* விடுதலைப் புலிகள் தெரிவிப்பு
வவுனியா வடமேற்கு குஞ்சுக்குளத்தில் படையினர் பெருமெடுப்பில் மும்முனைகளில் மேற்கொண்ட முன்நகர்வுகள் தம்மால் முறியடிக்கப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறியதாவது;
"" வவுனியாவின் வடமேற்கில் உள்ள குஞ்சுக்குளம் பகுதியில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் 12.30 மணிக்கு படையினர் கடும் ஷெல் தாக்குதல்களுடன் மும்முனைகளில் முன்நகர்வுத் தாக்குதல்களை நடத்தினர்.
இம் முன்நகர்வுகளை முறியடிக்கும் தாக்குதல்களை விடுதலைப் புலிகள் மேற்கொண்டனர். மாலை 5 மணிக்குப் படையினரின் முன்நகர்வுகள் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டன. படையினர் இழப்புகளுடன் பின்வாங்கி சென்று விட்டனர்.
இதில் 4 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 7 பேர் காயமடைந்துள்ளனர்.