Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, May 08, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
யாவுமே பௌத்தர்களின் இடமென்பதே ஹெலஉறுமய தேரர்களின் சித்தாந்தம்
[08 - May - 2008] [Font Size - A - A - A]
*இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம்களுக்கு எதுவுமில்லையா? மனோ கேள்வி

சமாதான வலயங்களை உருவாக்க மறுத்து வரும் அரசாங்கம் தமிழர் பிரதேசங்களில் அதியுயர் பாதுகாப்பு வலயங்களை உருவாக்குவதிலேயே முனைப்புக் காட்டி வருவதாக மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்கிழமை இடம்பெற்ற அவசரகால சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த மனோகணேசன் மேலும் கூறியதாவது,

மடுமாதா தேவாலயம் குறித்து மன்னார் ஆயரின் கருத்து அவரின் தனிப்பட்ட கருத்தல்ல, அதுஒரு சமூகத்தின் கருத்து. அதனை உதாசீனப்படுத்த முடியாது. ஆனால், அதனை ஏற்கக் கூடாதென ஹெலஉறுமய கூறுகின்றது.

மன்னார் ஆயர் அரசுக்கு மட்டும் நிபந்தனை விதிக்கவில்லை. புலிகளுக்கும் நிபந்தனை விதித்துள்ளார். அரசு இதனை ஏற்றால் புலிகளும் அதனை ஏற்றுத்தான் ஆகவேண்டும். இதன்மூலம் மக்களின் மனங்களை வெல்ல முடியும்.

மடுமாதா கோயில் பௌத்தரின் இடம். திருகோணமலை கோணேஸ்வரம் பௌத்தரின் இடம். கீரிமலை நகுலேஸ்வரம் பௌத்தரின் இடம். இதுதான் ஹெலஉறுமய தேரர்களின் சித்தாந்தம். அவ்வாறானால் இந்து. முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு இந்த நாட்டில் எந்த இடமும் சொந்தமில்லையா?

தற்போது அரசாங்கத்தை ஹெலஉறுமயவே பொறுப்பெடுத்துள்ளது. அந்த நிலையில்தான் அது செயற்பட்டு வருகின்றது. சில விடயங்களில் அரசை மிரட்டி பணிய வைக்கப் பார்க்கின்றனர்.

ரவூப் ஹக்கீம் முஸ்லிம் படையணி தொடர்பாக பேசியது குறித்து ஹெலஉறுமய எம்.பி. கடுமையாகப் பேசினார். ஹக்கீம் பேசினால் எந்நத் தவறும் இல்லை. இந்தியாவில் சகல இனத்திலும் படையணிகள் உண்டு. அவை அனைத்தும் இந்திய இராணுவத்தில்தான் உண்டு. அவ்வாறு ஏன் இங்கு செய்யமுடியாது?

ஹெலஉறுமய போன்ற தீவிரவாத கட்சிகள் அரசாங்கத்தை எங்கேயோ இழுத்துச் செல்கின்றன. அந்தப் பாதை அபாயகரமானது. அதில் தொடர்ந்து பயணிப்பது நாட்டுக்கு நல்லதல்ல.

கிழக்கு மாகாணத்தில் நடக்கவுள்ள மாகாணசபைத் தேர்தலில் அரசு தோற்கடிக்கப்படவேண்டும். ஏனெனில் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட திட்டத்தை முன்னெடுக்க அரசு முற்படுகிறது. அதனால் அரசு தோற்கடிக்கப் படவேண்டியது அவசியம்.

