Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, May 09, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Foreign News
மியன்மாரில் பலியானோர் தொகை ஒரு இலட்சத்தை தாண்டலாம் என்கிறார் அமெரிக்கத் தூதுவர்
[09 - May - 2008] [Font Size - A - A - A]
மியன்மாரை தாக்கிய சூறாவளியில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகியிருக்கலாமென கருதப்படுவதாக அமெரிக்க இராஜ தந்திரியொருவர் தெரிவித்துள்ளார்.

ஜராவட்டி கழிமுகப் பகுதியில் 100,000 இற்கும் அதிகமானோர் பலியாகியிருக்கலாம் என்பதற்கான தகவல்கள் தமக்கு கிடைத்துள்ளதாக மியன்மாரிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் அநர்த்த விவகாரங்களுக்கான பொறுப்பதிகாரி ஷாரி வில்லரோஸா தெரிவித்துள்ளார். மேலும், அவர் தெரிவிக்கையில்;

இது உறுதிப்படுத்தப்பட்ட தொகையல்ல. ஆனால், சர்வதேச தன்னார்வ அமைப்புகளின் தகவல்களின் அடிப்படையில் இது மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அண்மையில் மியன்மார் அரசு மேற்கொண்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் இது 70,000 ஆக உயர்ந்துள்ளதெனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சர்வதேச ரீதியிலான தன்னார்வ அமைப்புகள் மியன்மாருக்குள் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை இராணுவ ஆட்சியாளர்கள் தளர்த்த வேண்டுமென உலக நாடுகள் கடும் அழுத்தம் கொடுத்து வருகின்றன.

இந்நிலையில், மியன்மாருக்குள் தரையிறங்குவதற்கு அனுமதி வழங்கப்படாமையால் அத்தியாவசியப் பொருட்களை காவிச் சென்ற தமது விமானங்கள் மியன்மாருக்குள் நுழைய முடியாமல் இருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

நிலைமை மேலும், மோசமடைவதற்கு முன்னர் நிவாரணப் பொருட்களைக் கொண்டு வரும் விமானங்களை நாட்டுக்குள் அனுமதிக்கும் படி மியன்மார் அரசை ஆசியான் வலியுறுத்தியுள்ளது.

சில பகுதிகளில் தற்போதும் உடல்கள் சிதறுண்டு கிடப்பதாகவும் உயர் பிழைத்த மக்கள் உணவுக்கும் குடிநீருக்கும் போராடுவதாகவும் அங்கு பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வ பணியாளர் தெரிவிக்கின்றனர்.

10 இலட்சத்திற்கும் அதிகமானோர் வீடுகளை இழந்திருப்பதுடன் குடியிருப்பு பகுதிகளில் தொடர்ந்தும் வெள்ள நீர் தேங்கியிருப்பதால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.

மியன்மார் அதிகாரிகளின் அனுமதிக்காக உயர் சத்துக்களடங்கிய பிஸ்கட்டுகளைக் கொண்ட விமானங்கள் பாங்கொக், டாக்கா விமான நிலையங்களில் காத்திருப்பதாக உலக உணவு நிகழ்ச்சித் திட்டத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Email this page Your Opinion Print this page
கோர்டன் பிறவுண் பதவி விலக வேண்டுமென பெரும்பாலான பிரிட்டிஷ் மக்கள் விருப்பம்
முக்கியத்துவம் வாய்ந்த உடன்படிக்கையில் ஜப்பானும் சீனாவும் கைச்சாத்து
நேபாள மன்னருடன் சந்திப்புகளை நடத்தவுள்ளதாக மாவோயிஸ்ட் தலைவர் தெரிவிப்பு
மியன்மாரில் பலியானோர் தொகை ஒரு இலட்சத்தை தாண்டலாம் என்கிறார் அமெரிக்கத் தூதுவர்
இடைத்தேர்தலில் நவாஷ் போட்டியிடாமைக்கு பெனாசிர் கட்சியின் அணுகுமுறையே காரணம்
இடைத் தேர்தல் ஒத்திவைப்பை இரத்து செய்யுமாறு தேர்தல் ஆணையகத்திற்கு பாகிஸ்தான் அரசு வேண்டுகோள்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com