேனை, செங்கலடி சந்தியென சகல இடங்களிலும் அரச படையினர்களின் முகாம்களுக்கு அருகிலேயே பிள்ளையானின் முகாம்கள் உள்ளன. கொக்கடி, தொப்பிகல, திருகோணமலை தபால் நிலையத்துக்கு அருகிலென சகல இடங்களிலும் பிள்ளையானின் முகாம்கள் உள்ளன.

கிழக்கில் இராணுவமுகாம்களுக்கருகில் பிள்ளையானின் முகாம்கள் இருப்பது சகல மக்களுக்கும் தெரியும். ஆனால் அரசுக்கு மட்டும் தெரியாது. இதுதான் விந்தையானது.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மக்களின் தீர்ப்பை ஏற்கும் திராணி அரசுக்கு இருக்கவேண்டும். அது இல்லாததாலேயே அரசு அங்கு சட்டவிரோத செயற்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளது. மிரட்டல்கள், தாக்குதல்கள் என கிழக்கில் அராஜகங்கள் அரங்கேறுகின்றன. பிள்ளையானை வைத்துக்கொண்டு அரசுதான் இவற்றை செய்கின்றது.

ஐ.தே.க.வுக்கும் புலிகளுக்கும் கூட்டு எனக்கூறிக்கொண்டு புலிகளோடு அரசே கூட்டுச்சேர்ந்து செயற்படுகின்றது. கிழக்கில் வெளியிடப்படும் தேர்தல் துண்டுப் பிரசுரங்களில் ஒருபக்கம் அரச இலட்சினையும் மறுபக்கத்தில் புலிகளின் இலட்சினையும் காணப்படுகின்றது. பிள்ளையானுக்கு முன் அரசு மண்டியிட்டு நிற்கிறது.

வடமேல் மாகாணசபைத் தேர்தல் ஒரு படுமோசமான தேர்தல். அதேபோன்றுதான் கிழக்கில் தற்போது நடைபெறத் தொடங்கியுள்ளது. பிள்ளையான் குழுவிடம் ஆயுதங்கள் இல்லையென அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறி, முடிந்தால் நிரூபியுங்கள் என்றும் சவால்விட்டார்.

துப்பாக்கிதாரிகளை படம்பிடித்தால் படம் பிடித்தவரின் தலை இருக்காது. ஆனாலும் நான் எனது தலையைப்பற்றிக் கவலைப்படாது சில புகைப் படங்களை எடுத்துள்ளேன். இதோ இந்தப்படங்களில் பிள்ளையான் ஆயுதத்துடன் இருக்கிறார். அவரின் முகாம்கள், அங்குள்ளவர்கள் ஆயுதங்களுடன் உள்ள புகைப்படங்கள். இதற்கு அரசு என்ன சொல்லப்போகிறது.

