Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, July 23, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற பிரதிநிதிகள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் சந்திப்பு
[23 - July - 2008] [Font Size - A - A - A]
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவினர் நேற்று செவ்வாய்க்கிழமை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

கொழும்பில் நேற்று மாலை 6.30 மணி தொடக்கம் இரவு 8 மணி வரை நடைபெற்ற இந்த விசேட சந்திப்பின் போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற பிரதிநிதிகள் அடங்கிய குழுவினருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், செல்வம் அடைக்கலநாதன், செல்வி.ந.தங்கேஸ்வரி, இமாம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இச்சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போதைய அரசியல் நெருக்கடி நிலைமைகள் மற்றும் தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் அரசபயங்கரவாதத்தின் தொடர்ச்சியான நடவடிக்கைகள் தொடர்பாக வலியுறுத்திக் கூறியுள்ளனர்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பையேற்றதற்கு பின்னரான காலப்பகுதியில் குறிப்பாக இன்றுவரை நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள் தலைநகர் கொழும்பில் கடத்தப்பட்டு கப்பம் பெறப்பட்ட நிலையிலும் காணாமல் போயுள்ளனர்.

மேலும் பலர் படுகொலை செய்யப்பட்டு அடையாளம் காணப்படமுடியாத நிலைமையில் அழிக்கப்பட்டுள்ளார்கள். இன்னும் நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள், யுவதிகள் பல தடுப்பு முகாம்களில் எந்தவொரு விசாரணைகளுமின்றி மாதக்கணக்கில், வருடக்கணக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

இதனை விட வடக்கு, கிழக்கு தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று மக்கள் பிரதிநிதிகள் அரசின் அதிஉயர் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதுவரை அது தொடர்பான எந்தவொரு நீதியான விசாரணைகளும் இடம்பெறவில்லை.

தமிழ்மக்களின் தாயகப் பிரதேசமான வடக்கும் கிழக்கும் சட்டத்தின் துணை கொண்டு இரண்டாக பிளவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது மக்களிடமிருந்த இறுதி நம்பிக்கையையும் இல்லாமல் செய்துவிட்டது.

ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவின் இன்றைய அரசாங்கம் யுத்த நிகழ்ச்சி நிரலையே தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது. போரின் மனித அவலங்களை கேளிக்கையாக கொண்டாடுகின்றது.

கிழக்கில் ஆயுதக் குழுவொன்றின் துணையுடன் மோசடியான தேர்தல் ஒன்றை அரசாங்கம் அரங்கேற்றியுள்ளது, இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முற்றாக நிராகரிக்கின்றது.

இலங்கையின் இன நெருக்கடிக்கு நீதியானதும் அமைதியானதுமான தீர்வொன்று காணப்பட வேண்டுமெனில் அதற்கு சர்வதேசத்தின் பங்களிப்பே அவசியமானதொன்றாகும். அதனை ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு முன்னெடுக்க வேண்டுமென்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்திக் கோரியுள்ளது.

