கொழும்பு மட்டக்குளியிலுள்ள ஒரு கடைக்காரர், மாட்டு வண்டியிலிருந்து பொருட்களை இறக்கிக் கொண்டிருந்தார். இவர் புறக்கோட்டையில் பொருட்களை கொள்வனவு செய்துவிட்டு அவற்றை ஒரு "வானில்' கொண்டுவருவது வழக்கம்.
இப்போது அந்த வழக்கத்தை மாற்றிவிட்டு மாட்டு வண்டியை பிடித்து அதில் கடைக்குரிய பொருட்களை ஏற்றி வருகிறார்.
இவர் ஒருவர்தான் இப்படிச் செய்கிறார் என்று நினைத்துவிடாதீர்கள். இவரைப் போலவே வேறு சில சிறு வியாபாரிகளும் வான்களில் பொருட்களை எடுத்து வருவதை கைவிட்டு மாட்டு வண்டியின் உதவியை நாடியிருக்கிறார்கள்.
""இப்படிச் செய்வதால் பொருட்களை நியாயமான விலையில் விற்கக் கூடியதாக இருக்கும். மோட்டார் வண்டிகளை பாவித்தால் கட்டுப்படியாகாது' என்கிறார் ஒரு சிறு வியாபாரி.
கரத்தை யுகம்!