Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, June 08, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
கைதான மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள் 36 பேர் விடுதலை
[08 - June - 2008] [Font Size - A - A - A]
மொறட்டுவ, கட்டுப்பொத்தவில் பஸ் மீது நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலையடுத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள் 36 பேர் நேற்று மொறட்டுவ நீதிமன்ற நீதிபதி பிலிப்பிட்டியவினால் விடுதலை செய்யப்பட்டனர்.

குண்டு வெடிப்பையடுத்து மொறட்டுவை பல்கலைக் கழக தமிழ் மாணவர்கள் கைது செய்யப்பட்டதையறிந்த சட்டத்தரணிகள் துஷித் ஜோன்தாசன், எம்.ஐ.பாலசண்முகன் ஆகியோர் மாணவர்களின் விடுதலை தொடர்பில் உடனடியாகக் கவனம் செலுத்தினர். இவர்களுக்கு உதவியாக மொறட்டுவ பல்கலைக் கழக விரிவுரையாளர்களான டயஸ் மற்றும் விமலரட்ன ஆகியோரும் தமது தனிப்பட்ட ரீதியான உதவிகளை வழங்கியதுடன், பொலிஸ் நிலையத்திற்குச் சென்று மாணவர்களின் நலன்கள் தொடர்பில் கவனமெடுத்தனர்.

சட்டத்தரணிகள் துஷித் ஜோன்தாசன், பாலசண்முகன் ஆகியோரின் நடவடிக்கையில் அன்றைய தினமே பல்கலைக்கழக மாணவிகள் 8 பேர் பொலிஸாரினால் விடுதலை செய்யப்பட்டனர்.

ஏனைய 36 மாணவர்களும் நேற்று சனிக் கிழமை மொறட்டுவ நீதிமன்றத்தில் பொலிஸாரினால் ஆஜர் படுத்தப்பட்டதையடுத்து நீதிபதி பிலிப்பிட்டியவினால் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் வைத்து கைதுசெய்யப்பட்டதையிட்டு தான் வெட்கமும் வேதனையுமடைவதாகத் தெரிவித்த நீதிபதி அவர்களை எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்ததுடன், சம்பந்தப்பட்ட மாணர்வர்களை அவரவர்களின் இடங்களுக்கு பாதுகாப்புடன் கொண்டுசென்று விடுமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

தாம் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது பொலிஸாரினால் மிகவும் கீழ்த்தரமாக நடத்தப்பட்டதாக மாணவர்கள் தமது சட்டத்தரணிகளிடம் தெரிவித்துள்ளனர். அத்துடன், தமது சிலரின் அடையாள அட்டைகள் பொலிஸ் நிலையத்தில் பறித்து வைக்கப்பட்டிருப்பதாகவும் சட்டத்தரணிகளிடம் தெரிவித்தனர். இதையடுத்து மாணவர்களின் அடையாள அட்டைகளையும் சட்டத்தரணிகள் பெற்றுக்கொடுத்தனர்.

இதேவேளை, தாம் கைதுசெய்யப்பட்டதையறிந்தவுடன் பொலிஸ் நிலையம் வந்து தமது நலன்களை கவனித்த சட்டத்தரணி துஷித்ஜோன் தாசனுக்கும் தமக்காக கட்டணமின்றி நீதிமன்றில் ஆஜராகிய சட்டத்தரணி எம்.ஐ. பாலசண்முகனுக்கும் மாணவர்கள் தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டனர்.

Email this page Your Opinion Print this page
பாதுகாப்பில் மாற்றங்களை ஏற்படுத்த தீவிர நடவடிக்கை
முருங்கன் பகுதியில் குடும்பஸ்தர் சுட்டுக் கொலை
பூநகரி, முல்லைத்தீவு பகுதிகளில் இரு நாட்களாக கடும் விமானத் தாக்குதல்
பொதுமக்கள் படுகொலையையிட்டு தமிழ் கூட்டமைப்பு கடும் கவலை
திருமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக இளஞ்செழியன்
பஸ் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பாக விசேட பொலிஸ் குழுக்கள் தீவிர விசாரணை
மசகு எண்ணெய் விலை 139 டொலராக அதிகரிப்பு
பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் உடனடியாக முடிவுக்கு வரவேண்டும்
சம்பூரில் இந்தியாவுக்கு நிலம் வழங்குவதை எதிர்த்து நீதிமன்றம் செல்ல ஜே.வி.பி. முடிவு
அக்கரைப்பற்று தபாலகக் கட்டிடத்தின் தரையைக் கிண்டி ஆயுதமிருக்கிறதாவென சோதனை
கைதான மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள் 36 பேர் விடுதலை
வவுனியா வடமேற்கில் படையினரின் மும்முனை முன்னேற்ற முயற்சி முறியடிப்பு
புல்மோட்டையில் கிளைமோர் தாக்குதல்
கொழும்பிலுள்ள புலிகளின் வலையமைப்பை அரசாங்கம் உடனடியாக அழிக்க வேண்டும்
கொழும்பில் தொடரும் குண்டுவெடிப்புகளையடுத்து பிரிட்டன் தனது பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை
பிரதமருடனான பேச்சு தோல்வியடைந்தால் 11,12 ஆம் திகதிகளில் சுகவீன லீவு போராட்டம்
வடபகுதி தென்னிலங்கை போக்குவரத்து இடைநிறுத்தம்
இராணுவத்திலிருந்து விலகிய 600 பேர் போக்குவரத்து சேவையில் நியமனம்
மண்டபம் அகதிகளை சந்தித்தார் வைகோ
கதிர்காமம் புனித பிரதேசத்தில் தீ விபத்து 42 கடைகள் எரிந்தன; 3 கோடி ரூபா நட்டம்
நடைமுறை சாத்தியங்களின் அடிப்படையில் கிடைத்ததை பெற்றுக் கொண்டு முன்னோக்கி செல்வதே சிறந்த வழி
எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து காலியில் ஐ.தே.கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கிழக்கு மாகாண சபையின் விசேட அமர்வில் ஆளுநர் முக்கிய உரை
சட்டவிரோத ஆயுதங்களால் வன்செயல்கள் அதிகரிப்பு களைவதற்கு சிவில் சமூகத்தின் ஒத்துழைப்புக்கு வேண்டுகோள்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com