Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, May 08, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
பாராளுமன்ற சம்பிரதாயங்களை மறந்தவராக எதிர்க்கட்சித் தலைவர்
[08 - May - 2008] [Font Size - A - A - A]
*வெட்கப்படுவதாகக் கூறுகிறார் பசில்

அரசியலமைப்பில் ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தியே பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதென்பதை எதிரணியினருக்கு ஞாபகமூட்ட விரும்புவதாகத் தெரிவித்த ஜனாதிபதியின் அரசியல் ஆலோசகரும் எம்.பி.யுமான பசில் ராஜபக்ஷ ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற சம்பிரதாயங்களை மறந்தவராகக் கருத்துகளை வெளியிடுவது குறித்துத் தான் வெட்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது;

பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டமை சாதாரண விடயம். கிழக்குத் தேர்தல், வெசாக் தின நிகழ்வுகளே இதற்கு அடிப்படைக் காரணம். இதனைவிட எதுவுமேயில்லை. இதை பொறுப்புடன் கூறுகிறேன்.

தற்போதுள்ள அரசியலமைப்பை ஏற்படுத்தியவர்கள் ஐ.தே.க.வினரே. அவர்கள் ஜனாதிபதிக்களித்த அதிகாரத்தினை எனது சகோதரர் பயன்படுத்தினார். இங்கு யதார்த்தம் இதுதான். நாங்கள் அரசியலமைப்பு விதிகளை மீறவில்லை. சிலர் தமது அரசியல் இருப்புக்காக எதையும் கூற முயலுவது நாகரிகமானதல்ல.

எமது அரசாங்கம் ஜனநாயகத்தை நேசிக்கிறது. கடந்த கால ஐ.தே.க. தலைவர்கள் போன்று நாம் செயற்படவில்லை. ஐ.தே.க. தலைவர்கள் எத்தனை முறை பாராளுமன்றத்தை ஒத்திவைத்தார்களென்ற விபரம் எம்மிடமுள்ளது.

ஏன் இவர்கள் பதற்றமடைகின்றனர் என்பதை எம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை. அரசாங்கம் எத்தகைய சட்டவிரோத செயற்பாட்டிலும் ஈடுபடவில்லை. அதற்கான தேவை எமக்கில்லை.

பாராளுமன்ற ஒத்திவைப்பை எமது அரசாங்கத்தின் முடிவாக ரணில் கருதுகிறார். நீங்கள் பொறுத்திருந்து பாருங்கள் . மாகாணத் தேர்தல் முடிவடைந்த பின் எத்தனைபேர் எம்பக்கம் வருகிறார்களென்று? ஆம், இது நிச்சயம் நடைபெறும். பாராளுமன்ற சம்பிரதாயங்களை மறந்து பேசும் ரணிலுக்காக நான் வெட்கப்படுகிறேன்.

அமைச்சரவை மாற்றம் இக்காலப்பகுதியில் சாத்தியமில்லை. சில அமைச்சுகள் வெற்றிடமாகவுள்ளன. அவற்றுக்கு புதிய முகங்களை விரைவில் எதிர்பார்க்கலாம் என்றார்.

