Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, May 08, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
யாழ்.மாவட்ட சபை தேர்தல் மோசடியே தமிழ் இளைஞர் ஆயுதம் ஏந்தக் காரணம்
[08 - May - 2008] [Font Size - A - A - A]
*ஜே.வி.பி. எம்.பி.அநுரகுமார கூறுகிறார்

யாழ்.மாவட்ட சபைத் தேர்தலில் நடைபெற்ற மோசடிகளே தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதற்கு காரணமாக அமைந்ததாக குறிப்பிட்ட ஜே.வி.பி. எம்.பி அநுரகுமார திசாநாயக்கா, கிழக்குத் தேர்தலிலும் மோசடிகள் தொடர்ந்தால் அது மற்றுமொரு ஆயுதக் குழுவின் ஆரம்பத்திற்கு வழிவகுக்குமெனவும் எச்சரிக்கைவிடுத்தார்.

பாரளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவசரகால நீடிப்பு பிரேரணை மீதான உரையில் அவர் மேலும் தெரிவித்ததாவது;

பயங்கரவாதத்திற்கெதிரான வெற்றிகளை அரசாங்கம் தனது வெறிபிடித்த குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றப் பயன்படுத்துவது பாரதூரமான விளைவுகளை தோற்றுவிக்குமென ஜே.வி.பி. எச்சரிக்க விரும்புகிறது.

புலிகளின் கோரப்பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட மக்கள் ஜனநாயகத்தை நுகருவதற்கு உரிமை பெற்றுள்ளனர். ஆனால், மோசடி மூலம் அம்மக்கள் நம்பிக்கையை அபகரிக்க அரசாங்கம் முயலுகிறது. கிழக்குத் தேர்தல் மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதாக இல்லை.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆயுதக் குழுவொன்றுடன் கூட்டுச் சேர்ந்தமை மிகப் பெரும் தவறு. அம்மாகாண மக்கள் தேர்தலை கோரவில்லை. இதனால் அங்கு தேர்தல் சூடுபிடிக்கவில்லை. ஆயுதக்குழுவுடன் கூட்டுச் சேர்ந்தமையே மக்களின் அதிருப்திக்குக் காரணமாகும். இதனால் அவர்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை இழப்பார்கள். இந்த நம்பிக்கை இழப்பானது மற்றுமொரு ஆயுதக்குழுவின் ஆரம்பத்திற்கே வழிவகுக்கும்.

1981இல் யாழ்.குடா நாட்டில் நடைபெற்ற தேர்தல் மோசடியே தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தூக்கவழிவகுத்தது.

கொழும்பிலிருந்து தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலைக் கொண்டே தேர்தல் நடத்தப்படுகிறது.

அங்கு மக்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொள்ளும் சூழ்நிலையை ஏற்படுத்துங்களென வலியுறுத்துகிறோம். ஆனால் எமது வலியுறுத்தல் செவிமடுக்கப்படவில்லை.

அரசாங்கம் ஜனநாயகத்திற்கு பயந்து நடுங்குகிறது. அரசின் தலைவர் ஜனநாயகத்திற்கு அஞ்சி செயற்படுகிறார். பயங்கரவாதம் பற்றிய பீதியை மக்கள் மத்தியில் கட்டவிழ்த்து தேர்தலில் வெற்றிபெற அரசு முயற்சிக்கிறது. எனவே தயவுசெய்து இந்த அராஜகங்களை நிறுத்துங்களென வலியுறுத்துகிறோம்.

