Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, May 09, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
கிழக்குத் தேர்தல் நீதி, நேர்மையான முறையில் இடம்பெறபோவதில்லை
[09 - May - 2008] [Font Size - A - A - A]
* பவ்ரல் கூறுகிறது

யோ.நிமல்ராஜ்

கிழக்குமாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாத நிலையில் நாளை சனிக்கிழமை இடம்பெறவுள்ள வாக்களிப்பானது நீதி, நேர்மையானதாக இருக்காதென பவ்ரல் தெரிவித்துள்ளது.

சுதந்திரமான முறையில் பிரசாரம் செய்வதற்கான சூழ்நிலை அங்கு இருக்கவில்லை எனவும் இதுவரை வன்முறைகள் தொடர்பாக61 முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

இதுதொடர்பாக பவ்ரல் மேலும் தெரிவித்திருப்பதாவது;

கிழக்குத் தேர்தல் தொடர்பாக பவ்ரல் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

கிழக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் 9 இலட்சத்து 82 ஆயிரத்து 721 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் கிழக்கு மாகாணத்திலுள்ள சில துணை ஆயுதக் குழுக்கள் அங்கு மிகவும் பலம்பொருந்தியனவாக உள்ளதென்பது சில விமர்சகர்களின் கருத்தாகவுள்ளது.

இவ் ஆயுதம் தாங்கிய துணைக்குழுக்களின் செல்வாக்கு தோற்றப்பாடற்ற நிலையில், மக்கள் மனதில் அச்சத்தையும் ஐயப்பாட்டையும் ஏற்படுத்துவதே இந்நிலையின் விளைவாகும்.

இத்தகைய காரணங்களால் பயமுற்ற நிலையிலேயே கிழக்குவாழ் மக்கள் தேர்தலை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுவரையில் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக 60 வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

அவற்றில் இரு மனிதப் படுகொலைகள், ஒரு ஆட்கடத்தல், மூன்று குண்டு வெடிப்பு, 13 தாக்குதல் சம்பவங்கள், ஒரு கர்த்தால், மூன்று தடவை சொத்துக்கள் தாக்கப்பட்டமை, ஒன்பது கொலை அச்சுறுத்தல்கள், 22 தடவை அரச சொத்துகளை முறைகேடாகப் பயன்படுத்தியமை மற்றும் ஆறு தடவைகள் அதிகார துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளமை என்பனவடங்கும்.

இவற்றின் மூலம் அரசியல் மற்றும் அதிகாரமென்பன முறைகேடான விதத்தில் பயன்படுத்தப்படுகின்றதென்பதே வெளிப்படை உண்மையாகும்.

அத்துடன் அரசிற்கு சொந்தமான வானொலி சேவைகள் இரண்டிலும் அரசின் தொலைக்காட்சி சேவை ஒன்றிலும் கிழக்குத் தேர்தல் தொடர்பான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன், அரசுக்கு சொந்தமான ஒன்பது வாகனங்கள் பல்வேறு கட்சிகளால் தமது தேர்தல் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கிழக்குத் தேர்தலில் 19 வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் நடமாடும் பணியில் ஈடுபடும் அதேநேரம், ஒருவாக்குச் சாவடிக்கு இரு கண்காணிப்பாளர்கள் என்ற விகிதாசார அடிப்படையில் 2144 கண்காணிப்பாளர்கள் கடமையில் ஈடுபடவுள்ளனர்.

இவ்வாறான சூழ்நிலைகளில் கடந்த 28, 29 ஆகிய திகதிகளில் நடைபெற்ற தபால் மூல வாக்கெடுப்பில் எண்பது வீதமானோர் வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களித்தனர்.

