Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, May 09, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
ஆடை ஏற்றுமதிக் கோட்டாவை புதுப்பிக்க அரசு தவறினால் பாரிய பொருளாதார நெருக்கடி
[09 - May - 2008] [Font Size - A - A - A]
* எச்சரிக்கிறார் ரணில்

-எம்.ஏ.எம்.நிலாம்-

ஆடை ஏற்றுமதிக் கோட்டாவை புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ளத் தவறினால் எமது நாடு இவ்வருட இறுதியுடன் வெளிநாட்டு சந்தைவாய்ப்பை இழந்துவிடும் எனத் தெரிவித்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இதனால் பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்படலாமெனவும் எச்சரித்துள்ளார்.

செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை இவ்வருடத்துடன் காலாவதியாகும் பட்சத்தில் எமது நாட்டுக்கான சர்வதேசத்தின் பொருளாதாரக் கதவுகளும் மூடப்பட்டுவிடுமென ரணில் விக்கிரமசிங்க எதிர்வு கூறினார்.

நாட்டின் பொருளாதார விடயத்தில் எவரும் அரசியல் நிகழ்ச்சி நிரலின் கீழ் நின்று செயற்பட முனையக்கூடாதெனவும் எதிர்க்கட்சித்தலைவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோக பூர்வ இல்லத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஐக்கிய லக்வனிதா முன்னணியின் கொழும்பு மாவட்ட அமைப்புக்குழுவினரின் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் தமதுரையில் கூறியதாவது :-

"நாடு இன்று பாரியதொரு பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கின்றது. என்னதான் புள்ளிவிபரங்களை காட்ட முனைந்தாலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி படுமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் நிலைமை பின்னடைவையே கண்டுகொண்டிருக்கின்றது.

1977 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக்கட்சி நாட்டின் அதிகாரத்தைப் பொறுப்பேற்றதும் முதலில் மேற்கொண்ட பணி உள்நாட்டுக்கு சர்வதேச பொருளாதாரக் கதவுகளை திறந்துவிட்டதுதான். தேயிலை, இறப்பர், தேங்காய் போன்றவற்றின் மூலம் நாட்டின் ஸ்திரமான பொருளாதாரத்தைத் தக்கவைப்பது கடினமான காரியம் என்பதை உணர்ந்ததாலேயே திறந்த பொருளாதாரக் கொள்கையை நாம் அறிமுகப்படுத்தினோம்.

இதனையடுத்து ஏற்றுமதி வர்த்தகத்தை ஊக்குவிக்கும் பொருட்டு பல நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்தது. அதில் பிரதானமானதுதான் தைத்த ஆடைகளை ஏற்றுமதி செய்வதாகும். சர்வதேச சமூகத்திடமிருந்து எமதுநாட்டு ஆடை உற்பத்திக்கு நல்ல வரவேற்புக்கிட்டியது. இதனால் கிராமப்புறங்களைத் தேர்ந்தெடுத்து 200 கிராமங்களில் ஆடைத்தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டன. இதன் மூலம் நேரடியாக 3 இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புக் கிட்டியது. மறைமுகமாக 12 இலட்சம் பேருக்கு தொழில்கிட்டியது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுடன் செய்துகொள்ளப்பட்ட பலதரப்பு உடன்படிக்கைகளின்படி ஆடை உற்பத்திக் கோட்டா எமக்குக்கிட்டியது. ஆரம்பத்தில் 14 நாடுகளுக்கு மட்டுமே இந்தக்கோட்டா கிட்டிவந்தது. நாம் நேரடியாகச் சென்று பலகட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தியதன் பயனாக எமது நாட்டுக்கும் இந்தக்கோட்டாவை பெறமுடிந்தது.

2002 ஆம் ஆண்டில் எமது கோட்டா உடன்படிக்கை காலாவதியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்தவேளையில் நான் பிரதமராக இருந்தேன். உடனடியாக வர்த்தக அமைச்சரான ரவிகருணாநாயக்கவை அனுப்பி இந்தப் பலதரப்பு உடன்படிக்கையின் கால எல்லையை நீடித்துக்கொண்டேன். அதன்படி இவ்வாண்டுடன் உடன்படிக்கைக் காலம் முடிவடைகிறது. அடுத்த மூன்று மாதங்கள் வரை மட்டுமே எமது ஆடை உற்பத்திக்கான வெளிநாட்டுச் சந்தைவாய்ப்புக் காணப்படுகிறது. உடனடியாக இதனைப் புதுப்பிக்கத் தவறினால் பெரும் நெருக் கடிநிலையை எதிர்கொள்ள நேரிடலாம்.

உடன்படிக்கை புதுப்பிக்கப்பட வேண்டுமானால் நாம் சில நிபந்தனைகளை நிறைவேற்றியாக வேண்டும். யுத்தம் நிறுத்தப்படவேண்டும். சமாதான முயற்சி முன்னெக்கப்படவேண்டும். அடிப்படை மனித உரிமை மீறல்கள் தடுக்கப்படவேண்டும். இவை நிபந்தனைகளில் முக்கியமானவையாகும். அரசாங்கம் இவற்றை எப்படி சாதிக்கப்போகின்றது என்பதே இன்றைய கேள்வியாகும்.

இவ்வருடத்துடன் வெளிநாட்டுச் சந்தைவாய்ப்பை நாம் இழந்தால் பெரும் சவாலை எதிர்கொள்ள நேரிடலாம். பொருளாதாரப் பாதிப்பால் நாடு வறுமைக்குள் தள்ளப்படலாம் என்பதை அரசுக்கு எச்சரித்து வைக்கின்றேன்.

