இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய 3 நாடுகளின் கிரிக்கெட் அணிகள் பங்குபற்றும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டி இன்று 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பங்களாதேஷில் ஆரம்பமாகின்றது. இப்போட்டி 14 ஆம் திகதி சனிக்கிழமை வரை நடைபெறும்.
ஒவ்வொரு அணியும் மற்றைய அணியுடன் ஒரு முறை போட்டியிடும். இப்போட்டியில் கூடிய புள்ளிகளைப் பெறும் இரு அணிகளுக்கிடையிலான இறுதி ஆட்டம் 14 ஆம் திகதி நடைபெறும்.