Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, June 07, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
ஜனாதிபதி கடும் கண்டனம் அமைதி காக்க வேண்டுகோள்
[07 - June - 2008] [Font Size - A - A - A]
கட்டுப்பெத்தவில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலை கடுமையாக கண்டித்திருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, இனவெறுப்பையும் வன்முறையையும் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டு வேண்டுமென்றே மேற்கொள்ளப்படும் ஆத்திரத்தை மூட்டும் நடவடிக்கைகளுக்கு இடமளிக்காமல் அமைதி பேணுமாறு நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக ஜனாதிபதி ராஜபக்ஷ மேலும் தெரிவித்திருப்பதாவது;

கட்டுப்பெத்தவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பானது விடுதலைப் புலிகளின் குரூரத்தனத்தையும் மனித உயிரை மதிப்பதிலுள்ள குறைபாட்டையும் மீண்டுமொரு முறை வெளிப்படுத்தியிருக்கிறது. இச்சம்பவத்தில் பலியானோரின் குடும்பங்களுக்கு எனது அனுதாபங்களை தெரிவிப்பதுடன், காயமடைந்தவர்கள் யாவரும் துரிதமாக குணமடைய மும்மணிகள், தெய்வங்களின் ஆசிகிட்டப் பிரார்த்திக்கின்றேன்.

புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட கொடூரத்தனமான இந்த நடவடிக்கையை கண்டிப்பதுடன், பொதுமக்களை இலக்கு வைத்த இந்தக் கோழைத்தனமான நடவடிக்கையானது வடக்கில் இராணுவ ரீதியில் புலிகளுக்கு ஏற்பட்ட பின்னடைவால் தோன்றிய குழப்பமான நிலைமை என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த வாரங்களில் பொதுமக்கள் பாராட்டத் தக்க விதத்தில் விழிப்புடனும் பொறுப்புணர்வுடனும் செயற்பட்டதால் வாகனங்கள் மற்றும் பொது இடங்களில் வைக்கப்பட்ட குண்டுகள் மற்றும் மறைவிடங்களில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், புலிகளுடன் தொடர்புடையவர்களெனக் கருதப்படுபவர்களும் கைதுசெய்யப்பட்டனர்.

நாகரிகமுள்ள சகல சமூகங்களும் வன்முறைகள், பயங்கரவாதத்தில் புலிகள் கொண்டுள்ள ஈடுபாட்டின் யதார்த்தத்தை தற்போது பார்க்க முடியும்.

அத்துடன் இலங்கையானது பயங்கரவாத சக்திகளுக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து எதிர்கொண்டுள்ளதையும் ஜனநாயகத்தையும் நாகரிகத்தையும் பாதுகாக்க வேண்டிய எமது முயற்சிகளையும் மீண்டும் இச்சம்பவம் முன்னிலைப்படுத்தியிருக்கிறது.

மேலும், இக்குரூரத்தன்மையானது தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகளைத் தூண்டி விடும் புலிகளின் முயற்சியை வெளிக்காட்டுகின்றது. தமிழ் மக்கள் விடுதலையாளர் என்று அழைக்கப்படும் பயங்கரவாதத்தினால் அடிமைப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில், அதன்மூலம் ஆதாயம் பெற புலிகள் எதிர்பார்த்திருக்கின்றனர். ஆகவே, இனவெறுப்பு, வன்முறைகளைத் தூண்டும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு இடமளிக்காமல் மக்கள் அமைதி பேண வேண்டும்.

நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை அழித்தொழிக்கும் பொலிஸார் பாதுகாப்புப் படையினருக்கு தொடர்ந்தும் உதவியளிக்க வேண்டும் என்று ஜனாதிபதி கோரிக்கை விடுத்திருக்கிறார்.

