இரண்டாவது டெஸ்ட் போட்டியில் குறித்த நேரத்தில் ஓவர்களை வீசாததற்காக மேற்கிந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது. இந்த டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய அணி ஒரு ஓவர் குறைவாக வீசியதாக புகார் கூறப்பட்டது.
இதனையடுத்து, அந்த அணியின் கப்டன் சர்வானுக்கு 10 சதவிகித ஊதியம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மற்ற வீரர்களுக்கு 5 சதவிகிதம் ஊதியம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியின் போது இரு அணியின் கப்டன்களுக்குமே குறித்த நேரத்தில் ஓவர்களை வீசாததற்காக அபராதம் விதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.