Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, July 21, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
யுத்தம் நடைபெறும் நாட்டில் வாழ்க்கைச் செலவும் நெருக்கடிகளும் இருக்கும் என்கிறார் அமைச்சர் டலஸ்
[21 - July - 2008] [Font Size - A - A - A]
மன்னாரில் விடத்தல் தீவை எமது படையினர் தீரத்துடன் போராடி கைப்பற்றியுள்ளனர். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீட்டு வாசல் அருகில் எமது படையினரின் வெடிச்சத்தங்கள் கேட்டவண்ணமுள்ளன. விரைவில் சகல பிரச்சினைகளுக்கும் முடிவு காணப்பட்டு சகல இன மக்களுக்கும் வளமான வாழ்வை எமது அரசு வழங்கியே தீரும்.

போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும இவ்வாறு தெரிவித்தார்.

திக்குவெல்லை ரதம்பொலையில் உள்ள கிராமிய வைத்தியசாலைக்கு 83 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இரண்டு மாடிக் கட்டிடத்துக்கும், 120 இலட்சம் ரூபா செலவில் வாவி ஒன்றை புனரமைக்கவும் அத்திவாரக் கல்லை நாட்டும் வைபவத்தில் அமைச்சர் உரையாற்றும் போதே இவ்வாறு கூறினார்.

போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும தொடர்ந்து பேசுகையில்;

யுத்தம் ஒன்று நடைபெறுகின்ற நாட்டில் வாழ்க்கைச் செலவு அதிகரிக்கத்தான் செய்கிறது. நெருக்கடிகள் இருக்கத்தான் செய்கிறது அரைப்பட்டினி இருந்தாவது பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டை மீட்டெடுப்போம்.

அரசாங்கம் இன்று பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதை சில பிற்போக்குச் சக்திகள் பொறுக்க முடியாது அரசுக்கெதிராக பொய்ப் பிரசாரங்களை கட்டவிழ்த்துக் கொண்டிருக்கின்றன. இதனை பொதுமக்கள் நம்புவதேயில்லை. ஐ.தே.க. இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த நாளிலிருந்தே அதனைக் கவிழ்த்துவிட இல்லாத பொல்லாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த அரசாங்கத்துக்கு ஆரம்பத்தில் ஆதரவு வழங்கிய ஜே.வி.பி. யினரும் இப்போது ஐ.தே.க.வுடன் சேர்ந்து அரசைக் கவிழ்க்க வழி தேடுகிறது.

மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி தற்காலிகமானதே. இன்னும் 6 மாதத்தில் அல்லது ஒரு வருடத்துக்குள் நாம் பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை மீட்டெடுப்போம். அதன் பின் இந்த நெருக்கடிகளிலிருந்து மக்களை விடுவித்து வளமான வாழ்வை அவர்களுக்கு வழங்குவோம்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசு இன்று இரண்டு குறிக்கோள்களை முன்னெடுத்துச் செல்கிறது. ஒன்று பயங்கரவாதத்தை அடியோடு ஒழிப்பது. மற்றது மகிந்த சிந்தனையை நிறைவேற்றுவது மகிந்த சிந்தனையின் மூலம் தான் யுத்தம் செய்து கொண்டிருக்கையிலேயே அபிவிருத்தித் திட்டங்களையும் அரசு செய்கிறது.

நடைபெறப்போகின்ற சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தலிலும், வடமத்திய மாகாண சபைத் தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சி மண் கவ்வப்போவது நிச்சயமாகிவிட்டது.

கொழும்பில் இருந்து முதலமைச்சர் வேட்பாளர்களை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு ஐக்கிய தேசியக்கட்சி வங்குரோத்து நிலையில் உள்ளது. இவர்கள் என்ன சொன்னாலும் மக்களின் ஆதரவு எமக்கே உள்ளது! அரசை எவராலும் அசைக்க முடியாது.

அண்மையில் ஜே.வி.பி.யும், ஐக்கிய தேசியக்கட்சியும் சேர்ந்து நடத்திய வேலைநிறுத்தப் போராட்டமும் படுதோல்வியில் முடிவுற்றது என்றார்.

அமைச்சர் ஜயரட்ண ஹேரத்

சுகாதார நோய் நிவாரண போஷாக்கு அமைச்சர் ஜயரட்ண ஹேரத் தமது உரையில் கூறியதாவது;

அமைச்சர் டலஸ் அழகப்பெரும தனது சொந்த ஊரான திக்குவல்லை ரதம்பொலயில் மட்டுமல்ல ஏனைய பகுதிகளுக்கும் சிறந்த சேவைகளையாற்றிவருகின்றனர் என்றார்.

வேறு பலரும் இதில் உரையாற்றினார்கள்.

