சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியும், மோட்டார் சைக்கிளொன்றும் நேருக்கு நேராக மோதிக் கொண்டதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இராணுவ வீரரொருவர் ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளார்.
புதன்கிழமை தம்பகல்ல என்ற இடத்தில் இடம் பெற்ற இச்சம்பவத்தில் ஆர். ஏ. சமிந்தரட்ன (வயது23 ) என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்.
இவ் விபத்து குறித்து தம்பகல்ல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சந்தன பஸ்நாயக்க விசாரணைகளை மேற்கொண்டதுடன் சீமெந்து ஏற்றிச் சென்ற சாரதியைக் கைது செய்துள்ளார்.
பனாகொடை இராணுவ முகாமில் பயிற்சி பெற்ற மேற்படி இராணுவ வீரர் விடுமுறையில் வீடு வந்து கொண்டிருந்த போதே இச்சம்பவம் ஏற்பட்டதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது.