Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, June 08, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
பஸ் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பாக விசேட பொலிஸ் குழுக்கள் தீவிர விசாரணை
[08 - June - 2008] [Font Size - A - A - A]
மொறட்டுவ கட்டுப்பெத்த மற்றும் கண்டி பொல்கொல்ல பகுதிகளில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பஸ் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக விசேட பொலிஸ் குழுக்கள் தொடர்ந்தும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

இதேநேரம் இவ்விரு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாகவும் ஐம்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மொறட்டுவ கட்டுப்பெத்த பகுதியில் வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் 21 பயணிகள் கொல்லப்பட்டதுடன், 80 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இதேநேரம் கண்டி பொல்கொல்ல பகுதியில் இடம்பெற்ற பஸ் குண்டு வெடிப்பில் இருவர் கொல்லப்பட்டதுடன், 20 பேர் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதல்களையடுத்து மொறட்டுவ மற்றும் கட்டுப்பெத்த பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடத்தப்பட்ட தேடுதலில் மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள் எண்மர் உட்பட 58 பேர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டனர்.

எனினும் இதில் எட்டு மாணவர்களும் வெள்ளிக்கிழமை இரவு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஏனைய 50 பேரும் நேற்றுக் காலை மொறட்டுவ நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மூவரிடம் தீவிர விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தாக்குதலின் சூத்திரதாரி அடையாளங் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதல் தொடர்பாக விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

அத்துடன் கிளைமோர் பொருத்தப்பட்ட இடத்திற்குச் சமீபமாக மூன்று நாய்கள் இறந்தது தொடர்பாகவும் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். குண்டை பொருத்தியவர்கள்தான் இந்த நாய்களிற்கு நஞ்சூட்டிக் கொன்றார்களா அல்லது வேறு காரணங்கள் ஏதுமுள்ளதா என்பது குறித்து விசாரணைகளும் நடைபெறுகின்றன.

சம்பவம் நடைபெற்ற பகுதியிலும் மொறட்டுவ மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், வீதிச் சோதனைகளும் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

கண்டியில்

இதேநேரம் கண்டி பொல்கொல்ல பகுதியில் பயணிகள் பஸ்ஸில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு தொடர்பாகவும் பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் சம்பவத்தின் சூத்திரதாரியெனத் தெரிவித்துள்ள பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தனர்.

இதேநேரம் இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்ட இருவரில் ஒருவரது சடலம் நேற்று மாலை வரை அடையாளங் காணப்படவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டது.

Email this page Your Opinion Print this page
பாதுகாப்பில் மாற்றங்களை ஏற்படுத்த தீவிர நடவடிக்கை
முருங்கன் பகுதியில் குடும்பஸ்தர் சுட்டுக் கொலை
பூநகரி, முல்லைத்தீவு பகுதிகளில் இரு நாட்களாக கடும் விமானத் தாக்குதல்
பொதுமக்கள் படுகொலையையிட்டு தமிழ் கூட்டமைப்பு கடும் கவலை
திருமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக இளஞ்செழியன்
பஸ் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பாக விசேட பொலிஸ் குழுக்கள் தீவிர விசாரணை
மசகு எண்ணெய் விலை 139 டொலராக அதிகரிப்பு
பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் உடனடியாக முடிவுக்கு வரவேண்டும்
சம்பூரில் இந்தியாவுக்கு நிலம் வழங்குவதை எதிர்த்து நீதிமன்றம் செல்ல ஜே.வி.பி. முடிவு
அக்கரைப்பற்று தபாலகக் கட்டிடத்தின் தரையைக் கிண்டி ஆயுதமிருக்கிறதாவென சோதனை
கைதான மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள் 36 பேர் விடுதலை
வவுனியா வடமேற்கில் படையினரின் மும்முனை முன்னேற்ற முயற்சி முறியடிப்பு
புல்மோட்டையில் கிளைமோர் தாக்குதல்
கொழும்பிலுள்ள புலிகளின் வலையமைப்பை அரசாங்கம் உடனடியாக அழிக்க வேண்டும்
கொழும்பில் தொடரும் குண்டுவெடிப்புகளையடுத்து பிரிட்டன் தனது பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை
பிரதமருடனான பேச்சு தோல்வியடைந்தால் 11,12 ஆம் திகதிகளில் சுகவீன லீவு போராட்டம்
வடபகுதி தென்னிலங்கை போக்குவரத்து இடைநிறுத்தம்
இராணுவத்திலிருந்து விலகிய 600 பேர் போக்குவரத்து சேவையில் நியமனம்
மண்டபம் அகதிகளை சந்தித்தார் வைகோ
கதிர்காமம் புனித பிரதேசத்தில் தீ விபத்து 42 கடைகள் எரிந்தன; 3 கோடி ரூபா நட்டம்
நடைமுறை சாத்தியங்களின் அடிப்படையில் கிடைத்ததை பெற்றுக் கொண்டு முன்னோக்கி செல்வதே சிறந்த வழி
எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து காலியில் ஐ.தே.கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கிழக்கு மாகாண சபையின் விசேட அமர்வில் ஆளுநர் முக்கிய உரை
சட்டவிரோத ஆயுதங்களால் வன்செயல்கள் அதிகரிப்பு களைவதற்கு சிவில் சமூகத்தின் ஒத்துழைப்புக்கு வேண்டுகோள்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com