Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, July 23, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
யுத்த நிறுத்த அறிவிப்பை வரவேற்கிறது ஐ.தே.க.
[23 - July - 2008] [Font Size - A - A - A]
எம்.ஏ.எம்.நிலாம்

விடுதலைப்புலிகளின் ஒருதலைப் பட்சமானபோர் நிறுத்த அறிவிப்பானது எந்த நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்து எதுவும் தெரியாதெனக் கூறியிருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி, போர்நிறுத்தமொன்று வருமானால் அதனை வரவேற்பதாகவும் தெரிவித்தது.

சர்வதேசத்தினதும், சார்க் தலைவர்களதும் நல்லெண்ணத்தைப் பெற்றுக் கொள்ளும் ஒரு முயற்சியாகக் கூட இதனைக் கருதலாமெனவும் எவ்வாறாக இருப்பினும் தற்காலிக போர்நிறுத்த அறிவிப்பு குறித்து முடிவெடுக்க வேண்டியது அரசாங்கமே ஆகுமெனவும் ஐக்கிய தேசியக்கட்சி சுட்டிக்காட்டியது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் ஐக்கிய தேசியக்கட்சி, பொதுச் செயலாளரும், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்கா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;

விடுதலைப்புலிகள் தற்காலிகமாக ஒருதலைப்பட்ச போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளதாக அறியவருகின்றோம். இதன் நோக்கம் என்னவென்பது குறித்து எம்மால் எதுவும் கூறமுடியாது. பெரும்பாலும் சார்க் தலைவர்களதும், சர்வதேசத்தினதும் நல்லபெயரைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியாகக் கூட கருதமுடியும். ஆனால், ஐக்கிய தேசியக்கட்சி யுத்தம் தொடர்வதை வரவேற்கவில்லை. உயிரழிவுகள் அனுமதிக்கப்பட முடியாது. பாதுகாப்பு அச்சுறுத்தலால் நாடு பாரிய அவலத்துக்குள் தள்ளப்பட்டிருக்கின்றது. நாட்டினதும், மக்களினதும் பாதுகாப்பை உறுதி செய்வதைவிட அரசாங்கம் யுத்தத்திலேயே முனைப்புக் காட்டிவருகின்றது. இதனை நாம் வரவேற்க முடியாது. அந்த வகையில் புலிகளின் ஒருதலைப்பட்ச போர்நிறுத்தத்தை நாம் வரவேற்கின்றோம்.

இந்தப் போர்நிறுத்தத்தை ஏற்பதா இல்லையா என்பதை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும். ஏனெனில், யுத்தம் புரிவது அரசாங்கமும், விடுதலைப்புலிகளும் தான். அவர்கள் தான் முடிவெடுக்க முடியும்.

எதிர்க்கட்சியிலிருக்கும் நாம் இது குறித்து எத்தகைய முடிவையும் தெரிவிக்க முடியாது.

நாட்டு மக்கள் யுத்தத்தை விரும்பவில்லை. ஆனால், அரசாங்கம் மக்களை தவறான பாதையில் கொண்டு சென்று மக்களை பாதுகாப்பதிலிருந்து விலகிச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

நாட்டின் இறைமை, பாதுகாப்பு பற்றிப் பேசுபவர்கள் இணைந்து இயங்கும் அரசாங்கத்தினால் இந்தியா உட்பட சார்க் தலைவர்களுக்கு சரியான பாதுகாப்பு வழங்குவதில் தயக்கத்துடன் காணப்படுவதாகவே தெரிகிறது. இதன் காரணமாகவே இந்தியத் தலைவர் உள்ளிட்ட சார்க் தலைவர்கள் சிலர் சுய பாதுகாப்பு அதிகாரிகளுடன் வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனவும் திஸ்ஸ அத்தநாயக்கா தெரிவித்தார்.