Email this page Your Opinion Print this page
பாராளுமன்ற சம்பிரதாயங்களை மறந்தவராக எதிர்க்கட்சித் தலைவர்
பாராளுமன்ற கூட்டத் தொடர் ஒத்திவைப்புக்கு விசேட பின்னணிக் காரணம் எதுவும் இல்லை
தேர்தலில் தோல்வி ஏற்பட்டால் முகம் கொடுக்க அஞ்சியே பாராளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு
விமானியின் சாதுர்யத்தால் காப்பாற்றப்பட்ட ரணிலின் உயிர்
மியன்மார் நெருக்கடி; அரிசி கொள்வனவுக்கு தாய்லாந்துடன் இலங்கை பேச்சுவார்த்தை
பிள்ளையானுக்கு ஆதரவாக ஹெலியிலிருந்து துண்டுப் பிரசுரங்கள்
கறுக்காய்குளம் பகுதியில் கவச வாகனம் கண்ணிவெடியில் சிக்கி 9 படையினர் பலி
இலங்கை உட்பட 5 நாடுகள் மனித உரிமை பேரவையின் உறுப்பினராக தகுதியற்றவையென நிராகரிக்க வேண்டும்
சர்வாதிகாரத்தை நிலைநாட்ட அரசாங்கம் கடும் முயற்சி
கிழக்கு மாகாண சபை தேர்தலில் அரசுக்கு எதிராக வாக்களிக்க சகல மக்களும் கிளர்ந்தெழ வேண்டும்
தரம் குறைந்த அரிசியை விற்போரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த பணிப்பு
கட்டைக்காடு கிராமத்தில் இரு தமிழர் , ஒரு முஸ்லிம் கைது
இரத்தினபுரி வைத்தியசாலை தாதிகள் இன்று வேலைநிறுத்தப் போராட்டம்
கிழக்கு தேர்தல் வாக்களிப்புக்கு அரச தனியார் ஊழியர்களுக்கு சம்பளத்துடனான லீவு
இலங்கைக்கு இந்தியா ஆயுதம் வழங்குவதை நியாயப்படுத்துகிறார் விஜயகாந்த்
புத்தளத்தில் தங்கியிருந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் திருமலை அனுப்பப்பட்டதன் மர்மம்
விமல் வீரவன்ச அணியினரின் செய்தியாளர் மாநாட்டில் குழப்பம்
வவுனியா கிளைமோரில் பலியான 2 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டன
பாணந்துறை ரயிலில் குண்டுப் புரளி
பொருளியல் துறை பேராசிரியர் இராஜரட்ணம் லண்டனில் காலமானார்
பயணியைத் தாக்கிய நடத்துநர் விளக்கமறியலில்
யாழ்.பல்கலைக்கழக மாணவர் விடுதிக்கு வெளியே நேற்றிரவு கைக்குண்டு வெடிப்பு
தேர்தல் தினத்தில் வன்முறைகளில் ஈடுபடுவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு உத்தரவு
மாடியில் இருந்து யுவதி விழுந்து மரணமான சம்பவம் நீர்கொழும்பு ஆஸ்பத்திரி டாக்டருக்கு பிணை மறுப்பு
சிவனொளிபாதமலை உச்சியில் ஆலயத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு
வவுனியாவில் நேற்றிரவு துப்பாக்கிச் சூடு ஒருவர் உயிரிழப்பு; ஒருவர் படுகாயம்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐ.தே.க.வெற்றிபெறுவது உறுதி
தொழிலாளர் வர்க்கத்தை அடிமைப்படுத்தும் கூட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்ய ஒன்றுபடுவோம்
வெற்றி பெற்றாலும் தோல்வியை தழுவினாலும் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வே எனது ஒரே நிலைப்பாடு
சிங்கள மக்கள் தமிழர்களின் நண்பர்கள் இந்நாட்டின் அரசியல் யாப்பே எமது எதிரி
யாழ்.மாவட்ட சபை தேர்தல் மோசடியே தமிழ் இளைஞர் ஆயுதம் ஏந்தக் காரணம்
ஆயுதம் வைத்திருப்பதாக பிள்ளையானே கூறும் போது அரசு மட்டும் மறுப்பது ஏன்?
பிள்ளையான் குழுவின் ஆயுதங்களை களைந்து மக்களை பாதுகாப்பது அவசியம்
யாவுமே பௌத்தர்களின் இடமென்பதே ஹெலஉறுமய தேரர்களின் சித்தாந்தம்
3200 மில்லியன் ரூபா கடன் பளுவால் மிகின் விமான சேவை இடைநிறுத்தம்
இராணுவத்தின் பாரிய இழப்புகளுக்கு அரசியல் கலந்திருப்பதே காரணம்
ஆளும் கட்சியிலிருந்து ஐ.தே.க.வில் இணைந்தார்
பிரிட்டனுக்கான புதிய சங்கநாயக்கவிற்கு அலரிமாளிகையில் ஜனாதிபதி கௌரவிப்பு
சூறாவளியால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மியன்மார் மக்களுக்கு இலங்கை அனுதாபம்
தேர்தலின் பின் பொருட்கள் விலை மேலும் மோசமாக அதிகரிக்கும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com