Email this page Your Opinion Print this page
பாராளுமன்ற சம்பிரதாயங்களை மறந்தவராக எதிர்க்கட்சித் தலைவர்
பாராளுமன்ற கூட்டத் தொடர் ஒத்திவைப்புக்கு விசேட பின்னணிக் காரணம் எதுவும் இல்லை
தேர்தலில் தோல்வி ஏற்பட்டால் முகம் கொடுக்க அஞ்சியே பாராளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு
விமானியின் சாதுர்யத்தால் காப்பாற்றப்பட்ட ரணிலின் உயிர்
மியன்மார் நெருக்கடி; அரிசி கொள்வனவுக்கு தாய்லாந்துடன் இலங்கை பேச்சுவார்த்தை
பிள்ளையானுக்கு ஆதரவாக ஹெலியிலிருந்து துண்டுப் பிரசுரங்கள்
கறுக்காய்குளம் பகுதியில் கவச வாகனம் கண்ணிவெடியில் சிக்கி 9 படையினர் பலி
இலங்கை உட்பட 5 நாடுகள் மனித உரிமை பேரவையின் உறுப்பினராக தகுதியற்றவையென நிராகரிக்க வேண்டும்
சர்வாதிகாரத்தை நிலைநாட்ட அரசாங்கம் கடும் முயற்சி
கிழக்கு மாகாண சபை தேர்தலில் அரசுக்கு எதிராக வாக்களிக்க சகல மக்களும் கிளர்ந்தெழ வேண்டும்
தரம் குறைந்த அரிசியை விற்போரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த பணிப்பு
கட்டைக்காடு கிராமத்தில் இரு தமிழர் , ஒரு முஸ்லிம் கைது
இரத்தினபுரி வைத்தியசாலை தாதிகள் இன்று வேலைநிறுத்தப் போராட்டம்
கிழக்கு தேர்தல் வாக்களிப்புக்கு அரச தனியார் ஊழியர்களுக்கு சம்பளத்துடனான லீவு
இலங்கைக்கு இந்தியா ஆயுதம் வழங்குவதை நியாயப்படுத்துகிறார் விஜயகாந்த்
புத்தளத்தில் தங்கியிருந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் திருமலை அனுப்பப்பட்டதன் மர்மம்
விமல் வீரவன்ச அணியினரின் செய்தியாளர் மாநாட்டில் குழப்பம்
வவுனியா கிளைமோரில் பலியான 2 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டன
பாணந்துறை ரயிலில் குண்டுப் புரளி
பொருளியல் துறை பேராசிரியர் இராஜரட்ணம் லண்டனில் காலமானார்
பயணியைத் தாக்கிய நடத்துநர் விளக்கமறியலில்
யாழ்.பல்கலைக்கழக மாணவர் விடுதிக்கு வெளியே நேற்றிரவு கைக்குண்டு வெடிப்பு
தேர்தல் தினத்தில் வன்முறைகளில் ஈடுபடுவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு உத்தரவு
மாடியில் இருந்து யுவதி விழுந்து மரணமான சம்பவம் நீர்கொழும்பு ஆஸ்பத்திரி டாக்டருக்கு பிணை மறுப்பு
சிவனொளிபாதமலை உச்சியில் ஆலயத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு
வவுனியாவில் நேற்றிரவு துப்பாக்கிச் சூடு ஒருவர் உயிரிழப்பு; ஒருவர் படுகாயம்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐ.தே.க.வெற்றிபெறுவது உறுதி
தொழிலாளர் வர்க்கத்தை அடிமைப்படுத்தும் கூட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்ய ஒன்றுபடுவோம்
வெற்றி பெற்றாலும் தோல்வியை தழுவினாலும் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வே எனது ஒரே நிலைப்பாடு
சிங்கள மக்கள் தமிழர்களின் நண்பர்கள் இந்நாட்டின் அரசியல் யாப்பே எமது எதிரி
யாழ்.மாவட்ட சபை தேர்தல் மோசடியே தமிழ் இளைஞர் ஆயுதம் ஏந்தக் காரணம்
ஆயுதம் வைத்திருப்பதாக பிள்ளையானே கூறும் போது அரசு மட்டும் மறுப்பது ஏன்?
பிள்ளையான் குழுவின் ஆயுதங்களை களைந்து மக்களை பாதுகாப்பது அவசியம்
யாவுமே பௌத்தர்களின் இடமென்பதே ஹெலஉறுமய தேரர்களின் சித்தாந்தம்
3200 மில்லியன் ரூபா கடன் பளுவால் மிகின் விமான சேவை இடைநிறுத்தம்
இராணுவத்தின் பாரிய இழப்புகளுக்கு அரசியல் கலந்திருப்பதே காரணம்
ஆளும் கட்சியிலிருந்து ஐ.தே.க.வில் இணைந்தார்
பிரிட்டனுக்கான புதிய சங்கநாயக்கவிற்கு அலரிமாளிகையில் ஜனாதிபதி கௌரவிப்பு
சூறாவளியால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மியன்மார் மக்களுக்கு இலங்கை அனுதாபம்
தேர்தலின் பின் பொருட்கள் விலை மேலும் மோசமாக அதிகரிக்கும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com