Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, June 06, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
புதிய கூட்டத் தொடரை ஆரம்பிக்க ஜனாதிபதி வருகைதராததையிட்டு ரணில் விமர்சிப்பு
[06 - June - 2008] [Font Size - A - A - A]
* பாராளுமன்றத்துக்கு தன்னை வரவிடாமல் தடுத்ததாகவும் விசனம்

பாராளுமன்ற சம்பிரதாயங்களின்படி இன்றைய தினம் ஜனாதிபதி பராளுமன்றத்துக்கு வந்து சபை அமர்வுகளை ஆரம்பித்து வைத்திருக்க வேண்டும். ஆனால் இந்நாட்டின் அரச தலைவர் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார் . இது கேவலமானதொரு விடயம். மக்களின் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க முடியாத ஒரு துணிச்சலற்ற ஜனாதிபதியாக இன்று மஹிந்த ராஜபக்ஷ மாறிவிட்டாரென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றம் சாட்டியுள்ளனர்.

பாராளுமன்றம் நேற்றுக்காலை 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடிய பின்னர் சிறப்புரிமை பிரச்சினையொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறியதாவது;

இன்று காலை நான் பாராளுமன்றத்துக்கு வந்தபோது பாராளுமன்ற நுழைவாயிலில் சிலர் கூடிநின்று எனது வருகையை தடுக்கமுயன்றனர். வாகனங்களை குறுக்கே நிறுத்தி தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. ஆனால் இது தொடர்பில் பொலிஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இறுதியில் நான் பாராளுமன்றத்துக்கு வேறு வழியிலேயே வந்தேன். இது ஒரு ஜனநாயக நாடு. பாராளுமன்றத்துக்கு வருவதற்கும் செல்வதற்கும் எமக்கு உரிமையுண்டு. இங்குள்ள சில அரசதரப்பு உறுப்பினர்களும் அந்த கூட்டத்தில் இருந்ததை கண்டேன்.

இன்று சபை நடவடிக்கையை ஆரம்பித்துவைக்க ஜனாதிபதி வருவாரென நாம் எதிர்பார்த்தோம். அவருடன் சில விடயங்களை விவாதிக்க தயாராகவிருந்தோம். ஆனால் பாராளுமன்றம் வருவதற்கு ஜனாதிபதி அச்சப்படுகின்றார்.

ஏனெனில் இந்த நாட்டில் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். பலர் காணாமல் போகின்றனர். பொருட்களின் விலைகள் அதிகரித்து செல்கின்றன. இந்நிலைமைகளினால் அவர் மக்கள் பிரதிநிதிகளாகிய எம்மையும் பாராளுமன்றத்தையும் சந்திக்க அச்சப்படுகின்றார்.

ஜனாதிபதி ஒரு துணிச்சலற்றவர். அதனால்தான் இன்று சபைக்கு வருவதை தவிர்த்து வெளிநாட்டுக்கு சென்று ஒளிந்துள்ளார். இது ஒரு கேவலமான விடயம்.

சபாநாயகர் பதில்

ரணில் விக்கிரமசிங்கவின் சிறப்புரிமைப் பிரச்சினை தொடர்பில் பதிலளித்த சபாநாயகர், பாராளுமன்றத்துக்கு ரணில் விக்கிரமசிங்க வருவதை தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி தொடர்பாக பொலிஸ் மா அதிபருக்கு அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிறப்புரிமை மீறல் சம்பந்தப்பட்ட பாராளுமன்றக் குழுவிடமும் இப்பிரச்சினையை கொண்டு சென்றுள்ளேன்.

பாராளுமன்றத்துக்கு வருவதை தடுக்கும் செயல் மிகவும் பாரதூரமான சிறப்புரிமை மீறல் பிரச்சினை என்பதை நான் இச்சபைக்கு தெரியப்படுத்துகிறேன்.

