திக்குவல்ல கொலை வழக்கின் விசாரணை முடிவில் எதிரிக்கு மாத்தறை மேல் நீதிமன்ற நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது.
தனது முன்னாள் காதலியான இரு பிள்ளைகளின் தாயான றோகினி (30 வயது) என்ற குடும்பப் பெண்ணை 1999 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் திகதி கத்தியால் குத்திக் கொலை செய்ததாக ரஞ்சன் என்பவர் மீது குற்றஞ்சாட்டி இந்த வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
திக்குவல்ல பகுதியில் வாழ்ந்துவந்த எதிரியும் இறந்த பெண்ணும் 15 வருடங்களுக்கு முன்னர் காதலித்து வந்துள்ளனர். பின்னர் அப்பெண் காதலனை கைவிட்டு வேறு ஒருவரைத் திருமணம் செய்து இரு பிள்ளைகளுக்கும் தாயானார்.
1997 ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு பெற்று வெளிநாடு சென்று 1999 இல் நாடு திரும்பியிருந்தார்.
சம்பவதினம் வங்கிக்கு அவர் ஆட்டோவில் கணவனுடனும் இரு பிள்ளைகளுடனும் வந்துள்ளார்.
அப்போது எதிரி ஆட்டோவை மறித்து அப்பெண்ணை தன்னுடன் வருமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு அப்பெண் மறுக்கவே தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அப்பெண்ணைக் குத்திக்கொலை செய்துள்ளார். இவ்வாறு வழக்கு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
இப்பெண் திருமணமான பின்னரும் எதிரி அவருக்கு அடிக்கடி தன்னுடன் வருமாறு மிரட்டல் விடுத்துவந்ததாகவும் சாட்சியங்கள் மூலம் தெரியவந்தது.
விசாரணை முடிவில் எதிரியைக் குற்றவாளியாகக் கண்ட மாத்தறை மேல் நீதிமன்ற நீதிபதி பிரிதி பத்மசூரசேன அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.