Email this page Your Opinion Print this page
கண்டியில் பயணிகள் பஸ்ஸில் குண்டுவெடிப்பு; 2 பேர் உயிரிழப்பு
ஜனாதிபதி கடும் கண்டனம் அமைதி காக்க வேண்டுகோள்
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு சட்டத்தரணிகள் எதிர்ப்பு
மன்னாரில் எண்ணெய் ஆய்வு உரிமம் இந்திய நிறுவனத்துக்கு வழங்க முடிவு
குண்டுவெடிப்புகளை தடுப்பது குறித்து சகல கட்சிகளுடனும் கலந்தாராயத் தயார்
கல்கிசைப் பகுதியில் 5 கிலோ கிளைமோர்
ஜோர்ஜ் சந்திரசேகரன் காலமானார்
5 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்புக்கு ஜூன் 16 வரை ஜே.வி.பி.காலக்கெடு
கிழக்கு இனமுறுகல், வன்முறைகளுக்கு புலிகளும் தேர்தலில் தோற்ற அரசியல்வாதிகளுமே காரணம்
கொழும்பு புத்தளம் வீதியில் இருதரப்புக்கிடையே மோதல்
மாணவன் மீது தாக்குதல் ஆஸ்பத்திரியில் அனுமதி
மருதானை தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் வெள்ளைவானில் வந்தோரால் கடத்தல்
கொழும்பில் கடத்தப்பட்ட நால்வர் விடுதலை ஆட்டுப்பட்டித்தெருவில் குடும்பஸ்தர் கடத்தல்
வீரவன்சவுடன் ஜே.வி.பி. எம்.பி.க்கள் தர்க்கம் சபாநாயகர் தலையீட்டால் முடிவுக்கு வந்தது
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பெண் மேன்முறையீட்டு நீதிமன்றால் விடுதலை
ஜெயராஜ் கொலை தொடர்பாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் சயனைட் அருந்தி தற்கொலை செய்தது எவ்வாறு?
வன்னிக்கள நிலைவரத்தை ஆராய கோதாபய ராஜபக்ஷ வவுனியா விஜயம்
பால்ராஜை சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளித்தவர் ஜயலத் ஜெயவர்த்தன
பாதுகாப்பு குறைப்பால் உயிருக்கு அச்சுறுத்தல் அதிகரிக்க கோருகிறார் ஜே.வி.பி. எம்.பி.
மின்சாரசபை புனரமைக்கும் சட்டமூலத்தினூடாக தனியார்மயப்படுத்த அரசாங்கம் முயற்சி
இலங்கை விசா விண்ணப்பங்களை சென்னைக்கு அனுப்புகிறது பிரிட்டன்
நீல் ரூபசிங்க எம்.பி.யாக பதவிப்பிரமாணம்
சமாதான முயற்சிகளுக்கான அழைப்புகளை இலங்கை அரசு உதாசீனம் செய்யாது
குண்டுவெடிப்பு தொடர்பாக வீரவன்ச உரையாற்ற ஐ.தே.க.வினர் எதிர்ப்பு
பெரிய நீலாவணையில் குடும்பஸ்தர் கடத்தல்
குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்பென சந்தேகம் தமிழ் இளைஞன் மாத்தளையில் கைது
ஆசிரிய சேவையிலுள்ளோருக்கு ஓய்வுக்கு முன் விசேட விடுமுறை
காத்தான்குடி குழப்பநிலைமையை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை
கட்டாரில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இளைஞனை விடுவிக்க நடவடிக்கை வேண்டும்
வெள்ளை வான் ஆயுதபாணிகளால் புத்தளத்தில் ஒருவர் கடத்தல்
யாழ்.ஐயங்கேணியைச் சேர்ந்த இளைஞன் கதிரேசன் வீதியில் ஆயுதபாணிகளால் கடத்தல்
யு.எஸ்.எயிட் அமைப்பின் நிதி உதவியுடன் திருமலை ஏகாம்பரம் விளையாட்டரங்கு புனரமைப்பு
ஜனாதிபதி பதவியேற்ற பின் 11 ஊடகவியலாளர் படுகொலை செய்தியாளர் வேட்டையாடப்படுவதை தடுத்து நிறுத்துங்கள்
புலிகளுடன் அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்
கடற்படை அனுமதித்தால் அடுத்த நிமிடமே சகலருக்கும் மீன்பிடிக்க அனுமதி
ஜே.வி.பி. எம்.பி. விஜித ஹேரத்திடம் ஜெயராஜ் படுகொலை தொடர்பாக புலனாய்வுப் பிரிவு விசாரணை செய்ய வேண்டும்
"சிறந்த பூசாரியை வரவழைத்து சபாமண்டபத்தை புனிதப்படுத்துங்கள்'
அரச பயங்கரவாதம் சபைக்குள்ளும் வந்துவிட்டதாக முன்னாள் சபாநாயகர் விசனம்
ராஜபக்ஷவின் ஆட்சியிலிருப்பதைவிட புலிகளின் கட்டுப்பாட்டில் தமிழருக்கு சந்தோசமான வாழ்வு
கிழக்கு மாகாண சபை முதல் அமர்வை பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்தாராம் அதாவுல்லா
நிமாலுக்கு பாராட்டு ; ரெஜிக்கு அனுதாபம்
ஆழஊடுருவும் படையணியின் தாக்குதலுக்கு மாற்றீடாகவே தென்பகுதியில் தாக்குதல்கள்
யாழ். குடாநாட்டின் அபிவிருத்தி பணிகளுக்காக புதிய வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்
தமிழ் கூட்டமைப்பு எம்.பி.க்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த பிள்ளையான் குழு உறுப்பினர் ஜனாதிபதியின் இணைப்பாளர்
ருஹுணு அபிவிருத்தி வங்கியின் தலைவரை பதவியில் இருந்து நீக்கக்கோரி போராட்டம்
கிழக்கு மாகாண முதல்வருக்கு கூடுதலான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதென்பது உண்மைக்கு புறம்பானதாகும்
மனநோயாளியினால் தாக்கப்பட்ட மூதாட்டிப் பெண் பலி மூவர் படுகாயம்; சொரணதொட்டவில் சம்பவம்
கந்தகெதரவில் இரு தமிழ் இளைஞர் கைது
50 கோடி ரூபா நஷ்ட ஈடு கோரி கலாநிதி குமார் ரூபசிங்க கடிதம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com