Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, June 07, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு சட்டத்தரணிகள் எதிர்ப்பு
[07 - June - 2008] [Font Size - A - A - A]
ஒளிப்பதிவு இணைப்பு மூலம் சாட்சியத்தைப் பெற்றுக்கொள்வதை இடைநிறுத்தும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு சட்டத்தரணிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கு வெளியே வசிக்கும் நேரடி சாட்சிகளிடமிருந்து சாட்சியங்களைப் பெற்றுக் கொள்ள ஒளிப்பதிவு இணைப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகளை அவதானிக்க நியமிக்கப்பட்டிருந்த சர்வதேச மாண்புமிக்கோர் குழுவினர் தமது பணிகளை முடிவுக்கு கொண்டு வந்ததையடுத்து ஒளிப்பதிவு இணைப்பு வசதியும் கைவிடப்பட்டது.

விசாரணை ஆணைக்குழுவின் இந்தத் தீர்மானமானது விசாரணை தொடர்பான நம்பகத் தன்மையை பாரதூரமான வகையில் பாதிக்கும் என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர், முன்னாள் எம்.பி.ஜோசப் பரராஜசிங்கம், மூதூரில் தன்னார்வ தொண்டர் நிறுவனப் பணிப்பாளர்கள் 17 பேர், 5 திருமலை மாணவர்கள் ஆகியோரின் படுகொலைச் சம்பவங்கள் உட்பட 15 பாரதூரமான உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து விசாரணை செய்யும் பொறுப்பு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

சாட்சியத்தை பெற்றுக் கொள்வது தொடர்பான முன்னொருபோதுமில்லாத இந்த நடைமுறையை தொடர்ந்து மேற்கொள்வதற்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெறவேண்டியிருப்பதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் நிசங்க உடலகம பிரிட்டிஷ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் சிங்கள சேவையான சந்தேசியாவுக்கு கூறியுள்ளார்.

வழக்குக்கான ஆதாரமாக ஒளிப்பதிவு இணைப்பு மூலமான சாட்சியத்தை பயன் படுத்த முடியுமா என்பது தொடர்பான கேள்வி குறித்து பாராளுமன்றத்திற்கு சட்ட மூலப் பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

சபாநாயகர் இதனை ஆராய்ந்து இது சாத்தியப்படுமா என்பது குறித்து தீர்மானிப்பாரென உடலகம கூறியுள்ளார்.

