Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, June 08, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
அக்கரைப்பற்று தபாலகக் கட்டிடத்தின் தரையைக் கிண்டி ஆயுதமிருக்கிறதாவென சோதனை
[08 - June - 2008] [Font Size - A - A - A]
*எதுவும் கிடைக்கவில்லை

அக்கரைப்பற்று பிரதம தபாற்கந்தோரினுள் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகாக் கூறி, தபாலகக் கட்டிடத்தின் நிலப்பகுதியை தோண்டி படையினர் சோதனையிட்ட போதும் எதுவும் கிடைக்கவில்லை.

அனாமதேயத் தகவலொன்றையடுத்தே நேற்றுக் காலை 8 மணியளவில் பொலிஸார் சகிதம் வந்த படையினர் களஞ்சியசாலையில் இந்த ஆயுதங்களைத் தேடிப் பார்த்துள்ளனர்.

அக்கரைப்பற்று, அம்பாறை வீதியிலுள்ள இந்த தபாற்கந்தோருக்கு 1.5 மில்லியன் ரூபா செலவில் புதிய கட்டிடத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் அஞ்சல் மற்றும் தொலைத் தொடர்பு அமைச்சர் மகிந்த விஜயசேகர, நீர் வழங்கல் வடிக்கால் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா ஆகியோர் திறந்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து இப் புதியகட்டிடத்தில் அஞ்சல் சேவைநடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் இக்கட்டிட களஞ்சிய அறையின் நிலப்பகுதியில் ஆயுதங்கள் இருப்பதாகக் கூறிநேற்றுக் காலை இராணுவத்தினர் இவ் அறையில் நிலப்பகுதிச் சிமெந்துத் தரையை உடைத்து சோதனை நடாத்தியுள்ளனர். எனினும் எதுவும் கிடைக்கவில்லை.

இது தொடர்பாக தமது அஞ்சல் திணைக்கள உயர் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக அக்கரைப்பற்று தபால் கந்தோர் அதிபர் யு.கே. றகுமான் தெரிவித்தார்.

இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் க. பத்மநாதன் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

இக் கட்டிடம் தனியார் நிறுவனமொன்றால் நிர்மாணிக்கப்பட்ட போதும் முறைப்படி தபாற்கந்தோரிடம் கையளிக்கப்படாமல் அரசியல் இலாபங்களுக்காக அவசர அவசரமாக திறந்துவைக்கப்பட்டது.

இத் தபாற்கந்தோர் தரம் 2 உடையது. இதனை சில அரசியல்வாதிகள் தமது பிரதேசத்திற்கு மாற்றுவற்காக கடந்த காலம் தொட்டு பல்வேறு அழுத்தங்களைக் கொடுத்துவந்தனர்.

அது சாத்தியப்படாது போகவே இதை மீண்டு தமது பிரதேசத்திற்கு மாற்றுவதற்கான ஒரு செயலாகவே இது தெரிகின்றது. எனவே இது தொடர்பாக அஞ்சல் தொலைத் தொடர்பு அமைச்சர் மகிந்தவிஜய சேகரவிடம் கடுங்கண்டனம் தெரிவித்து முறைப்பாடு செய்துள்ளதாக பத்மநாதன் தெரிவித்தார்.

Email this page Your Opinion Print this page
பாதுகாப்பில் மாற்றங்களை ஏற்படுத்த தீவிர நடவடிக்கை
முருங்கன் பகுதியில் குடும்பஸ்தர் சுட்டுக் கொலை
பூநகரி, முல்லைத்தீவு பகுதிகளில் இரு நாட்களாக கடும் விமானத் தாக்குதல்
பொதுமக்கள் படுகொலையையிட்டு தமிழ் கூட்டமைப்பு கடும் கவலை
திருமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக இளஞ்செழியன்
பஸ் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பாக விசேட பொலிஸ் குழுக்கள் தீவிர விசாரணை
மசகு எண்ணெய் விலை 139 டொலராக அதிகரிப்பு
பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் உடனடியாக முடிவுக்கு வரவேண்டும்
சம்பூரில் இந்தியாவுக்கு நிலம் வழங்குவதை எதிர்த்து நீதிமன்றம் செல்ல ஜே.வி.பி. முடிவு
அக்கரைப்பற்று தபாலகக் கட்டிடத்தின் தரையைக் கிண்டி ஆயுதமிருக்கிறதாவென சோதனை
கைதான மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள் 36 பேர் விடுதலை
வவுனியா வடமேற்கில் படையினரின் மும்முனை முன்னேற்ற முயற்சி முறியடிப்பு
புல்மோட்டையில் கிளைமோர் தாக்குதல்
கொழும்பிலுள்ள புலிகளின் வலையமைப்பை அரசாங்கம் உடனடியாக அழிக்க வேண்டும்
கொழும்பில் தொடரும் குண்டுவெடிப்புகளையடுத்து பிரிட்டன் தனது பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை
பிரதமருடனான பேச்சு தோல்வியடைந்தால் 11,12 ஆம் திகதிகளில் சுகவீன லீவு போராட்டம்
வடபகுதி தென்னிலங்கை போக்குவரத்து இடைநிறுத்தம்
இராணுவத்திலிருந்து விலகிய 600 பேர் போக்குவரத்து சேவையில் நியமனம்
மண்டபம் அகதிகளை சந்தித்தார் வைகோ
கதிர்காமம் புனித பிரதேசத்தில் தீ விபத்து 42 கடைகள் எரிந்தன; 3 கோடி ரூபா நட்டம்
நடைமுறை சாத்தியங்களின் அடிப்படையில் கிடைத்ததை பெற்றுக் கொண்டு முன்னோக்கி செல்வதே சிறந்த வழி
எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து காலியில் ஐ.தே.கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கிழக்கு மாகாண சபையின் விசேட அமர்வில் ஆளுநர் முக்கிய உரை
சட்டவிரோத ஆயுதங்களால் வன்செயல்கள் அதிகரிப்பு களைவதற்கு சிவில் சமூகத்தின் ஒத்துழைப்புக்கு வேண்டுகோள்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com