Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, May 09, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
ஜனநாயக விரோத அரசுக்கு சாட்டையடி கொடுக்க கிழக்கு மக்கள் ஐ.தே.க.வுக்கு வாக்களிக்க வேண்டும்
[09 - May - 2008] [Font Size - A - A - A]
* தேசிய புத்திஜீவிகள் சபை வேண்டுகோள்

ரொஷான் நாகலிங்கம்

கிழக்கு மக்கள் தமது வாக்குகளை சரியாக உபயோகித்து ஐ.தே.கட்சியை வெற்றிபெறச் செய்து நாட்டில் ஜனநாயகத்தை சிதைக்கும் அரசுக்கு சாட்டையடி கொடுக்க வேண்டுமென தேசிய புத்திஜீவிகள் சபை தெரிவித்துள்ளது.

நேற்று வியாழக்கிழமை பொரளையிலுள்ள மகா விஜய மன்றத்தில் நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டிலேயே அதன் செயலாளர் சுஜித் அக்கரவத்த மற்றும் அதன் உறுப்பினர்களான ஒலிபர் அபயநாயக்க, விஜயதுங்க, முன்னாள் மேஜர் ஜெனரல் வசந்த பெரேரா, எட்வின் வீரசிறி ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

செயலாளர் சுஜித் அக்கரவத்த

இதில் தேசிய புத்திஜீவிகள் சபை செயலாளர் சுஜித் அக்கரவத்த உரையாற்றுகையில்;

"இந்த அரசாங்கம் அடிப்படை மனித தேவைகளை கணக்கில் எடுக்காமையால் மக்கள், வாழ்க்கைச் சுமையை தாங்க முடியாது அல்லாடுகின்ற நிலையில், தற்போது மக்கள் விரோத செயற்பாட்டிலும் அரசு இறங்கியுள்ளது.

அரந்தலாவையில் பிக்குகளையும் பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்களையும் படுகொலை செய்த பயங்கரவாதிகளுடன் அரசாங்கம் தேர்தலுக்காக கூட்டமைத்தமையானது மக்கள் விரோத செயலாகும்.

பயங்கரவாதிகளைக் கொண்டு கிழக்கு மக்களை பயமுறுத்தி வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவதற்காகவே அரசு அவர்களோடு இணைந்துள்ளது. அம்மக்கள் தமக்குரிய பிரதிநிதிகளை தெரிந்தெடுப்பதை தடுக்கும் இச்செயற்பாடு அவர்களது உரிமைகளை பறிக்கும் செயலாகும். இந்நிலையில், மக்கள் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கு தமது வாக்குகளை சரியான முறையில் பயன்படுத்த வேண்டுமென நாம் கோருகின்றோம்" என்றார்.

ஒலிவர் அபயநாயக்க

இங்கு அதன் உறுப்பினர் ஒலிபர் அபயநாயக்க பேசுகையில்;

"வரலாற்றில் இடம்பெறாத வகையில் கிழக்கில் தேர்தல் இடம்பெறப்போகின்றது. தேர்தல் பிரசாரத்துக்காக அரச வாகனங்களை அரசாங்கம் பயன்படுத்துகின்ற நிலையில், அமைச்சர் நவீன் திஸாநாயக்க, வாகனங்களை இவ்வாறு பயன்படுத்துவது வழமையானது. எனது அப்பா கூட இதை செய்துள்ளார்' எனத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரொருவரே இவ்வாறு கூறுவதாயின் அரசுக்குள் துஷ்பிரயோகம் இடம்பெறுவதை அவர் அனுமதிக்கின்றாரா? ஊழல் மோசடிகள் அரசுக்குள் மட்டுமல்ல நாடு முழுவதும் வியாபித்துள்ளது.

கிழக்கு மக்கள் தமது பிரதிநிதிகளை தெரிவுசெய்வதற்கான உரிமையுள்ள நிலையில், ஆயுதக் குழுவைக் கொண்டு அம்மக்களின் வாக்குகளை பறிப்பதற்கான நடவடிக்கையில் அரசு தற்போது இறங்கியுள்ளது. இது அவர்களின் உரிமையை மீறும் செயலாகும்.