இத்தருணத்தில் நான் கட்சி அரசியல் ரீதியில் செயற்பட முனையவில்லை. நாட்டின் பொருளாதாரத்தைக் காப்பாற்றவேண்டிய கடப்பாட்டை நான் உணர்கின்றேன். எனவே கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிந்தவுடன் பிரஸல்ஸுக்குச் சென்று ஐரோப்பிய யூனியன் அதிகாரிகளைச் சந்தித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாட விருக்கிறேன். அதன் பின்னர் நாடு திரும்பியதும் முதலீட்டாளர்கள், வர்த்தக சமூகத்தினர், தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடியதன் பின்னர் அரசுடனும் பேசவிருக்கின்றேன். வெளிநாட்டுப் பொருளாதாரத்தின் பங்காளி என்ற தோரணையில் எனது கடப்பாட்டை நான் நிறைவேற்றுவேன். அதற்குரிய உத்தரவாதங்களைக் கொடுக்கவேண்டிய பொறுப்பு அரசாங்கத்தைச் சார்ந்ததாகும்.

இந்த விடயத்துக்குக் காலம் தாழ்த்தாமல் தீர்வு தேடமுற்படவேண்டும். தவறினால் நாட்டின் பொருளாதாரம் மீண்டுமொருதடவை 77 க்கு முந்தியகாலத்தைவிட மோசமானதாக அமையுமென்பதை எச்சரித்து வைக்கின்றேன்" என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

Email this page Your Opinion Print this page
ஐ.நா.செயலாளர் நாயகத்துடன் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு
ஆங்கிலம் தெரியாதவர்கள் பிரிட்டனுக்குள் நுழைய தடை
தாதியர் வேலைநிறுத்தத்தால் இரத்தினபுரி ஆஸ்பத்திரியில் 3 நோயாளர்கள் மரணம்
வவுனியா செக்கடிபுலவில் வர்த்தகர் சுட்டுக்கொலை
நாளைய தேர்தல் குறித்து கட்சிகளின் பிரதிநிதிகள் எதிர்பார்ப்பது என்ன?
திருமலை மாவட்ட தேர்தலை ஒத்திவைக்க கோரும் மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிப்பு
பேருவளை துவக்குச்சூட்டில் இருவர் பலி; இருவர் படுகாயம்
தோட்ட உரிமையாளரினால் தாக்கப்பட்ட தமிழ் மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு
கிழக்கு செல்வதற்கு வெளிநாட்டு ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு
சமரசிங்க தலைமையிலான குழு மே 11 இல் ஜெனீவா பயணம்
கொத்மலையில் கைதான இருவரில் ஒருவர் மரணம்
கிழக்கு நிரந்தரமாகவே பிரிந்திருப்பதா? இல்லையா? சர்வஜன வாக்கெடுப்பே நாளைய தேர்தல்
மனிதாபிமானச் செயற்பாடுகள் ஊடாக நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்வோம்
வவுனியா-மதவாச்சி ரயில் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இணக்கம்
பாதுகாப்பை அகற்ற முயற்சி விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு
ஆடை ஏற்றுமதிக் கோட்டாவை புதுப்பிக்க அரசு தவறினால் பாரிய பொருளாதார நெருக்கடி
தடுத்துவைக்கப்பட்டுள்ள 19 மலையக இளைஞர்களையும் விடுவிக்க ஏற்பாடு
தேடுதலில் கைதானவர்களை விடுவித்த பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு நன்றி தெரிவிப்பு
ஜனநாயக விரோத அரசுக்கு சாட்டையடி கொடுக்க கிழக்கு மக்கள் ஐ.தே.க.வுக்கு வாக்களிக்க வேண்டும்
கணவனை இழந்த பட்டதாரி குடும்பப் பெண் வெள்ளை வானில் சென்றோரால் கைது
கண்டியில் பிரபல பாடசாலையொன்றின் அதிபருக்கு விஸா நீடிப்பு வழங்க அரசு மறுப்பு
தாதிகள் பணிப்பகிஷ்கரிப்பினால் ஆபத்தான நிலையில் நோயாளிகள்
2,171 அரச ஊழியர்கள் நாளை திருமலை மாவட்ட தேர்தல் கடமையில்
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையால் அடுத்த மாதங்களில் தட்டுப்பாடு ஏற்படும்
கதிர்காமம் முருகன் ஆலய திருவிழா சகல ஏற்பாடுகளும் பூர்த்தி
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் மனித உரிமைகள் மேம்பட்ட நிலையில்
மூதூர் நகரை மீட்கச் சென்ற கொமாண்டோ அணியுடன் ஊர்காவல் படை வீரரும் சென்றார்
கிழக்குத் தேர்தல் நீதி, நேர்மையான முறையில் இடம்பெறபோவதில்லை
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் சிறந்த தீர்ப்பை வழங்குவர்; ஹக்கீம் நம்பிக்கை
கிழக்கை கோரப்பிடிக்குள் வைத்திருக்கும் அரசின் சூழ்ச்சித் திட்டத்தை மக்கள் தகர்த்தெறிவார்கள்
அபிவிருத்தி மாயையைக்காட்டி மக்களின் வாக்கை சூறையாட முஸ்லிம் அமைச்சர்கள் முண்டியடிப்பு
`முஸ்லிம் காங்கிரஸின் தலைமையை மாற்ற கிழக்குத் தேர்தல் நல்ல சந்தர்ப்பம்'
தமிழர்களின் 25 வருட ஆயுதப் போராட்டம் தோல்வி ஒரு அங்குல நிலத்தைக் கூட அவர்கள் பிடிக்கவில்லை
தம்பகல்ல வாகன விபத்தில் இராணுவ வீரர் பலி
ஊவாவில் இடம்பெறும் ஊழல் மோசடிகளை இல்லாதொழிப்பதே எனது நோக்கம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com