முந்தல் பொலிஸ் பிரிவில் உள்ள கட்டைக்காடு தமிழ்க் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது ஒரு முஸ்லிம் இளைஞரும் , தமிழ்த் தம்பதியினரும் கைது செய்யப்பட்டனர்.
வாழைச்சேனையைச் சேர்ந்த இம் மூவரும் சில தினங்களுக்கு முன்னர் இங்கு வந்து உறவினர் வீட்டில் தங்கியிருந்த போதே கைது செய்யப்பட்டனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்தே இந்தத் தேடுதல் நடத்தப்பட்டதாக முந்தல் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி விஜிதசா மாசகார தெரிவித்தார். இவர்கள் மேல் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சித்திக் மஹ்தீக்கான் (27 வயது) , கனகசபை நேசராசா (25 வயது) , கணபதிப்பிள்ளை றோசா (30 வயது) ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.