எனவே, மக்கள் தமது உரிமையை பாதுகாக்கும் முகமாக அரசுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்து ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு மக்கள் தயாராவிருக்கின்றனரென்பதை அரசுக்கு உணர்த்தும் வகையில் சாட்டை அடிகொடுக்க வேண்டு"மெனத் தெரிவித்தார்.

விஜயதுங்க

"பாராளுமன்றத்தில் எதிர்வரும் நாட்களில் கிழக்கு மக்கள் பிரச்சினை மற்றும் மிகின் எயார் நட்டம் தொடர்பில் விவாதிக்கவிருந்த நிலையில், இதற்கு பதிலளிப்பதை தவிர்ப்பதற்காக பாராளுமன்றத்தை ஜனாதிபதி கடந்த செவ்வாய்க்கிழமை ஒத்திவைத்துள்ளார்.

குறிப்பாக கிழக்கு தேர்தலில் இடம்பெறுகின்ற துஷ்பிரயோகம் மற்றும் மிகின் எயாரில் இடம்பெற்ற ஊழல் மோசடி என்பவற்றுக்கு பதிலளிக்க வேண்டியதை தவிர்ப்பதற்காகவே ஜனாதிபதி ஒத்திவைத்தமையானது ஜனநாயக விரோத செயலாகும். அதுபோல, 17 ஆவது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துமாறு தொழில்சார் வல்லுநர்கள் சங்கம் தெரிவித்திருந்ததுடன், அதனை நடைமுறைப் படுத்தாமை ஜனநாயக விரோத செயலெனவும் சுட்டிக்காட்டியுள்ளது. இதுபோல் சகலரும் அதனை செய்யுமாறு அரசுக்கு வேண்டுகோள் விடுக்கையில் தமது நலனுக்காக அதனை மேற்கொள்ளாதுள்ளது.

கடந்த வருடம் கொழும்பிலிருந்த தமிழ் மக்களை இந்த அரசாங்கம் பஸ்களில் ஏற்றி வடக்கு நோக்கி அனுப்பியது. இதனை நீதிமன்றம் நாட்டில் மக்கள் எங்கும் வாழும் உரிமை உள்ளது என சுட்டிக்காட்டித் தடுத்தது.

இச்செயல் கொழும்பைப் பாதுகாக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய அரசாங்கம் அவர்களை விரட்டியமை ஜனநாயக விரோத செயலாகும்.

எனவே, நாட்டில் ஜனநாயகத்தை மதிக்காத அரசாங்கத்தை எதிர்த்து கிழக்கு மக்கள் தமது வாக்குகளை செலுத்த வேண்டு"மென்றார்.

மேஜர் ஜெனரல் வசந்த பெரேரா

"இந்த அரசாங்கம் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக யுத்தத்தை மேற்கொள்வதாக கூறியிருக்கின்ற நிலையில், மக்களை பாதுகாக்கத் தவறியுள்ளது. இன்று யுத்தம் இடம்பெறும் பகுதிகளில் மட்டுமல்லாது , நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் குண்டுகள் வெடிப்பதனால் மக்கள் மரணிப்பதுடன், காயமடைகின்றனர்.

இந்த அரசு மக்களை பாதுகாக்கும் நோக்குடன் யுத்தம் மேற்கொள்ளாது அரசியல் நோக்கத்துடன் மேற்கொள்வதே மக்கள் பலியாவதற்கு காரணமென" குற்றம் சாட்டினார்.

ஆரியசிங்க

"பிரபல பாடகர் ஆரியசிங்க பேசுகையில்;

இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த அரசு யுத்தத்தை முன்னெடுப்பதால் சிறுபான்மை மக்களின் கலைகள் ஒடுக்கப்பட்டுள்ளது. முன்னர் சந்திரிகா ஆட்சியில் இருந்த சமயம் சிறுபான்மை மக்களின் கலைகளை பாதுகாத்ததுடன் இனங்களுக்கிடையிலான உறவும் இருந்தது.

இந்த அரசு இனவாத யுத்தத்தை முன்னெடுப்பதால் நாட்டிலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடையே ஒற்றுமை சிதைவுறுவதால் யுத்தத்தை நிறுத்த வேண்டுமென நாம் கோருகின்றோம்" என்றார்.

