Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, May 08, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
சர்வாதிகாரத்தை நிலைநாட்ட அரசாங்கம் கடும் முயற்சி
[08 - May - 2008] [Font Size - A - A - A]
*ஜே.வி.பி. கண்டனம்

ரொஷான் நாகலிங்கம்

ஜனாதிபதி ஜனநாயகத்தை மதியாது நாட்டில் தனது சர்வாதிகாரத்தை நிலைநாட்டுவதற்கு முற்படுவதாக ஜே.வி.பி.யின் செயலாளர் ரில்வின் சில்வா குற்றம்சாட்டியதுடன், அரசின் தேவைகளுக்காகவே பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் சாடினார்.

ஜே.வி.பி.நேற்று புதன்கிழமை கொழும்பு நிப்போன் ஹோட்டலில் நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர்களும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

அங்கு அவர் மேலும் பேசுகையில்;

ஜனாதிபதி நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தை எதிர்வரும் ஜூன் 5 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளார். இதேவேலையை அவர் கடந்த மாதமும் மேற்கொண்டுள்ள நிலையில் மீண்டும் மீண்டும் அதனைச் செய்வது ஜனநாயக விரோத செயலாகும்.

அதாவது கடந்த மாதம் இருநாள் பாராளுமன்றம் கூடிய நிலையில் ஒத்திவைக்கப்பட்டதுடன் இம்முறை ஒரு நாள் கூடிய பின் ஒத்திவைத்துள்ளார். மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கே பாரளுமன்றம் கூடுகின்றது. அவ்வாறான நிலையில் இச் செயற்பாட்டை ஜனாதிபதி தொடர்ச்சியாக மேற்கொள்வதை ஏற்க முடியாது.

அரசாங்கம் மேற்கொள்ளும் ஊழல், மோசடி, துஷ்பிரயோகம் மற்றும் ஜனநாயகம் விரோத செயல்குறித்து பாராளுமன்றத்தில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிப்பதிலிருந்து தப்புவதற்கு இது உதவும்.

கிழக்கில் எமது கட்சியினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் போது தாக்கப்படுகின்றனர். அதுபோல் தேர்தல் பிரசார அலுவலகங்களும் எரிக்கப்பட்டும் அடித்து நொருக்கப்பட்டுள்ளன. இந்த ஜனநாயக விரோத செயல் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க இருந்தோம். அது போல் மிகின் ஏயார் 3200 மில்லியன் நட்டமடைந்துள்ள நிலையில் அங்கு இடம்பெற்ற ஊழல் மோசடி குறித்தும் விவாதிக்கவிருந்த சமயம் அதிலிருந்து தப்புவதற்காகவே பாராளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

அவசரகாலச் சட்டம் மாதா மாதம் நீடிக்கப்படுகின்றதன் காரணமாகவே ஓரிரு நாள் பாராளுமன்றம் கூடிய பின் ஒத்திவைக்கப்படுகின்றது. இவ்வாறு ஜனாதிபதி தமது தேவைக்கு ஏற்ப பாராளுமன்றத்தை கூட்டுவதிலும் ஒத்திவைப்பதும் பாராளுமன்ற ஜனநாயகத்தை மீறும் செயலாகும்.

ஜனாதிபதி மகிந்த சிந்தனையில் நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாப்பதாக தெரிவித்துள்ள நிலையில் அரசுக்கு எதிராக யாரும் கேள்விகேட்க முடியாதவாறு சர்வாதிகார ஆட்சி நடத்த முற்படுகின்றார். இதற்கெரதிராக நாம் போராட்டங்களை நடத்தவுள்ளோம் என்றார்.

