Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, May 08, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
தொழிலாளர் வர்க்கத்தை அடிமைப்படுத்தும் கூட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்ய ஒன்றுபடுவோம்
[08 - May - 2008] [Font Size - A - A - A]
*தொழிலாளர் விடுதலை முன்னணி தலைவர் அய்யாத்துரை

`உலக தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள் என்ற தத்துவத்தை முன்னெடுத்து கிளர்த்தெழுந்து போராடி உரிமைகளை பெற்ற தினமே மே தினம். இந்த மே தினத்தைக் கொண்டாடும் மலையக அரசியல் தலைமைகள் தொழிலாளர் பலத்தையும் சக்தியையும் அதிகார வர்க்கத்திற்கும் முதலாளி வர்க்கத்திற்கும் அடிமைப்படுத்தி விட்டும் கொண்டாடுவது தொழிலாளர்களின் உரிமைக் குரலை மழுங்கடிக்கும் ஒரு நடவடிக்கையாகும், என தொழிலாளர் விடுதலை முன்னணியின் தலைவர் டி.அய்யாத்துரை நானுஓயா நகரில் நடைபெற்ற தொழிலாளர் விடுதலை முன்னணி, ஆசிரியர் விடுதலை முன்னணி இணைந்து நடத்திய மே தின விழாவின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்; உலக தொழிலாளர் வர்க்கம், அதிகார வர்க்கத்திடமிருந்தும் முதலாளி வர்க்கத்திடமிருந்தும் உரிமைகளை பெறுவதற்காக போராடிய போராட்டத்தில் கிடைத்த வெற்றியை கொண்டாடும் மே தினத்தின் எதிர்கால உரிமைக்கும் போராட்டத்திற்கும் திடசங்கற்பம் பூணும் நாளாகும்.

இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு 200 ஆண்டுகள் தங்களுடைய உழைப்பு மூலமாக உற்பத்தியை வருவாயை பெருக்கிக் கொடுக்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் நாட்கூலி முறையில் இருப்பது தொழிலாளர்களை அடிமைகளாக வைத்திருப்பதற்கு சமமானதாகும்.

நாட்கூலி முறையிலான கூட்டு ஒப்பந்தத்தைச் செய்து கொண்டுள்ளதால் இன்றைய வாழ்க்கை செலவு அதிகரிப்பு, விலைவாசி உயர்வு போன்ற பல்வேறு நெருக்கடிகளில் வாழ்கின்ற தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கு இந்த கூட்டு ஒப்பந்தம் முட்டுக்கட்டையாக இருக்கிறது. ஆகவே, தான் இந்த கூட்டு ஒப்பந்தத்தை இரத்துச் செய்ய வேண்டுமென்று அரசாங்கத்தைக் கோருகிறோம்.

தொழிலாளர்களை அரசாங்கத்திற்கும் பெருந்தோட்டக் கம்பனிகளுக்கும் அடகுவைத்து மே தினத்தைக் கொண்டாடும் நிலைமை பெருந்தோட்டத் தொழிற் தலைமைகளுக்கு கை வந்தகலையாகி விட்டது. இந்நிலையிலிருந்து தொழிலாளர்களை விடுவிக்க வேண்டுமானால் இவர்கள் உண்மையை உணர்ந்து ஒற்றுமையாக உரிமைக் குரல் கொடுக்க தயாராக வேண்டும்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்காக செய்யப்பட்ட அனைத்து கூட்டு ஒப்பந்தங்களும் தொழிலாளர்களுக்கு எதிரானவையாகவே இருந்தது என்பதை வரலாறு மறைக்க முடியாது.

1967 ஆம் ஆண்டு இ.தொ.கா.வும் தோட்ட முதலாளிமார்களும் செய்துகொண்ட கூட்டு ஒப்பந்தம் தொழிலாளர்களுடைய சேவைக் காலப் பணத்திற்கு முடிவு கட்டியது. அன்று அதனை எதிர்த்து போராடி வெற்றி பெற்றதாலேயே இன்று தொழிலாளர்கள் சேவைக் காலப் பணத்தையும் ஊழியர் சேமலாப நிதியையும் ஊழியர் நம்பிக்கை நிதியினையும் பெறுவதற்கு வழி ஏற்பட்டது.