Email this page Your Opinion Print this page
நம்பிக்கை வாக்கெடுப்பில் இந்திய அரசு வெற்றி
யுத்த நிறுத்த அறிவிப்பை வரவேற்கிறது ஐ.தே.க.
சாவகச்சேரியில் பாரிய சுற்றிவளைப்பு, தேடுதல் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோரிடம் விசாரணை
சார்க் அமைப்பின் தலைவராக ராஜபக்ஷ வருவதைத்தவிர உச்சி மாநாட்டால் இலங்கைக்கு எந்த நன்மையும் இல்லை
மீசாலையை சேர்ந்தவர் நெல்லியடியில் சுட்டுக்கொலை
உடையார்கட்டு குளம் மீது கடும் விமானத்தாக்குதல்
மீள் குடியேற்றத்துக்கு பொறுப்பாக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி
புல்மோட்டை கடலில் கடும் சமர் புலிகளின் படகு மூழ்கடிப்பு
தெகிவளையில் 2 தமிழர்கள் கடத்தல்
வடமத்திய, சப்ரகமுவ மாகாணங்களில் தேர்தல் வன்முறைகள் நாளுக்குநாள் அதிகரிப்பு
7 மாதங்களில் 240 புலிகளின் உடல்கள் ஐ.சி.ஆர்.சி.யூடாக ஒப்படைப்பு
ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள் கலரியில் இருந்தவேளை சபையில் அமைச்சர் டக்ளஸ் சிவாஜிலிங்கம் வாய்ச்சண்டை
புலிகளின் அறிவிப்புக்கு அரசின் உதாசீனம் நேர்மையான தீர்வு கிடையாது என்பதன் வெளிப்பாடு
உள்நாட்டு யுத்தம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதால் மிக மோசமான நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளோம்
"ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்மக்கள் வாக்களிக்க வேண்டும்'
தேர்தல் பிரசாரத்தின் போது அரச சொத்துகளை கட்சிகள் துஷ்பிரயோகம் செய்வதாக முறைப்பாடு
உலக சனத்தொகையில் 23 சதவீதமானோருக்கு தலைமைதாங்கும் பொறுப்பு சார்க் மூலம் ஜனாதிபதிக்கு கிடைக்கும்
மீனவர்கள் காலியில் ஆர்ப்பாட்டம்
ஆடி அமாவாசை விரதம் தொடர்பாக பஞ்சாங்கங்கள் கருத்து வேறுபாடு
வெள்ளத்தில் மூழ்கி 2 வயதுக்குழந்தை பலி
வவுனியாவில் இம்மாத முற்பகுதியில் கடத்தப்பட்டவர் திங்கள் இரவு சுட்டுக்கொலை
கிழக்கு மாகாணத்தில் எமது அரசியல் செயற்பாடுகளை முடக்கும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு
ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற பிரதிநிதிகள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் சந்திப்பு
மன்னார் ஆயர் இல்லத்திற்கு எடுத்துவரப்பட்டுள்ள மடுமாதா தேவாலய திருச்சொரூபம்
யாழ்.உரும்பிராயில் இளைஞர் சுட்டுக்கொலை
நவாலியில் கொள்ளையர்கள் அட்டகாசம் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
பொறிவெடியில் சிக்கி இரு படையினர் காயம்
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை இந்திய நிறுவனத்துடன் இணைந்து இயக்க ஏற்பாடு
புலிகளின் குரல் போராளி கலைஞர் கலையரசன் மரணம்
மதவழிபாட்டு தலங்களுக்கு மின்கட்டண சலுகை வழங்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆலோசனை
மீண்டும் எம்.பி.யாக ஹசன் அலி சத்தியப்பிரமாணம்
வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஐ.தே.கட்சி ஆதரவு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தால் பங்கேற்பு
நேபாளத்தில் புதிய அரசாங்கத்தை அமைக்க மாவோயிஸ்ட்டுகள் மறுப்பு
பொய்ச்சாட்சியம் அளித்த பதிவாளருக்கும் மனைவிக்கும் இரண்டு வருட கடூழியச்சிறை
திருமணமான முன்னாள் காதலியை குத்தி கொலைசெய்த நபருக்கு மரண தண்டனை
மனித உரிமை பாதுகாவலர்களுக்கு ஆறு மாதகால பயிற்சிநெறி
"கடல்கோள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு யூ.என்.டி.பி. உதவ வேண்டும்'
சிறுபான்மையின மக்களுக்கெதிரான அச்சுறுத்தல்கள் முற்றாக அகற்றப்பட வேண்டும்
மலையக சமூகம் கல்வியில் அபிவிருத்தி காண்கின்றபோதும் அரசறிவியல் கல்வியில் போதிய மாற்றங்கள் இல்லை
இரத்தினபுரி மாவட்ட மக்கள் தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தி ம.ம.மு. வெற்றிபெறச் செய்ய வேண்டும்
பாண்டிருப்பு கிராம விளையாட்டு மைதானத்தின் தடுப்பு சுவர் அமைக்க 32 இலட்சம் ரூபா ஒதுக்கீடு
வடமேல் மாகாண கல்வித்தரம் 2010இல் முதல் இடத்துக்கு வர நாம் செயற்படுகின்றோம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com