ஆகவே எதிர்வரும் பத்தாம் திகதி நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தல் எந்தவிதமான மோசடிகளுமின்றி நடைபெற வேண்டுமென்பதே பவ்ரல் அமைப்பின் பிரார்த்தனையாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Email this page Your Opinion Print this page
ஐ.நா.செயலாளர் நாயகத்துடன் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு
ஆங்கிலம் தெரியாதவர்கள் பிரிட்டனுக்குள் நுழைய தடை
தாதியர் வேலைநிறுத்தத்தால் இரத்தினபுரி ஆஸ்பத்திரியில் 3 நோயாளர்கள் மரணம்
வவுனியா செக்கடிபுலவில் வர்த்தகர் சுட்டுக்கொலை
நாளைய தேர்தல் குறித்து கட்சிகளின் பிரதிநிதிகள் எதிர்பார்ப்பது என்ன?
திருமலை மாவட்ட தேர்தலை ஒத்திவைக்க கோரும் மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிப்பு
பேருவளை துவக்குச்சூட்டில் இருவர் பலி; இருவர் படுகாயம்
தோட்ட உரிமையாளரினால் தாக்கப்பட்ட தமிழ் மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு
கிழக்கு செல்வதற்கு வெளிநாட்டு ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு
சமரசிங்க தலைமையிலான குழு மே 11 இல் ஜெனீவா பயணம்
கொத்மலையில் கைதான இருவரில் ஒருவர் மரணம்
கிழக்கு நிரந்தரமாகவே பிரிந்திருப்பதா? இல்லையா? சர்வஜன வாக்கெடுப்பே நாளைய தேர்தல்
மனிதாபிமானச் செயற்பாடுகள் ஊடாக நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்வோம்
வவுனியா-மதவாச்சி ரயில் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இணக்கம்
பாதுகாப்பை அகற்ற முயற்சி விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு
ஆடை ஏற்றுமதிக் கோட்டாவை புதுப்பிக்க அரசு தவறினால் பாரிய பொருளாதார நெருக்கடி
தடுத்துவைக்கப்பட்டுள்ள 19 மலையக இளைஞர்களையும் விடுவிக்க ஏற்பாடு
தேடுதலில் கைதானவர்களை விடுவித்த பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு நன்றி தெரிவிப்பு
ஜனநாயக விரோத அரசுக்கு சாட்டையடி கொடுக்க கிழக்கு மக்கள் ஐ.தே.க.வுக்கு வாக்களிக்க வேண்டும்
கணவனை இழந்த பட்டதாரி குடும்பப் பெண் வெள்ளை வானில் சென்றோரால் கைது
கண்டியில் பிரபல பாடசாலையொன்றின் அதிபருக்கு விஸா நீடிப்பு வழங்க அரசு மறுப்பு
தாதிகள் பணிப்பகிஷ்கரிப்பினால் ஆபத்தான நிலையில் நோயாளிகள்
2,171 அரச ஊழியர்கள் நாளை திருமலை மாவட்ட தேர்தல் கடமையில்
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையால் அடுத்த மாதங்களில் தட்டுப்பாடு ஏற்படும்
கதிர்காமம் முருகன் ஆலய திருவிழா சகல ஏற்பாடுகளும் பூர்த்தி
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் மனித உரிமைகள் மேம்பட்ட நிலையில்
மூதூர் நகரை மீட்கச் சென்ற கொமாண்டோ அணியுடன் ஊர்காவல் படை வீரரும் சென்றார்
கிழக்குத் தேர்தல் நீதி, நேர்மையான முறையில் இடம்பெறபோவதில்லை
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் சிறந்த தீர்ப்பை வழங்குவர்; ஹக்கீம் நம்பிக்கை
கிழக்கை கோரப்பிடிக்குள் வைத்திருக்கும் அரசின் சூழ்ச்சித் திட்டத்தை மக்கள் தகர்த்தெறிவார்கள்
அபிவிருத்தி மாயையைக்காட்டி மக்களின் வாக்கை சூறையாட முஸ்லிம் அமைச்சர்கள் முண்டியடிப்பு
`முஸ்லிம் காங்கிரஸின் தலைமையை மாற்ற கிழக்குத் தேர்தல் நல்ல சந்தர்ப்பம்'
தமிழர்களின் 25 வருட ஆயுதப் போராட்டம் தோல்வி ஒரு அங்குல நிலத்தைக் கூட அவர்கள் பிடிக்கவில்லை
தம்பகல்ல வாகன விபத்தில் இராணுவ வீரர் பலி
ஊவாவில் இடம்பெறும் ஊழல் மோசடிகளை இல்லாதொழிப்பதே எனது நோக்கம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com