வவுனியா பாலமோட்டை பகுதியில் நேற்று முன்தினம் புதன்கிழமை படையினர் மேற்கொண்ட பாரிய முன் நகர்வு முயற்சியைத் தாங்கள் முறியடித்துள்ளதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த முறியடிப்புத் தாக்குதலில் பத்துப் படையினர் கொல்லப்பட்டதுடன், 18 படையினர் படுகாயமடைந்துள்ளதாக விடுதலைப்புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்;
வவுனியாவுக்கு மேற்கே பாலமோட்டை பகுதியில் புதன்கிழமை முற்பகல் 11 மணியளவில், பலத்த ஷெல் தாக்குதல் மற்றும் மோட்டார் தாக்குதலுடன் படையினர் பாரிய முன்நகர்வு முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த முன்நகர்வு முயற்சிக்கெதிராக விடுதலைப்புலிகள் கடும் பதில் தாக்குதல் நடத்தினர். இதனால், படையினர் பலத்த இழப்புகளுடன் பழைய நிலைகளுக்கு திரும்பிச் சென்றனர்.
இந்த முறியடிப்புத் தாக்குதலில் பத்துப் படையினர் கொல்லப்பட்டதுடன், 18 படையினர் படுகாயமடைந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியை நோக்கி நீண்டநேரம் கடும் ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.