Email this page Your Opinion Print this page
ஐ.நா.செயலாளர் நாயகத்துடன் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு
ஆங்கிலம் தெரியாதவர்கள் பிரிட்டனுக்குள் நுழைய தடை
தாதியர் வேலைநிறுத்தத்தால் இரத்தினபுரி ஆஸ்பத்திரியில் 3 நோயாளர்கள் மரணம்
வவுனியா செக்கடிபுலவில் வர்த்தகர் சுட்டுக்கொலை
நாளைய தேர்தல் குறித்து கட்சிகளின் பிரதிநிதிகள் எதிர்பார்ப்பது என்ன?
திருமலை மாவட்ட தேர்தலை ஒத்திவைக்க கோரும் மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிப்பு
பேருவளை துவக்குச்சூட்டில் இருவர் பலி; இருவர் படுகாயம்
தோட்ட உரிமையாளரினால் தாக்கப்பட்ட தமிழ் மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு
கிழக்கு செல்வதற்கு வெளிநாட்டு ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு
சமரசிங்க தலைமையிலான குழு மே 11 இல் ஜெனீவா பயணம்
கொத்மலையில் கைதான இருவரில் ஒருவர் மரணம்
கிழக்கு நிரந்தரமாகவே பிரிந்திருப்பதா? இல்லையா? சர்வஜன வாக்கெடுப்பே நாளைய தேர்தல்
மனிதாபிமானச் செயற்பாடுகள் ஊடாக நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்வோம்
வவுனியா-மதவாச்சி ரயில் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இணக்கம்
பாதுகாப்பை அகற்ற முயற்சி விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு
ஆடை ஏற்றுமதிக் கோட்டாவை புதுப்பிக்க அரசு தவறினால் பாரிய பொருளாதார நெருக்கடி
தடுத்துவைக்கப்பட்டுள்ள 19 மலையக இளைஞர்களையும் விடுவிக்க ஏற்பாடு
தேடுதலில் கைதானவர்களை விடுவித்த பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு நன்றி தெரிவிப்பு
ஜனநாயக விரோத அரசுக்கு சாட்டையடி கொடுக்க கிழக்கு மக்கள் ஐ.தே.க.வுக்கு வாக்களிக்க வேண்டும்
கணவனை இழந்த பட்டதாரி குடும்பப் பெண் வெள்ளை வானில் சென்றோரால் கைது
கண்டியில் பிரபல பாடசாலையொன்றின் அதிபருக்கு விஸா நீடிப்பு வழங்க அரசு மறுப்பு
தாதிகள் பணிப்பகிஷ்கரிப்பினால் ஆபத்தான நிலையில் நோயாளிகள்
2,171 அரச ஊழியர்கள் நாளை திருமலை மாவட்ட தேர்தல் கடமையில்
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையால் அடுத்த மாதங்களில் தட்டுப்பாடு ஏற்படும்
கதிர்காமம் முருகன் ஆலய திருவிழா சகல ஏற்பாடுகளும் பூர்த்தி
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் மனித உரிமைகள் மேம்பட்ட நிலையில்
மூதூர் நகரை மீட்கச் சென்ற கொமாண்டோ அணியுடன் ஊர்காவல் படை வீரரும் சென்றார்
கிழக்குத் தேர்தல் நீதி, நேர்மையான முறையில் இடம்பெறபோவதில்லை
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் சிறந்த தீர்ப்பை வழங்குவர்; ஹக்கீம் நம்பிக்கை
கிழக்கை கோரப்பிடிக்குள் வைத்திருக்கும் அரசின் சூழ்ச்சித் திட்டத்தை மக்கள் தகர்த்தெறிவார்கள்
அபிவிருத்தி மாயையைக்காட்டி மக்களின் வாக்கை சூறையாட முஸ்லிம் அமைச்சர்கள் முண்டியடிப்பு
`முஸ்லிம் காங்கிரஸின் தலைமையை மாற்ற கிழக்குத் தேர்தல் நல்ல சந்தர்ப்பம்'
தமிழர்களின் 25 வருட ஆயுதப் போராட்டம் தோல்வி ஒரு அங்குல நிலத்தைக் கூட அவர்கள் பிடிக்கவில்லை
தம்பகல்ல வாகன விபத்தில் இராணுவ வீரர் பலி
ஊவாவில் இடம்பெறும் ஊழல் மோசடிகளை இல்லாதொழிப்பதே எனது நோக்கம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com