லண்டன் தெற்குப் பகுதியில் இரண்டு இலங்கைச் சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
ஐந்து வயது சிறுவனும், நான்கு வயது சிறுமியுமே படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் இதன் போது 6 மாதக் குழந்தையொன்று படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லண்டன் தெற்கு பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சிறுவர்களின் தந்தை மற்றும் தாயாரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதுடன் இவர்கள் இலங்கையர் எனவும் தெரிவித்துள்ளனர்.
சிறுமி சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளதுடன் சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில் இச்சம்பவம் லண்டனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.