Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, July 23, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
புலிகளின் அறிவிப்புக்கு அரசின் உதாசீனம் நேர்மையான தீர்வு கிடையாது என்பதன் வெளிப்பாடு
[23 - July - 2008] [Font Size - A - A - A]
* செல்வம் எம்.பி.கூறுகிறார்

பி.ரவிவர்மன்

விடுதலைப் புலிகள் நல்லெண்ண நோக்கத்துடன் வெளியிட்டுள்ள யுத்தநிறுத்த அறிவிப்பை அரசாங்கம் தட்டிக்கழித்து உதாசீனப்படுத்தியுள்ள நடவடிக்கையானது இன நெருக்கடித் தீர்வு முயற்சிகளுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ஒருபோதும் நீதியானதும் நேர்மையானதுமான தீர்வொன்றை வழங்கப் போவதில்லை என்பதையே தெளிவாகச் சுட்டிக்காட்டி நிற்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது;

சர்வதேச சமூகத்துடனும் பிராந்தியத்திலுள்ள அயல்நாடுகளுடனும் நட்புறவை வளர்க்கும் நல்லெண்ணத்துடனும் கொழும்பில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டை முன்னிட்டும் எதிர்வரும் 26 ஆம் திகதி சனிக்கிழமை முதல் ஆகஸ்ட் 4 ஆம் திகதி திங்கட்கிழமை வரையும் ஒரு தலைப்பட்சமான போர்நிறுத்தத்தைக் கடைப்பிடிக்கவுள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

யுத்தம் உக்கிரமடைந்துள்ள இன்றைய மிக மோசமான நெருக்கடியான சூழ்நிலையிலும் சமாதான முயற்சிகளை மீண்டும் ஆரம்பிக்க முடியாத நெருக்கடியான சூழ்நிலை தோன்றியுள்ள இன்றைய சூழ்நிலையிலும் விடுதலைப் புலிகளால் அறிவிக்கப்பட்டுள்ள ஒரு தலைப்பட்சமான போர்நிறுத்த அறிவிப்பை அரசாங்கம் நல்லெண்ண நோக்கத்துடன் அணுக வேண்டுமே தவிர அதனை தட்டிக்கழிக்கும் நடவடிக்கையானது இனநெருக்கடித் தீர்வு முயற்சிகளை அதலபாதாளத்திற்கே தள்ளிவீழ்த்திவிடும் என்பதை தென்னிலங்கையின் அனைத்து அரசியல் சக்திகளும் உணர்ந்து செயற்பட வேண்டும்.

அதேநேரம் விடுதலைப் புலிகள் தாமாகவே முன்வந்து அறிவித்துள்ள ஒரு தலைப்பட்சமான யுத்தநிறுத்த அறிவிப்பை சர்வதேச சமூகத்தின் நல்லெண்ணத்தையும் நன்மைகளையும் பெற்றுவிடலாமென்று அரசு அச்சப்படுவதுடன் தற்போது முழுமையான போர் நடவடிக்கைகளுக்குள் முடுக்கி விடப்பட்டுள்ள முப்படையினரின் மனோநிலையில் மாற்றங்கள் உருவாகலாம் என்ற இராணுவ நிபந்தனையிலிருந்து விடுபட முடியாத நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ளதையும் அரசின் நடவடிக்கைகள் தெட்டத் தெளிவாக சுட்டிக்காட்டி நிற்கின்றது.

தொடரும் போர் நடவடிக்கைகளால் தமிழ் மக்கள் தினமும் அனுபவித்துவரும் மனித அவலங்களை, பட்டினிச் சாவை, துயர வாழ்வை ஒரு கேளிக்கை நடவடிக்கையாகவே இன்றைய அரசாங்கம் கருதுகின்றது என்பதையே தொடரும் ஒவ்வொரு சம்பவங்களும் துல்லியமாக வெளிக்காட்டி நிற்கின்றது.