இந்தச் சட்ட மூலத்திற்கு அங்கீகாரம் கிடைக்கும் வரை பொறுத்திருக்குமாறு ஜனாதிபதி செயலகம் கூறுகின்றது. அங்கீகாரம் கிடைத்தால் இந்த நடவடிக்கையை நாம் முன்னெடுத்துச் செல்வோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டுவதைப் போன்று விசாரணையின் நம்பகத் தன்மை தொடர்பாக பிரச்சினை எதுவும் இல்லை. இந்த விசாரணைகளுக்கு நாம் ஒருபோதும் ஒளிப்பதிவு இணைப்பு சாட்சியத்தை பயன் படுத்தவில்லை என்று அவர்கள் எமக்கு கூறினால் விசாரணை பாதிப்படையுமென நாம் கூறுவோம். ஆனால் அது தொடர்பாக அங்கீகாரம் கிடைக்கும்வரை இதனை நாம் முன்னெடுக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Email this page Your Opinion Print this page
கண்டியில் பயணிகள் பஸ்ஸில் குண்டுவெடிப்பு; 2 பேர் உயிரிழப்பு
ஜனாதிபதி கடும் கண்டனம் அமைதி காக்க வேண்டுகோள்
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு சட்டத்தரணிகள் எதிர்ப்பு
மன்னாரில் எண்ணெய் ஆய்வு உரிமம் இந்திய நிறுவனத்துக்கு வழங்க முடிவு
குண்டுவெடிப்புகளை தடுப்பது குறித்து சகல கட்சிகளுடனும் கலந்தாராயத் தயார்
கல்கிசைப் பகுதியில் 5 கிலோ கிளைமோர்
ஜோர்ஜ் சந்திரசேகரன் காலமானார்
5 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்புக்கு ஜூன் 16 வரை ஜே.வி.பி.காலக்கெடு
கிழக்கு இனமுறுகல், வன்முறைகளுக்கு புலிகளும் தேர்தலில் தோற்ற அரசியல்வாதிகளுமே காரணம்
கொழும்பு புத்தளம் வீதியில் இருதரப்புக்கிடையே மோதல்
மாணவன் மீது தாக்குதல் ஆஸ்பத்திரியில் அனுமதி
மருதானை தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் வெள்ளைவானில் வந்தோரால் கடத்தல்
கொழும்பில் கடத்தப்பட்ட நால்வர் விடுதலை ஆட்டுப்பட்டித்தெருவில் குடும்பஸ்தர் கடத்தல்
வீரவன்சவுடன் ஜே.வி.பி. எம்.பி.க்கள் தர்க்கம் சபாநாயகர் தலையீட்டால் முடிவுக்கு வந்தது
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பெண் மேன்முறையீட்டு நீதிமன்றால் விடுதலை
ஜெயராஜ் கொலை தொடர்பாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் சயனைட் அருந்தி தற்கொலை செய்தது எவ்வாறு?
வன்னிக்கள நிலைவரத்தை ஆராய கோதாபய ராஜபக்ஷ வவுனியா விஜயம்
பால்ராஜை சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளித்தவர் ஜயலத் ஜெயவர்த்தன
பாதுகாப்பு குறைப்பால் உயிருக்கு அச்சுறுத்தல் அதிகரிக்க கோருகிறார் ஜே.வி.பி. எம்.பி.
மின்சாரசபை புனரமைக்கும் சட்டமூலத்தினூடாக தனியார்மயப்படுத்த அரசாங்கம் முயற்சி
இலங்கை விசா விண்ணப்பங்களை சென்னைக்கு அனுப்புகிறது பிரிட்டன்
நீல் ரூபசிங்க எம்.பி.யாக பதவிப்பிரமாணம்
சமாதான முயற்சிகளுக்கான அழைப்புகளை இலங்கை அரசு உதாசீனம் செய்யாது
குண்டுவெடிப்பு தொடர்பாக வீரவன்ச உரையாற்ற ஐ.தே.க.வினர் எதிர்ப்பு
பெரிய நீலாவணையில் குடும்பஸ்தர் கடத்தல்
குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்பென சந்தேகம் தமிழ் இளைஞன் மாத்தளையில் கைது
ஆசிரிய சேவையிலுள்ளோருக்கு ஓய்வுக்கு முன் விசேட விடுமுறை
காத்தான்குடி குழப்பநிலைமையை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை
கட்டாரில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இளைஞனை விடுவிக்க நடவடிக்கை வேண்டும்
வெள்ளை வான் ஆயுதபாணிகளால் புத்தளத்தில் ஒருவர் கடத்தல்
யாழ்.ஐயங்கேணியைச் சேர்ந்த இளைஞன் கதிரேசன் வீதியில் ஆயுதபாணிகளால் கடத்தல்
யு.எஸ்.எயிட் அமைப்பின் நிதி உதவியுடன் திருமலை ஏகாம்பரம் விளையாட்டரங்கு புனரமைப்பு
ஜனாதிபதி பதவியேற்ற பின் 11 ஊடகவியலாளர் படுகொலை செய்தியாளர் வேட்டையாடப்படுவதை தடுத்து நிறுத்துங்கள்
புலிகளுடன் அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்
கடற்படை அனுமதித்தால் அடுத்த நிமிடமே சகலருக்கும் மீன்பிடிக்க அனுமதி
ஜே.வி.பி. எம்.பி. விஜித ஹேரத்திடம் ஜெயராஜ் படுகொலை தொடர்பாக புலனாய்வுப் பிரிவு விசாரணை செய்ய வேண்டும்
"சிறந்த பூசாரியை வரவழைத்து சபாமண்டபத்தை புனிதப்படுத்துங்கள்'
அரச பயங்கரவாதம் சபைக்குள்ளும் வந்துவிட்டதாக முன்னாள் சபாநாயகர் விசனம்
ராஜபக்ஷவின் ஆட்சியிலிருப்பதைவிட புலிகளின் கட்டுப்பாட்டில் தமிழருக்கு சந்தோசமான வாழ்வு
கிழக்கு மாகாண சபை முதல் அமர்வை பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்தாராம் அதாவுல்லா
நிமாலுக்கு பாராட்டு ; ரெஜிக்கு அனுதாபம்
ஆழஊடுருவும் படையணியின் தாக்குதலுக்கு மாற்றீடாகவே தென்பகுதியில் தாக்குதல்கள்
யாழ். குடாநாட்டின் அபிவிருத்தி பணிகளுக்காக புதிய வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்
தமிழ் கூட்டமைப்பு எம்.பி.க்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த பிள்ளையான் குழு உறுப்பினர் ஜனாதிபதியின் இணைப்பாளர்
ருஹுணு அபிவிருத்தி வங்கியின் தலைவரை பதவியில் இருந்து நீக்கக்கோரி போராட்டம்
கிழக்கு மாகாண முதல்வருக்கு கூடுதலான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதென்பது உண்மைக்கு புறம்பானதாகும்
மனநோயாளியினால் தாக்கப்பட்ட மூதாட்டிப் பெண் பலி மூவர் படுகாயம்; சொரணதொட்டவில் சம்பவம்
கந்தகெதரவில் இரு தமிழ் இளைஞர் கைது
50 கோடி ரூபா நஷ்ட ஈடு கோரி கலாநிதி குமார் ரூபசிங்க கடிதம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com