கொலை வழக்கில் பொய்ச்சாட்சியம் அளித்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட பிறப்பு, இறப்பு, திருமண பதிவாளருக்கும் அவரது மனைவிக்கும் காலி மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரசேன ராஜபக்ஷ தலா இரண்டு வருடங்கள் கடூழியச்சிறைத் தண்டனையும், 2500 ரூபா அபராதமும் விதித்துள்ளார்.
2003 மே 01 ஆம் திகதி அக்மீமன பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட எதிரியான தனது மகனைக் காப்பாற்ற இவர்கள் இருவரும் முன்னுக்குப்பின் முரணான முறையில் சாட்சியம் அளித்ததாக தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்டவர் பதிவாளரின் மருமகன் என்றும் இவரின் மகளைத் திருமணம் செய்தவர் என்றும் விசாரணையில் தெரிவிக்கப்படுகிறது.
விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது பதிவாளரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
அபராதத்தைச் செலுத்தத் தவறினால் மேலும் ஒரு வருட சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தமது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
இந்ச்த பதிவாளரின் பதவியையும் இரத்து செய்யுமாறும் நீதிமன்றம் நீதியமைச்சருக்கு அறிவித்துள்ளது.