Email this page Your Opinion Print this page
நம்பிக்கை வாக்கெடுப்பில் இந்திய அரசு வெற்றி
யுத்த நிறுத்த அறிவிப்பை வரவேற்கிறது ஐ.தே.க.
சாவகச்சேரியில் பாரிய சுற்றிவளைப்பு, தேடுதல் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோரிடம் விசாரணை
சார்க் அமைப்பின் தலைவராக ராஜபக்ஷ வருவதைத்தவிர உச்சி மாநாட்டால் இலங்கைக்கு எந்த நன்மையும் இல்லை
மீசாலையை சேர்ந்தவர் நெல்லியடியில் சுட்டுக்கொலை
உடையார்கட்டு குளம் மீது கடும் விமானத்தாக்குதல்
மீள் குடியேற்றத்துக்கு பொறுப்பாக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி
புல்மோட்டை கடலில் கடும் சமர் புலிகளின் படகு மூழ்கடிப்பு
தெகிவளையில் 2 தமிழர்கள் கடத்தல்
வடமத்திய, சப்ரகமுவ மாகாணங்களில் தேர்தல் வன்முறைகள் நாளுக்குநாள் அதிகரிப்பு
7 மாதங்களில் 240 புலிகளின் உடல்கள் ஐ.சி.ஆர்.சி.யூடாக ஒப்படைப்பு
ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள் கலரியில் இருந்தவேளை சபையில் அமைச்சர் டக்ளஸ் சிவாஜிலிங்கம் வாய்ச்சண்டை
புலிகளின் அறிவிப்புக்கு அரசின் உதாசீனம் நேர்மையான தீர்வு கிடையாது என்பதன் வெளிப்பாடு
உள்நாட்டு யுத்தம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதால் மிக மோசமான நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளோம்
"ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்மக்கள் வாக்களிக்க வேண்டும்'
தேர்தல் பிரசாரத்தின் போது அரச சொத்துகளை கட்சிகள் துஷ்பிரயோகம் செய்வதாக முறைப்பாடு
உலக சனத்தொகையில் 23 சதவீதமானோருக்கு தலைமைதாங்கும் பொறுப்பு சார்க் மூலம் ஜனாதிபதிக்கு கிடைக்கும்
மீனவர்கள் காலியில் ஆர்ப்பாட்டம்
ஆடி அமாவாசை விரதம் தொடர்பாக பஞ்சாங்கங்கள் கருத்து வேறுபாடு
வெள்ளத்தில் மூழ்கி 2 வயதுக்குழந்தை பலி
வவுனியாவில் இம்மாத முற்பகுதியில் கடத்தப்பட்டவர் திங்கள் இரவு சுட்டுக்கொலை
கிழக்கு மாகாணத்தில் எமது அரசியல் செயற்பாடுகளை முடக்கும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு
ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற பிரதிநிதிகள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் சந்திப்பு
மன்னார் ஆயர் இல்லத்திற்கு எடுத்துவரப்பட்டுள்ள மடுமாதா தேவாலய திருச்சொரூபம்
யாழ்.உரும்பிராயில் இளைஞர் சுட்டுக்கொலை
நவாலியில் கொள்ளையர்கள் அட்டகாசம் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
பொறிவெடியில் சிக்கி இரு படையினர் காயம்
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை இந்திய நிறுவனத்துடன் இணைந்து இயக்க ஏற்பாடு
புலிகளின் குரல் போராளி கலைஞர் கலையரசன் மரணம்
மதவழிபாட்டு தலங்களுக்கு மின்கட்டண சலுகை வழங்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆலோசனை
மீண்டும் எம்.பி.யாக ஹசன் அலி சத்தியப்பிரமாணம்
வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஐ.தே.கட்சி ஆதரவு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தால் பங்கேற்பு
நேபாளத்தில் புதிய அரசாங்கத்தை அமைக்க மாவோயிஸ்ட்டுகள் மறுப்பு
பொய்ச்சாட்சியம் அளித்த பதிவாளருக்கும் மனைவிக்கும் இரண்டு வருட கடூழியச்சிறை
திருமணமான முன்னாள் காதலியை குத்தி கொலைசெய்த நபருக்கு மரண தண்டனை
மனித உரிமை பாதுகாவலர்களுக்கு ஆறு மாதகால பயிற்சிநெறி
"கடல்கோள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு யூ.என்.டி.பி. உதவ வேண்டும்'
சிறுபான்மையின மக்களுக்கெதிரான அச்சுறுத்தல்கள் முற்றாக அகற்றப்பட வேண்டும்
மலையக சமூகம் கல்வியில் அபிவிருத்தி காண்கின்றபோதும் அரசறிவியல் கல்வியில் போதிய மாற்றங்கள் இல்லை
இரத்தினபுரி மாவட்ட மக்கள் தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தி ம.ம.மு. வெற்றிபெறச் செய்ய வேண்டும்
பாண்டிருப்பு கிராம விளையாட்டு மைதானத்தின் தடுப்பு சுவர் அமைக்க 32 இலட்சம் ரூபா ஒதுக்கீடு
வடமேல் மாகாண கல்வித்தரம் 2010இல் முதல் இடத்துக்கு வர நாம் செயற்படுகின்றோம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com