*பயணிகளின் பாதுகாப்பு கருதி ஏற்பாடு
இராணுவத்தில் இருந்து சட்ட ரீதியாக விலகிய 600 பேரை பொதுப் போக்குவரத்துச் சேவையின் பாதுகாப்பிற்கு என விரைவில் இணைந்துக் கொள்ளவுள்ளதாக போக்குவரத்து அமைச்சின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் தர்சன ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதன் முதற்கட்டமாக இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 440 பேரும் புகையிரதத் திணைக்களத்திற்கு 150 பேரும் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
முதல் குழுவிற்கான நியமனக் கடிதங்கள் எதிர்வரும் 15 ஆம் திகதி கையளிக்கப்படவுள்ளன. அவசரகாலச் செயற்பாடுகள் தொடர்பான அனுபவம் கொண்டவர்கள் பயணிகளின் பாதுகாப்பிற்கென இருக்க வேண்டும் என்பதால் இவர்களை பொதுப் போக்குவரத்துச் சேவையின் பாதுகாப்பிற்கு என நியமிக்க தீர்மானித்திருப்பதாகவும் கேணல் தர்சன ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கு வெடி பொருட்களை அடையாளம் காணக்கூடிய நவீன இலத்திரனியல் உபகரணங்கள் போக்குவரத்து அமைச்சினால் வழங்கப்படவுள்ளன.