Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, July 23, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
வடமேல் மாகாண கல்வித்தரம் 2010இல் முதல் இடத்துக்கு வர நாம் செயற்படுகின்றோம்
[23 - July - 2008] [Font Size - A - A - A]
* முதலமைச்சர் அத்துல விஜேசிங்க

கல்வி நிலையில் இரண்டாம் இடத்தில் உள்ள வடமேல் மாகாணத்தின் கல்வித்தரம் 2010ஆம் ஆண்டுக்குள் முதலாம் இடத்துக்குக் கொண்டுவரப்படவேண்டும் என்ற முயற்சியை எடுத்துவருவதாக வடமேல் மாகாண முதலமைச்சர் அத்துல விஜேசிங்க தெரிவித்தார்.

புத்தளம் வலயத்திற்குட்பட்ட தமிழ், சிங்கள மொழி மூலமான 272 தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

புத்தளம் புனித அன்?ஸ் மத்திய கல்லூரியில் நடைபெற்ற இவ்வைபவத்தில் முதலமைச்சர் அத்துல விஜேசிங்க தொடர்ந்து பேசுகையில்;

""நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த ஆசிரியர் உதவியாளர் நியமனம் இன்று வழங்கப்படுவது குறித்து நான் மகிழ்ச்சி அடைகின்றேன். ஏனெனில், இந்த வகையிலான நியமனம் இதுவே கடைசியாக இருக்கும் என்று கருதப்படுகின்றது. தவிர இனிவரும் ஆசிரியர் நியமனங்கள் பட்டதாரிகளுக்கே வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு கொள்கை அளவில் தீர்மானித்துள்ளது.

சுமார் 756 தமிழ், சிங்கள மொழி மூல ஆசிரியர் உதவியாளர்களுக்கு நாம் நியமனம் வழங்கியுள்ளோம். இது ஒரு பெருமைக்குரிய விடயமாகும்.

வட மாகாணத்தில் இருந்து வந்து இங்கு தொண்டர் ஆசிரியர்களாக சேர்ந்து பணியாற்றிய கணிசமானவர்களுக்கு ஆசிரியர் உதவியாளர்கள் நியமனங்கள் வழங்கப்பட்டு, எமது வலயத்தில் கடமையாற்ற ஒழுங்குகள் செய்யப்பட்டன.

அப்படியாயின் எமது வலயத்தில் தொண்டர் ஆசிரியர்களாக நீண்டகாலம் பணியாற்றுகின்ற இளைஞர், யுவதிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்த சமயத்தில் வட மாகாணத்தில் இருந்து வந்துள்ளவர்கள் ஆசிரியர் உதவியாளர்கள் எமது மாகாணசபைக்குரிய பாடசாலைகளில் கடமையாற்றுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்ற தகவலை சகல பாடசாலைகளுக்கும் அறிவித்தோம்.

இது குறித்து கல்வி அமைச்சர் என்னுடன் தொடர்புகொண்டபோது வடக்கு, கிழக்கு மாகாணச் செயலாளர், வடமேல் மாகாணத்தில் ஆசிரியர் உதவியாளர்களை நியமிப்பதற்கு அதிகாரத்தை கொடுத்திருப்பாராயின் எமக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த ஆசிரியர் உதவியாளர்களை நியமிப்பதற்கு அதிகாரம் தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். அவ்வாறு இல்லையெனில் எமது கல்வி வலயத்தில் பணியாற்றுகின்ற சகலருக்கும் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தேன்.

இந்த ஆசிரியர் உதவியாளர்கள் நியமிப்பதில் ஜனாதிபதி அமைச்சரவை மற்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த ஆகியோரின் ஒத்துழைப்பும் கிடைத்தது. நாம் இவர்களுக்கு நன்றி கூறவேண்டும்.

கால்நடை அபிவிருத்தி பிரதியமைச்சர் கே.ஏ.பாயிஸ் மாகாணசபை உறுப்பினர்களான எஸ்.ஏ.எஹியா மற்றும் என்.ரீ.எம்.தாஹீர் ஆகியோருடன் நானும் கல்வி அமைச்சரைச் சந்தித்து கலந்துரையாடினோம். ஆசிரியர் நியமனத்திற்கான அனுமதியைப் பெற்றோம். இது எமக்குக் கிடைத்த வெற்றியாகும்.

ஆசிரியர் பதவி சமூகத்திற்கு தொண்டாற்றுகின்ற பதவியாகும். எனவே, அதனை பெற்றுள்ள ஆசிரியர் உதவியாளர்கள் மனித நேயம் மிகுந்தவர்களாக தம்மிடம் ஒப்படைக்கப்படும் மாணவச் செல்வங்களுக்கு நல்ல கல்வியையும் ஒழுக்கத்தையும் சிறந்த பண்பாட்டையும் ஊட்டி உருவாக்க ஒத்துழைக்க வேண்டும்' என்றார்.

சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்ட கால்நடை அபிவிருத்தி பிரதியமைச்சர் கே.ஏ.பாயிஸ் பேசுகையில்;

பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்படும் மாணவர்களில் 5 சதவீதம் கூட புத்தளம் பிரதேசத்தில் இருந்து தெரிவுசெய்யப்படுவதில்லை. அது தவிர மருத்துவ விஞ்ஞானப் பட்டதாரிகளின் தொகையும் மிக மிக குறைவாகவே உள்ளது. இதனைக் கொண்டு புத்தளம் பிரதேசத்தின் கல்வித்தர வீழ்ச்சியை ஓரளவு சுட்டிக்காட்ட முடியும்.