ஆகவே, தொழிலாளர்களுடைய உரிமைகளை மட்டுமல்ல சம்பள உயர்வு, ஏனைய சலுகைகளை பெற வேண்டுமானால் அதிகார வர்க்கத்திற்கும் அவசர காலச் சட்டத்திற்கு கை தூக்கி அரசியல் நடத்தும் கேடு கெட்ட நிலைமைக்கு முடிவு கட்ட தொழிலாளர்கள் தயாராக வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Email this page Your Opinion Print this page
பாராளுமன்ற சம்பிரதாயங்களை மறந்தவராக எதிர்க்கட்சித் தலைவர்
பாராளுமன்ற கூட்டத் தொடர் ஒத்திவைப்புக்கு விசேட பின்னணிக் காரணம் எதுவும் இல்லை
தேர்தலில் தோல்வி ஏற்பட்டால் முகம் கொடுக்க அஞ்சியே பாராளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு
விமானியின் சாதுர்யத்தால் காப்பாற்றப்பட்ட ரணிலின் உயிர்
மியன்மார் நெருக்கடி; அரிசி கொள்வனவுக்கு தாய்லாந்துடன் இலங்கை பேச்சுவார்த்தை
பிள்ளையானுக்கு ஆதரவாக ஹெலியிலிருந்து துண்டுப் பிரசுரங்கள்
கறுக்காய்குளம் பகுதியில் கவச வாகனம் கண்ணிவெடியில் சிக்கி 9 படையினர் பலி
இலங்கை உட்பட 5 நாடுகள் மனித உரிமை பேரவையின் உறுப்பினராக தகுதியற்றவையென நிராகரிக்க வேண்டும்
சர்வாதிகாரத்தை நிலைநாட்ட அரசாங்கம் கடும் முயற்சி
கிழக்கு மாகாண சபை தேர்தலில் அரசுக்கு எதிராக வாக்களிக்க சகல மக்களும் கிளர்ந்தெழ வேண்டும்
தரம் குறைந்த அரிசியை விற்போரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த பணிப்பு
கட்டைக்காடு கிராமத்தில் இரு தமிழர் , ஒரு முஸ்லிம் கைது
இரத்தினபுரி வைத்தியசாலை தாதிகள் இன்று வேலைநிறுத்தப் போராட்டம்
கிழக்கு தேர்தல் வாக்களிப்புக்கு அரச தனியார் ஊழியர்களுக்கு சம்பளத்துடனான லீவு
இலங்கைக்கு இந்தியா ஆயுதம் வழங்குவதை நியாயப்படுத்துகிறார் விஜயகாந்த்
புத்தளத்தில் தங்கியிருந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் திருமலை அனுப்பப்பட்டதன் மர்மம்
விமல் வீரவன்ச அணியினரின் செய்தியாளர் மாநாட்டில் குழப்பம்
வவுனியா கிளைமோரில் பலியான 2 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டன
பாணந்துறை ரயிலில் குண்டுப் புரளி
பொருளியல் துறை பேராசிரியர் இராஜரட்ணம் லண்டனில் காலமானார்
பயணியைத் தாக்கிய நடத்துநர் விளக்கமறியலில்
யாழ்.பல்கலைக்கழக மாணவர் விடுதிக்கு வெளியே நேற்றிரவு கைக்குண்டு வெடிப்பு
தேர்தல் தினத்தில் வன்முறைகளில் ஈடுபடுவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு உத்தரவு
மாடியில் இருந்து யுவதி விழுந்து மரணமான சம்பவம் நீர்கொழும்பு ஆஸ்பத்திரி டாக்டருக்கு பிணை மறுப்பு
சிவனொளிபாதமலை உச்சியில் ஆலயத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு
வவுனியாவில் நேற்றிரவு துப்பாக்கிச் சூடு ஒருவர் உயிரிழப்பு; ஒருவர் படுகாயம்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐ.தே.க.வெற்றிபெறுவது உறுதி
தொழிலாளர் வர்க்கத்தை அடிமைப்படுத்தும் கூட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்ய ஒன்றுபடுவோம்
வெற்றி பெற்றாலும் தோல்வியை தழுவினாலும் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வே எனது ஒரே நிலைப்பாடு
சிங்கள மக்கள் தமிழர்களின் நண்பர்கள் இந்நாட்டின் அரசியல் யாப்பே எமது எதிரி
யாழ்.மாவட்ட சபை தேர்தல் மோசடியே தமிழ் இளைஞர் ஆயுதம் ஏந்தக் காரணம்
ஆயுதம் வைத்திருப்பதாக பிள்ளையானே கூறும் போது அரசு மட்டும் மறுப்பது ஏன்?
பிள்ளையான் குழுவின் ஆயுதங்களை களைந்து மக்களை பாதுகாப்பது அவசியம்
யாவுமே பௌத்தர்களின் இடமென்பதே ஹெலஉறுமய தேரர்களின் சித்தாந்தம்
3200 மில்லியன் ரூபா கடன் பளுவால் மிகின் விமான சேவை இடைநிறுத்தம்
இராணுவத்தின் பாரிய இழப்புகளுக்கு அரசியல் கலந்திருப்பதே காரணம்
ஆளும் கட்சியிலிருந்து ஐ.தே.க.வில் இணைந்தார்
பிரிட்டனுக்கான புதிய சங்கநாயக்கவிற்கு அலரிமாளிகையில் ஜனாதிபதி கௌரவிப்பு
சூறாவளியால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மியன்மார் மக்களுக்கு இலங்கை அனுதாபம்
தேர்தலின் பின் பொருட்கள் விலை மேலும் மோசமாக அதிகரிக்கும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com