Email this page Your Opinion Print this page
பாராளுமன்ற சம்பிரதாயங்களை மறந்தவராக எதிர்க்கட்சித் தலைவர்
பாராளுமன்ற கூட்டத் தொடர் ஒத்திவைப்புக்கு விசேட பின்னணிக் காரணம் எதுவும் இல்லை
தேர்தலில் தோல்வி ஏற்பட்டால் முகம் கொடுக்க அஞ்சியே பாராளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு
விமானியின் சாதுர்யத்தால் காப்பாற்றப்பட்ட ரணிலின் உயிர்
மியன்மார் நெருக்கடி; அரிசி கொள்வனவுக்கு தாய்லாந்துடன் இலங்கை பேச்சுவார்த்தை
பிள்ளையானுக்கு ஆதரவாக ஹெலியிலிருந்து துண்டுப் பிரசுரங்கள்
கறுக்காய்குளம் பகுதியில் கவச வாகனம் கண்ணிவெடியில் சிக்கி 9 படையினர் பலி
இலங்கை உட்பட 5 நாடுகள் மனித உரிமை பேரவையின் உறுப்பினராக தகுதியற்றவையென நிராகரிக்க வேண்டும்
சர்வாதிகாரத்தை நிலைநாட்ட அரசாங்கம் கடும் முயற்சி
கிழக்கு மாகாண சபை தேர்தலில் அரசுக்கு எதிராக வாக்களிக்க சகல மக்களும் கிளர்ந்தெழ வேண்டும்
தரம் குறைந்த அரிசியை விற்போரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த பணிப்பு
கட்டைக்காடு கிராமத்தில் இரு தமிழர் , ஒரு முஸ்லிம் கைது
இரத்தினபுரி வைத்தியசாலை தாதிகள் இன்று வேலைநிறுத்தப் போராட்டம்
கிழக்கு தேர்தல் வாக்களிப்புக்கு அரச தனியார் ஊழியர்களுக்கு சம்பளத்துடனான லீவு
இலங்கைக்கு இந்தியா ஆயுதம் வழங்குவதை நியாயப்படுத்துகிறார் விஜயகாந்த்
புத்தளத்தில் தங்கியிருந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் திருமலை அனுப்பப்பட்டதன் மர்மம்
விமல் வீரவன்ச அணியினரின் செய்தியாளர் மாநாட்டில் குழப்பம்
வவுனியா கிளைமோரில் பலியான 2 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டன
பாணந்துறை ரயிலில் குண்டுப் புரளி
பொருளியல் துறை பேராசிரியர் இராஜரட்ணம் லண்டனில் காலமானார்
பயணியைத் தாக்கிய நடத்துநர் விளக்கமறியலில்
யாழ்.பல்கலைக்கழக மாணவர் விடுதிக்கு வெளியே நேற்றிரவு கைக்குண்டு வெடிப்பு
தேர்தல் தினத்தில் வன்முறைகளில் ஈடுபடுவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு உத்தரவு
மாடியில் இருந்து யுவதி விழுந்து மரணமான சம்பவம் நீர்கொழும்பு ஆஸ்பத்திரி டாக்டருக்கு பிணை மறுப்பு
சிவனொளிபாதமலை உச்சியில் ஆலயத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு
வவுனியாவில் நேற்றிரவு துப்பாக்கிச் சூடு ஒருவர் உயிரிழப்பு; ஒருவர் படுகாயம்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐ.தே.க.வெற்றிபெறுவது உறுதி
தொழிலாளர் வர்க்கத்தை அடிமைப்படுத்தும் கூட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்ய ஒன்றுபடுவோம்
வெற்றி பெற்றாலும் தோல்வியை தழுவினாலும் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வே எனது ஒரே நிலைப்பாடு
சிங்கள மக்கள் தமிழர்களின் நண்பர்கள் இந்நாட்டின் அரசியல் யாப்பே எமது எதிரி
யாழ்.மாவட்ட சபை தேர்தல் மோசடியே தமிழ் இளைஞர் ஆயுதம் ஏந்தக் காரணம்
ஆயுதம் வைத்திருப்பதாக பிள்ளையானே கூறும் போது அரசு மட்டும் மறுப்பது ஏன்?
பிள்ளையான் குழுவின் ஆயுதங்களை களைந்து மக்களை பாதுகாப்பது அவசியம்
யாவுமே பௌத்தர்களின் இடமென்பதே ஹெலஉறுமய தேரர்களின் சித்தாந்தம்
3200 மில்லியன் ரூபா கடன் பளுவால் மிகின் விமான சேவை இடைநிறுத்தம்
இராணுவத்தின் பாரிய இழப்புகளுக்கு அரசியல் கலந்திருப்பதே காரணம்
ஆளும் கட்சியிலிருந்து ஐ.தே.க.வில் இணைந்தார்
பிரிட்டனுக்கான புதிய சங்கநாயக்கவிற்கு அலரிமாளிகையில் ஜனாதிபதி கௌரவிப்பு
சூறாவளியால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மியன்மார் மக்களுக்கு இலங்கை அனுதாபம்
தேர்தலின் பின் பொருட்கள் விலை மேலும் மோசமாக அதிகரிக்கும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com