நாம் அண்மையில் கல்வி அமைச்சருடன் எமது கல்விப் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடினோம். அவ்வாறே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருடனும் உரையாடினோம். வயம்ப பல்கலைக்கழக பிரிவு ஒன்றையும் ஆசிரியர் கல்வி பிரிவு ஒன்றையும் திறந்த பல்கலைக்கழகப் பிரிவு ஒன்றையும் புத்தளத்தில் அமைக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளன' என்றார்.

இவ்வைபவத்தில் அமைச்சர் மில்றோய் பெர்னாண்டோ வடமேல் மாகாண அமைச்சர் பீ.விக்டர் அன்டனி பெரேரா உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

Email this page Your Opinion Print this page
நம்பிக்கை வாக்கெடுப்பில் இந்திய அரசு வெற்றி
யுத்த நிறுத்த அறிவிப்பை வரவேற்கிறது ஐ.தே.க.
சாவகச்சேரியில் பாரிய சுற்றிவளைப்பு, தேடுதல் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோரிடம் விசாரணை
சார்க் அமைப்பின் தலைவராக ராஜபக்ஷ வருவதைத்தவிர உச்சி மாநாட்டால் இலங்கைக்கு எந்த நன்மையும் இல்லை
மீசாலையை சேர்ந்தவர் நெல்லியடியில் சுட்டுக்கொலை
உடையார்கட்டு குளம் மீது கடும் விமானத்தாக்குதல்
மீள் குடியேற்றத்துக்கு பொறுப்பாக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி
புல்மோட்டை கடலில் கடும் சமர் புலிகளின் படகு மூழ்கடிப்பு
தெகிவளையில் 2 தமிழர்கள் கடத்தல்
வடமத்திய, சப்ரகமுவ மாகாணங்களில் தேர்தல் வன்முறைகள் நாளுக்குநாள் அதிகரிப்பு
7 மாதங்களில் 240 புலிகளின் உடல்கள் ஐ.சி.ஆர்.சி.யூடாக ஒப்படைப்பு
ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள் கலரியில் இருந்தவேளை சபையில் அமைச்சர் டக்ளஸ் சிவாஜிலிங்கம் வாய்ச்சண்டை
புலிகளின் அறிவிப்புக்கு அரசின் உதாசீனம் நேர்மையான தீர்வு கிடையாது என்பதன் வெளிப்பாடு
உள்நாட்டு யுத்தம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதால் மிக மோசமான நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளோம்
"ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்மக்கள் வாக்களிக்க வேண்டும்'
தேர்தல் பிரசாரத்தின் போது அரச சொத்துகளை கட்சிகள் துஷ்பிரயோகம் செய்வதாக முறைப்பாடு
உலக சனத்தொகையில் 23 சதவீதமானோருக்கு தலைமைதாங்கும் பொறுப்பு சார்க் மூலம் ஜனாதிபதிக்கு கிடைக்கும்
மீனவர்கள் காலியில் ஆர்ப்பாட்டம்
ஆடி அமாவாசை விரதம் தொடர்பாக பஞ்சாங்கங்கள் கருத்து வேறுபாடு
வெள்ளத்தில் மூழ்கி 2 வயதுக்குழந்தை பலி
வவுனியாவில் இம்மாத முற்பகுதியில் கடத்தப்பட்டவர் திங்கள் இரவு சுட்டுக்கொலை
கிழக்கு மாகாணத்தில் எமது அரசியல் செயற்பாடுகளை முடக்கும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு
ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற பிரதிநிதிகள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் சந்திப்பு
மன்னார் ஆயர் இல்லத்திற்கு எடுத்துவரப்பட்டுள்ள மடுமாதா தேவாலய திருச்சொரூபம்
யாழ்.உரும்பிராயில் இளைஞர் சுட்டுக்கொலை
நவாலியில் கொள்ளையர்கள் அட்டகாசம் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
பொறிவெடியில் சிக்கி இரு படையினர் காயம்
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை இந்திய நிறுவனத்துடன் இணைந்து இயக்க ஏற்பாடு
புலிகளின் குரல் போராளி கலைஞர் கலையரசன் மரணம்
மதவழிபாட்டு தலங்களுக்கு மின்கட்டண சலுகை வழங்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆலோசனை
மீண்டும் எம்.பி.யாக ஹசன் அலி சத்தியப்பிரமாணம்
வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஐ.தே.கட்சி ஆதரவு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தால் பங்கேற்பு
நேபாளத்தில் புதிய அரசாங்கத்தை அமைக்க மாவோயிஸ்ட்டுகள் மறுப்பு
பொய்ச்சாட்சியம் அளித்த பதிவாளருக்கும் மனைவிக்கும் இரண்டு வருட கடூழியச்சிறை
திருமணமான முன்னாள் காதலியை குத்தி கொலைசெய்த நபருக்கு மரண தண்டனை
மனித உரிமை பாதுகாவலர்களுக்கு ஆறு மாதகால பயிற்சிநெறி
"கடல்கோள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு யூ.என்.டி.பி. உதவ வேண்டும்'
சிறுபான்மையின மக்களுக்கெதிரான அச்சுறுத்தல்கள் முற்றாக அகற்றப்பட வேண்டும்
மலையக சமூகம் கல்வியில் அபிவிருத்தி காண்கின்றபோதும் அரசறிவியல் கல்வியில் போதிய மாற்றங்கள் இல்லை
இரத்தினபுரி மாவட்ட மக்கள் தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தி ம.ம.மு. வெற்றிபெறச் செய்ய வேண்டும்
பாண்டிருப்பு கிராம விளையாட்டு மைதானத்தின் தடுப்பு சுவர் அமைக்க 32 இலட்சம் ரூபா ஒதுக்கீடு
வடமேல் மாகாண கல்வித்தரம் 2010இல் முதல் இடத்துக்கு வர நாம் செயற்படுகின்றோம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com