Email this page Your Opinion Print this page
நம்பிக்கை வாக்கெடுப்பில் இந்திய அரசு வெற்றி
யுத்த நிறுத்த அறிவிப்பை வரவேற்கிறது ஐ.தே.க.
சாவகச்சேரியில் பாரிய சுற்றிவளைப்பு, தேடுதல் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோரிடம் விசாரணை
சார்க் அமைப்பின் தலைவராக ராஜபக்ஷ வருவதைத்தவிர உச்சி மாநாட்டால் இலங்கைக்கு எந்த நன்மையும் இல்லை
மீசாலையை சேர்ந்தவர் நெல்லியடியில் சுட்டுக்கொலை
உடையார்கட்டு குளம் மீது கடும் விமானத்தாக்குதல்
மீள் குடியேற்றத்துக்கு பொறுப்பாக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி
புல்மோட்டை கடலில் கடும் சமர் புலிகளின் படகு மூழ்கடிப்பு
தெகிவளையில் 2 தமிழர்கள் கடத்தல்
வடமத்திய, சப்ரகமுவ மாகாணங்களில் தேர்தல் வன்முறைகள் நாளுக்குநாள் அதிகரிப்பு
7 மாதங்களில் 240 புலிகளின் உடல்கள் ஐ.சி.ஆர்.சி.யூடாக ஒப்படைப்பு
ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள் கலரியில் இருந்தவேளை சபையில் அமைச்சர் டக்ளஸ் சிவாஜிலிங்கம் வாய்ச்சண்டை
புலிகளின் அறிவிப்புக்கு அரசின் உதாசீனம் நேர்மையான தீர்வு கிடையாது என்பதன் வெளிப்பாடு
உள்நாட்டு யுத்தம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதால் மிக மோசமான நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளோம்
"ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்மக்கள் வாக்களிக்க வேண்டும்'
தேர்தல் பிரசாரத்தின் போது அரச சொத்துகளை கட்சிகள் துஷ்பிரயோகம் செய்வதாக முறைப்பாடு
உலக சனத்தொகையில் 23 சதவீதமானோருக்கு தலைமைதாங்கும் பொறுப்பு சார்க் மூலம் ஜனாதிபதிக்கு கிடைக்கும்
மீனவர்கள் காலியில் ஆர்ப்பாட்டம்
ஆடி அமாவாசை விரதம் தொடர்பாக பஞ்சாங்கங்கள் கருத்து வேறுபாடு
வெள்ளத்தில் மூழ்கி 2 வயதுக்குழந்தை பலி
வவுனியாவில் இம்மாத முற்பகுதியில் கடத்தப்பட்டவர் திங்கள் இரவு சுட்டுக்கொலை
கிழக்கு மாகாணத்தில் எமது அரசியல் செயற்பாடுகளை முடக்கும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு
ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற பிரதிநிதிகள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் சந்திப்பு
மன்னார் ஆயர் இல்லத்திற்கு எடுத்துவரப்பட்டுள்ள மடுமாதா தேவாலய திருச்சொரூபம்
யாழ்.உரும்பிராயில் இளைஞர் சுட்டுக்கொலை
நவாலியில் கொள்ளையர்கள் அட்டகாசம் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
பொறிவெடியில் சிக்கி இரு படையினர் காயம்
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை இந்திய நிறுவனத்துடன் இணைந்து இயக்க ஏற்பாடு
புலிகளின் குரல் போராளி கலைஞர் கலையரசன் மரணம்
மதவழிபாட்டு தலங்களுக்கு மின்கட்டண சலுகை வழங்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆலோசனை
மீண்டும் எம்.பி.யாக ஹசன் அலி சத்தியப்பிரமாணம்
வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஐ.தே.கட்சி ஆதரவு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தால் பங்கேற்பு
நேபாளத்தில் புதிய அரசாங்கத்தை அமைக்க மாவோயிஸ்ட்டுகள் மறுப்பு
பொய்ச்சாட்சியம் அளித்த பதிவாளருக்கும் மனைவிக்கும் இரண்டு வருட கடூழியச்சிறை
திருமணமான முன்னாள் காதலியை குத்தி கொலைசெய்த நபருக்கு மரண தண்டனை
மனித உரிமை பாதுகாவலர்களுக்கு ஆறு மாதகால பயிற்சிநெறி
"கடல்கோள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு யூ.என்.டி.பி. உதவ வேண்டும்'
சிறுபான்மையின மக்களுக்கெதிரான அச்சுறுத்தல்கள் முற்றாக அகற்றப்பட வேண்டும்
மலையக சமூகம் கல்வியில் அபிவிருத்தி காண்கின்றபோதும் அரசறிவியல் கல்வியில் போதிய மாற்றங்கள் இல்லை
இரத்தினபுரி மாவட்ட மக்கள் தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தி ம.ம.மு. வெற்றிபெறச் செய்ய வேண்டும்
பாண்டிருப்பு கிராம விளையாட்டு மைதானத்தின் தடுப்பு சுவர் அமைக்க 32 இலட்சம் ரூபா ஒதுக்கீடு
வடமேல் மாகாண கல்வித்தரம் 2010இல் முதல் இடத்துக்கு வர நாம் செயற்படுகின்றோம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com