Email this page Your Opinion Print this page
பாராளுமன்ற சம்பிரதாயங்களை மறந்தவராக எதிர்க்கட்சித் தலைவர்
பாராளுமன்ற கூட்டத் தொடர் ஒத்திவைப்புக்கு விசேட பின்னணிக் காரணம் எதுவும் இல்லை
தேர்தலில் தோல்வி ஏற்பட்டால் முகம் கொடுக்க அஞ்சியே பாராளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு
விமானியின் சாதுர்யத்தால் காப்பாற்றப்பட்ட ரணிலின் உயிர்
மியன்மார் நெருக்கடி; அரிசி கொள்வனவுக்கு தாய்லாந்துடன் இலங்கை பேச்சுவார்த்தை
பிள்ளையானுக்கு ஆதரவாக ஹெலியிலிருந்து துண்டுப் பிரசுரங்கள்
கறுக்காய்குளம் பகுதியில் கவச வாகனம் கண்ணிவெடியில் சிக்கி 9 படையினர் பலி
இலங்கை உட்பட 5 நாடுகள் மனித உரிமை பேரவையின் உறுப்பினராக தகுதியற்றவையென நிராகரிக்க வேண்டும்
சர்வாதிகாரத்தை நிலைநாட்ட அரசாங்கம் கடும் முயற்சி
கிழக்கு மாகாண சபை தேர்தலில் அரசுக்கு எதிராக வாக்களிக்க சகல மக்களும் கிளர்ந்தெழ வேண்டும்
தரம் குறைந்த அரிசியை விற்போரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த பணிப்பு
கட்டைக்காடு கிராமத்தில் இரு தமிழர் , ஒரு முஸ்லிம் கைது
இரத்தினபுரி வைத்தியசாலை தாதிகள் இன்று வேலைநிறுத்தப் போராட்டம்
கிழக்கு தேர்தல் வாக்களிப்புக்கு அரச தனியார் ஊழியர்களுக்கு சம்பளத்துடனான லீவு
இலங்கைக்கு இந்தியா ஆயுதம் வழங்குவதை நியாயப்படுத்துகிறார் விஜயகாந்த்
புத்தளத்தில் தங்கியிருந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் திருமலை அனுப்பப்பட்டதன் மர்மம்
விமல் வீரவன்ச அணியினரின் செய்தியாளர் மாநாட்டில் குழப்பம்
வவுனியா கிளைமோரில் பலியான 2 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டன
பாணந்துறை ரயிலில் குண்டுப் புரளி
பொருளியல் துறை பேராசிரியர் இராஜரட்ணம் லண்டனில் காலமானார்
பயணியைத் தாக்கிய நடத்துநர் விளக்கமறியலில்
யாழ்.பல்கலைக்கழக மாணவர் விடுதிக்கு வெளியே நேற்றிரவு கைக்குண்டு வெடிப்பு
தேர்தல் தினத்தில் வன்முறைகளில் ஈடுபடுவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு உத்தரவு
மாடியில் இருந்து யுவதி விழுந்து மரணமான சம்பவம் நீர்கொழும்பு ஆஸ்பத்திரி டாக்டருக்கு பிணை மறுப்பு
சிவனொளிபாதமலை உச்சியில் ஆலயத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு
வவுனியாவில் நேற்றிரவு துப்பாக்கிச் சூடு ஒருவர் உயிரிழப்பு; ஒருவர் படுகாயம்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐ.தே.க.வெற்றிபெறுவது உறுதி
தொழிலாளர் வர்க்கத்தை அடிமைப்படுத்தும் கூட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்ய ஒன்றுபடுவோம்
வெற்றி பெற்றாலும் தோல்வியை தழுவினாலும் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வே எனது ஒரே நிலைப்பாடு
சிங்கள மக்கள் தமிழர்களின் நண்பர்கள் இந்நாட்டின் அரசியல் யாப்பே எமது எதிரி
யாழ்.மாவட்ட சபை தேர்தல் மோசடியே தமிழ் இளைஞர் ஆயுதம் ஏந்தக் காரணம்
ஆயுதம் வைத்திருப்பதாக பிள்ளையானே கூறும் போது அரசு மட்டும் மறுப்பது ஏன்?
பிள்ளையான் குழுவின் ஆயுதங்களை களைந்து மக்களை பாதுகாப்பது அவசியம்
யாவுமே பௌத்தர்களின் இடமென்பதே ஹெலஉறுமய தேரர்களின் சித்தாந்தம்
3200 மில்லியன் ரூபா கடன் பளுவால் மிகின் விமான சேவை இடைநிறுத்தம்
இராணுவத்தின் பாரிய இழப்புகளுக்கு அரசியல் கலந்திருப்பதே காரணம்
ஆளும் கட்சியிலிருந்து ஐ.தே.க.வில் இணைந்தார்
பிரிட்டனுக்கான புதிய சங்கநாயக்கவிற்கு அலரிமாளிகையில் ஜனாதிபதி கௌரவிப்பு
சூறாவளியால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மியன்மார் மக்களுக்கு இலங்கை அனுதாபம்
தேர்தலின் பின் பொருட்கள் விலை மேலும் மோசமாக அதிகரிக்கும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com