Email this page Your Opinion Print this page
உயர் பாதுகாப்பு முகாமைத்துவம் தொடர்பாக புதிய சட்ட மூலம்; அமைச்சரவை அங்கீகாரம்
அம்புலன்ஸில் வந்த நோயாளர் மீது காத்தான்குடியில் தாக்குதல்; கண்டித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்
பாலமோட்டையில் முன்னேற முயன்ற படையினருடன் புலிகள் கடும் மோதல்
புதிய கூட்டத் தொடரை ஆரம்பிக்க ஜனாதிபதி வருகைதராததையிட்டு ரணில் விமர்சிப்பு
தாயையும் மகளையும் வல்லுறவுக்குட்படுத்தி விட்டு தப்பிச் சென்ற காடையர்கள்; ஒலுவில் பகுதியில் சம்பவம்
மாணவர்கள், தனியார்துறை ஊழியர்கள் உட்பட பெருமளவு தமிழர்கள் வெள்ளவத்தையில் கைது
63 பொதுமக்கள், 108 படையினர் மே மாதம் பலி; 549 பேர் படுகாயம்
பெரிய மடுப்பகுதியில் விமானத் தாக்குதல்
மாகாணசபை தேர்தலின் பின் கிழக்கில் 16 பேர் படுகொலை 53 பேரை காணவில்லை; 20 பேர் காயம், 30 பேர் கைது
கிழக்கில் சட்டவிரோத ஆயுதங்களை உடனடியாக களைய மு.கா.வலியுறுத்தல்
பொத்துவில் காட்டுக்கு விறகு வெட்ட சென்ற 9 பேர் ஆயுதபாணிகளால் தடுத்துவைப்பு
மட்டுநகரில் நேற்றிரவு துப்பாக்கிச்சூடு இரு கான்ஸ்டபிள்கள் பலி; ஒருவர் காயம்
ராகம மாபொல வீதியில் குண்டு மீட்கப்பட்டு செயலிழப்பு
பாணந்துறையில் கடத்தப்பட்டவர் பிலியந்தலப் பகுதியில் மீட்பு
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மோசடி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுதாக்கல்
மாந்தையில் கிளைமோர் தாக்குதல் இரு பொதுமக்கள் உயிரிழந்தனர்
வெள்ளவத்தையில் கணினி விற்பனை நிலையத்தில் வெடி பொருட்கள் மீட்பு
வீதிகளில் மோதல்கள் நடந்து கொண்டிருந்தமையால் வயல்வெளிகள் ஊடாகவே கிளிவெட்டியை சென்றடைந்தோம்
ரயில் பாதை குண்டுவெடிப்பு தொடர்பாக தேடப்பட்டவர் வவுனியாவில் கைது
மட்டக்களப்பில் தொடரும் வன்முறைச் சம்பவங்கள் எல்லைக்கிராம தமிழ், முஸ்லிம் மக்கள் இடம்பெயர்வு
புத்தர் கூட வன்முறையை விரும்பாத நிலையில் தமிழ் முஸ்லிம் உறவுக்கு பங்கம் விளைவிப்பதில் ஹெல உறுமய
கம்பளை நகரப் பகுதிகளில் தொற்று நோய் அபாயம் பொதுமக்களை விழிப்புடன் இருக்குமாறு வேண்டுகோள்
விவசாய டிப்ளோமா கற்கைநெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
எம்.பி.யாகவோ, பெண்ணாகவோ பார்க்காமல் என்னை கேவலமாக திட்டினார் பொலிஸ் அதிகாரி
கிழக்கு மாகாண சபையின் இரண்டாவது அமர்வு ஜூன் 11 இல்
கல்பிட்டியில் இரு ஆட்டோக்களிலிருந்து 364 ஜெலிக்நைற் குச்சிகள் மீட்பு
ஆடை ஏற்றுமதி கோட்டா குறித்து ஆராய ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இந்தவாரம் வருகை
கம்பஹா, கட்டுநாயக்காவில் தேடுதல் 13 தமிழர்கள், 6 சிங்களவர்கள் கைது
தம்புள்ளயில் தமிழ் வர்த்தகர் சுட்டுக் கொலை
மக்களை பலவழிகளிலும் சுரண்டும் அரசு ஊழியர் சேமலாப நிதியத்திலும் கை வைத்துவிட்டது
நிலப்பகுதியைப் பெற்றுக்கொடுக்கக் கோரி கொட்டியாக்கலை தோட்டத் தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
மழை குறைந்தளவில் தொடர்ந்து பெய்யும் உணவு, ஆடைகளை வழங்குமாறு வேண்டுகோள்
முதலமைச்சர் பிள்ளையான் தலைமையில் கிழக்கு மாகாணத்தைக் கட்டி எழுப்புவோம்
யாழ்.குடாநாட்டில் சுமுக நிலையை உருவாக்க பொதுமக்களின் பங்களிப்பு அவசியமானதாகும்
கடத்தப்பட்ட இருவரும் வவுனியாவில் விடுவிப்பு
இரத்தோட்டை பகுதியில் தமிழ் மக்களுக்கு ஆவணங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை வேண்டும்
குருநாகல் மாவட்ட தமிழ்மொழிமூல முஸ்லிம் பாடசாலைகளின் கல்விநிலை பெரும் பின்னடைவு
2010 ஆம் ஆண்டு எமது நாடு பால் உற்பத்தியில் தன்னிறைவு காணும்
பணத்துக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு அரசுடன் இணையப் போவதாக கட்டுக்கதை கட்டுகிறார்கள்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com