Email this page Your Opinion Print this page
பாராளுமன்ற சம்பிரதாயங்களை மறந்தவராக எதிர்க்கட்சித் தலைவர்
பாராளுமன்ற கூட்டத் தொடர் ஒத்திவைப்புக்கு விசேட பின்னணிக் காரணம் எதுவும் இல்லை
தேர்தலில் தோல்வி ஏற்பட்டால் முகம் கொடுக்க அஞ்சியே பாராளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு
விமானியின் சாதுர்யத்தால் காப்பாற்றப்பட்ட ரணிலின் உயிர்
மியன்மார் நெருக்கடி; அரிசி கொள்வனவுக்கு தாய்லாந்துடன் இலங்கை பேச்சுவார்த்தை
பிள்ளையானுக்கு ஆதரவாக ஹெலியிலிருந்து துண்டுப் பிரசுரங்கள்
கறுக்காய்குளம் பகுதியில் கவச வாகனம் கண்ணிவெடியில் சிக்கி 9 படையினர் பலி
இலங்கை உட்பட 5 நாடுகள் மனித உரிமை பேரவையின் உறுப்பினராக தகுதியற்றவையென நிராகரிக்க வேண்டும்
சர்வாதிகாரத்தை நிலைநாட்ட அரசாங்கம் கடும் முயற்சி
கிழக்கு மாகாண சபை தேர்தலில் அரசுக்கு எதிராக வாக்களிக்க சகல மக்களும் கிளர்ந்தெழ வேண்டும்
தரம் குறைந்த அரிசியை விற்போரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த பணிப்பு
கட்டைக்காடு கிராமத்தில் இரு தமிழர் , ஒரு முஸ்லிம் கைது
இரத்தினபுரி வைத்தியசாலை தாதிகள் இன்று வேலைநிறுத்தப் போராட்டம்
கிழக்கு தேர்தல் வாக்களிப்புக்கு அரச தனியார் ஊழியர்களுக்கு சம்பளத்துடனான லீவு
இலங்கைக்கு இந்தியா ஆயுதம் வழங்குவதை நியாயப்படுத்துகிறார் விஜயகாந்த்
புத்தளத்தில் தங்கியிருந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் திருமலை அனுப்பப்பட்டதன் மர்மம்
விமல் வீரவன்ச அணியினரின் செய்தியாளர் மாநாட்டில் குழப்பம்
வவுனியா கிளைமோரில் பலியான 2 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டன
பாணந்துறை ரயிலில் குண்டுப் புரளி
பொருளியல் துறை பேராசிரியர் இராஜரட்ணம் லண்டனில் காலமானார்
பயணியைத் தாக்கிய நடத்துநர் விளக்கமறியலில்
யாழ்.பல்கலைக்கழக மாணவர் விடுதிக்கு வெளியே நேற்றிரவு கைக்குண்டு வெடிப்பு
தேர்தல் தினத்தில் வன்முறைகளில் ஈடுபடுவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு உத்தரவு
மாடியில் இருந்து யுவதி விழுந்து மரணமான சம்பவம் நீர்கொழும்பு ஆஸ்பத்திரி டாக்டருக்கு பிணை மறுப்பு
சிவனொளிபாதமலை உச்சியில் ஆலயத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு
வவுனியாவில் நேற்றிரவு துப்பாக்கிச் சூடு ஒருவர் உயிரிழப்பு; ஒருவர் படுகாயம்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐ.தே.க.வெற்றிபெறுவது உறுதி
தொழிலாளர் வர்க்கத்தை அடிமைப்படுத்தும் கூட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்ய ஒன்றுபடுவோம்
வெற்றி பெற்றாலும் தோல்வியை தழுவினாலும் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வே எனது ஒரே நிலைப்பாடு
சிங்கள மக்கள் தமிழர்களின் நண்பர்கள் இந்நாட்டின் அரசியல் யாப்பே எமது எதிரி
யாழ்.மாவட்ட சபை தேர்தல் மோசடியே தமிழ் இளைஞர் ஆயுதம் ஏந்தக் காரணம்
ஆயுதம் வைத்திருப்பதாக பிள்ளையானே கூறும் போது அரசு மட்டும் மறுப்பது ஏன்?
பிள்ளையான் குழுவின் ஆயுதங்களை களைந்து மக்களை பாதுகாப்பது அவசியம்
யாவுமே பௌத்தர்களின் இடமென்பதே ஹெலஉறுமய தேரர்களின் சித்தாந்தம்
3200 மில்லியன் ரூபா கடன் பளுவால் மிகின் விமான சேவை இடைநிறுத்தம்
இராணுவத்தின் பாரிய இழப்புகளுக்கு அரசியல் கலந்திருப்பதே காரணம்
ஆளும் கட்சியிலிருந்து ஐ.தே.க.வில் இணைந்தார்
பிரிட்டனுக்கான புதிய சங்கநாயக்கவிற்கு அலரிமாளிகையில் ஜனாதிபதி கௌரவிப்பு
சூறாவளியால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மியன்மார் மக்களுக்கு இலங்கை அனுதாபம்
தேர்தலின் பின் பொருட்கள் விலை மேலும் மோசமாக அதிகரிக்கும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com