Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, June 08, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
திருமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக இளஞ்செழியன்
[08 - June - 2008] [Font Size - A - A - A]
வவுனியா மாவட்ட நீதிபதியாக கடந்த 9 வருடமாகக் கடமையாற்றிய நீதிபதி எம்.இளஞ்செழியன் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக (ஆணையாளர்) பிரதம நீதியரசர் சரத் என் சில்வா முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.

இந்த நியமனம் அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் பிரதம நீதியரசர் தலைமையிலான நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் சிபார்சின் அடிப்படையில் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டுள்ளது.

16.05.2008 முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்ட இந்த நியமனம் 05.06.2008 அன்று வைபவ ரீதியாக பிரதம நீதியரசரால் வழங்கப்பட்டது.

இவர் கடந்த 9 வருடங்களாக வவுனியா மாவட்ட நீதிபதியாக கடமையாற்றியுள்ளார். மூன்று வருடம் மன்னார் மாவட்ட நீதிபதியாகவும் ஒரு வருடம் யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழி வழக்கின் விசேட நீதிபதியாகவும் கடமையாற்றியுள்ளார்.

கடந்த 12 வருட காலமாக வடக்கில் நீதிபதியாக கடமையாற்றியுள்ள இளஞ்செழியன் மேல் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றதையடுத்து கிழக்கு மாகாணத்தில் திருமலை மாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் மாவட்ட நீதிபதியாகவும் நீதிவானாகவும் கடமையாற்றிய போது செம்மணி புதைகுழி வழக்கு, மன்னார் காமலிட்டா பாலியல் வல்லுறவுக் கொலை வழக்கு, மடு தேவாலய குண்டுத்தாக்குதல் வழக்கு, லயன் ஏயார் விமான விபத்து வழக்கு, வவுனியா தாண்டிக்குளம் விவசாயக் கல்லூரி மாணவர் கொலை வழக்கு மற்றும் அண்மையில் வேப்பங்குளத்தில் 5 அப்பாவி இளைஞர்கள் கொலை வழக்கு போன்ற பிரபல வழக்குகளில் நீதிபதியாக கடமையாற்றியவர்.

இவர் கொழும்பு பல்கலைக்கழக சட்டமாணியும் கொழும்பு பல்கலைக்கழக சட்டமுதுமாணியும், கொங்ஹொங் பல்கலைக்கழக சட்ட முதுமானியுமாவார். மறைந்த பிரபல சட்டத்தரணி குமார் பொன்னம்பலத்தின் சட்டப் பாசறையில் வளர்ந்த இவரை அமெரிக்க அரசு கௌரவ விருந்தினராக அழைத்து கௌரவ பிரஜாவுரிமை பட்டமும், மாநில மேயர் அந்தஸ்தும் வழங்கிக் கௌரவித்ததும் குறிப்பிடத்தக்கது.

இவர் யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி பழைய மாணவராவார். வேலணை திரு.திருமதி மாணிக்கவாசகர் ஆசிரியர், அதிபர் தம்பதிகளின் புதல்வருமாவார்.

Email this page Your Opinion Print this page
பாதுகாப்பில் மாற்றங்களை ஏற்படுத்த தீவிர நடவடிக்கை
முருங்கன் பகுதியில் குடும்பஸ்தர் சுட்டுக் கொலை
பூநகரி, முல்லைத்தீவு பகுதிகளில் இரு நாட்களாக கடும் விமானத் தாக்குதல்
பொதுமக்கள் படுகொலையையிட்டு தமிழ் கூட்டமைப்பு கடும் கவலை
திருமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக இளஞ்செழியன்
பஸ் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பாக விசேட பொலிஸ் குழுக்கள் தீவிர விசாரணை
மசகு எண்ணெய் விலை 139 டொலராக அதிகரிப்பு
பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் உடனடியாக முடிவுக்கு வரவேண்டும்
சம்பூரில் இந்தியாவுக்கு நிலம் வழங்குவதை எதிர்த்து நீதிமன்றம் செல்ல ஜே.வி.பி. முடிவு
அக்கரைப்பற்று தபாலகக் கட்டிடத்தின் தரையைக் கிண்டி ஆயுதமிருக்கிறதாவென சோதனை
கைதான மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள் 36 பேர் விடுதலை
வவுனியா வடமேற்கில் படையினரின் மும்முனை முன்னேற்ற முயற்சி முறியடிப்பு
புல்மோட்டையில் கிளைமோர் தாக்குதல்
கொழும்பிலுள்ள புலிகளின் வலையமைப்பை அரசாங்கம் உடனடியாக அழிக்க வேண்டும்
கொழும்பில் தொடரும் குண்டுவெடிப்புகளையடுத்து பிரிட்டன் தனது பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை
பிரதமருடனான பேச்சு தோல்வியடைந்தால் 11,12 ஆம் திகதிகளில் சுகவீன லீவு போராட்டம்
வடபகுதி தென்னிலங்கை போக்குவரத்து இடைநிறுத்தம்
இராணுவத்திலிருந்து விலகிய 600 பேர் போக்குவரத்து சேவையில் நியமனம்
மண்டபம் அகதிகளை சந்தித்தார் வைகோ
கதிர்காமம் புனித பிரதேசத்தில் தீ விபத்து 42 கடைகள் எரிந்தன; 3 கோடி ரூபா நட்டம்
நடைமுறை சாத்தியங்களின் அடிப்படையில் கிடைத்ததை பெற்றுக் கொண்டு முன்னோக்கி செல்வதே சிறந்த வழி
எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து காலியில் ஐ.தே.கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கிழக்கு மாகாண சபையின் விசேட அமர்வில் ஆளுநர் முக்கிய உரை
சட்டவிரோத ஆயுதங்களால் வன்செயல்கள் அதிகரிப்பு களைவதற்கு சிவில் சமூகத்தின் ஒத்துழைப்புக்கு வேண்டுகோள்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com