Email this page Your Opinion Print this page
சார்க் உச்சிமாநாட்டை இடையூறின்றி நடத்துவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி
காரைதீவில் நள்ளிரவு குடும்பஸ்தர் சுட்டுக்கொலை
வத்தளை வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி
இலுப்பைக்கடவை படையினர் வசம்
தொலைக்காட்சிப் பெட்டி வீழ்ந்து குழந்தை மரணம்
"சார்க்' மாநாட்டு பாதுகாப்பு நடவடிக்கையால் 10 ஆயிரம் கூலித்தொழிலாளர்கள் வேலை இழப்பு
முழங்காவிலில் முப்படையும் தாக்குதல் 10 பேர் படுகாயம்; மக்கள் தப்பியோட்டம்
400 ஊழியரை பணியிலிருந்து நிறுத்த ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் திட்டம்
கிழக்கில் ஜனநாயகம் நிலவுவதாக அரசு கூறுகிறது ஆனால் ஆயுதக் குழுவே மாகாண சபையை நிர்வகிக்கிறது
2008 இல் 5 ஆயிரம் புலிகள் பலி பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு
5 தமிழ் இளைஞர்கள் சப்புகஸ்கந்தவில் கைது
கிழக்கு மாகாண சபை அமர்வு நாளை மீண்டும் ஆரம்பம்
முகமாலை முன்னரங்குகள் மீது புலிகள் வலிந்த தாக்குதலை நடத்த வேண்டும்
விமானநிலைய தீர்வையற்ற கடைகளில் மின் உபகரண கொள்வனவுக்கு கட்டுப்பாடு
அம்பாறையில் 2 படையினர் பலி
கொழும்பில் நடக்கவுள்ள சார்க் மாநாட்டை ஒரு போதும் நாம் சீர்குலைக்கமாட்டோம்
தனது உயிருக்கு ஆபத்தேற்பட்டால் அரசே பொறுப்பென்கிறார் ஜானகபெரேரா
சார்க் மாநாட்டை முன்னிட்ட கட்டுப்பாடுகளால் உல்லாச ஹோட்டல்களுக்கு வருமானம் இழப்பு
கொள்ளையில் ஈடுபட்ட இரு பொலிஸார் கைது
காரைதீவு கடலில் மூழ்கிய இரு மாணவர்களது சடலங்கள் நேற்றுக்காலை கரையொதுங்கின
4 சந்தேக நபர்களுக்கு தொடர்ந்து விளக்கமறியல்
தந்தையின் குற்றத்தால் மகள் தீ மூட்டி தற்கொலை
"மகிந்த ராஜபக்ஷ இருக்கும்வரை ஐக்கிய தேசிய கட்சியால் எந்தவகையிலும் வெற்றிபெற முடியாது'
ஜனாதிபதிக்கு வால்பிடிப்பவர்களே சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு நியமனமென ஐ.தே.க. விசனம்
தெற்காசிய மக்கள் மாநாடு 2008 இல் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
நுளம்பால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த மருந்தூட்டப்பட்ட வலைகள் விநியோகம்
யாழ். குடாநாட்டு மக்களின் சமூக வாழ்வோடு அகதிகள் புனர்வாழ்வு நிறுவனத்திற்கு நீண்ட தொடர்புண்டு
அட்டன் சிரேஷ்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வீதி சோதனை நடவடிக்கைகள் தீவிரம்
யாழ். மாவட்டத்தில் வாக்காளர் இடாப்புகள் திருத்தும் பணிகள் 23 ஆம் திகதி ஆரம்பம்
குடாநாட்டில் சி.டி.எம்.ஏ. தொலைபேசி பாவனையாளர்கள் பொலிஸ் அனுமதியைப் பெற்றால் மட்டுமே மீள இணைப்பு
அடுத்த 10 வருடங்களுக்கு ஐ.தே.க. அதிகாரத்துக்கு வரமுடியாது
நல்லூர் கந்தன் வருடாந்த மகோற்சவம் அனைத்து சேவைகளுக்கும் ஏற்பாடு
"பதவிக்கும் கோடிப்பணத்திற்குமாக வாக்களித்த மக்களை கைவிட்டு கட்சிமாறுபவனல்ல நான்'
சகல இன மக்களுக்குரிய உரிமைகள் வழங்கப்படாமையே ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய நிலைக்கு காரணம்
ஒவ்வொருவரும் தத்தமது குடும்ப வருமானத்தை உயர்த்த வழி காண்பதே இன்றைய உடனடித் தேவை
யுத்தம் நடைபெறும் நாட்டில் வாழ்க்கைச் செலவும் நெருக்கடிகளும் இருக்கும் என்கிறார் அமைச்சர் டலஸ்
அன்னை, சுவாமி ஆகியோரின் மறைவு அநுராதபுர இந்துக்களுக்கு பேரிழப்பாகும்
இலங்கை வீரர்களுக்கு டெஸ்ட் தொடரில் இஷாந்த் சர்மா கடும் நெருக்கடி கொடுப்பார்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com