வடபகுதி யுத்தத்தில் இந்த வருடம் மட்டும் இதுவரை ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் கடந்த ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் கடந்த வெள்ளிக்கிழமை வரையான காலப் பகுதியில் 5,036 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் மிகப் பெருமளவான புலிகள் காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தக் காலப் பகுதியில் புலிகளுடனான போரில் 446 படையினர் மட்டுமே கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26 ஆம் திகதி திருகோணமலை மாவிலாறு பகுதியில் மோதல்கள் ஆரம்பமானது முதல் மூன்றில் இரண்டு விடுதலைப் புலிகளை அழித்து விட்டதாகவும் 9000க்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா அண்மையில் கூறியிருந்த நிலையில் தற்போது இந்த வருடம் யுத்தத்தில் மட்டும் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும், தங்கள் இழப்புகள் குறித்து புலிகள் இதுவரை எந்தத் தகவல்களையும் வெளியிடாத அதேநேரம், தங்களது இழப்புகளை முழுமையாக மூடி மறைத்து வரும் படைத் தரப்பு தங்களது இழப்புகள் குறித்து மிகவும் மிகைப்படுத்தப்பட்ட தகவல்களை கூறிவருவதாக புலிகள் கூறுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது. யுத்தம் நடைபெறும் பகுதிகளுக்கு ஊடகவியலாளர்கள் செல்வதற்கு படைத்தரப்பு அனுமதி மறுத்து வருவதால் உண்மைத் தகவல்களை அறிய முடியாதுள்ளது.காப்பு அமைச்சு தெரிவிப்பு