Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, July 31, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
தனிநபர் விடும் தவறு ஒரு நிறுவனத்தையே தோல்விக்கு இட்டுச்செல்வதை விளக்கும் படம்
[31 - July - 2008] [Font Size - A - A - A]
* குறும்பட வெளியீட்டு விழாவில் வடமாகாண சபை செயலர் தெரிவிப்பு

தனிநபர் விடும் தவறே ஒரு நிறுவனத்தை அதன் தோல்விக்கு இட்டுச் செல்கிறது. "ஒரு நாள்' என்ற குறும்படம் அதனை விபரிப்பதாக அமைவதாக வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் எஸ்.ரங்கராஜா தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையின் கல்வி, பண்பாட்டலுவல்கள் அமைச்சின் பண்பாட்டுத் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட "ஒருநாள்' குறும்படத்தின் வெளியீட்டு நிகழ்வு கடந்த திங்கட்கிழமை பிற்பகல் வடக்கு மாகாண சபையின் கேட்போர்கூடத்தில் நடத்தப்பட்டது. வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் ஆரம்பவுரை நிகழ்த்தினார். ஒருநாள் குறும்படம் வடக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தயாரித்து வெளியிடும் இரண்டாவது குறும்படம் இதுவாகும். முதலாவது குறும்படம் "ஏக்கம்' என்பதாகும்.

ஊடகங்களின் செல்வாக்கு குடும்பங்களில் ஏற்படுத்தும் தாக்கங்களை வெளிப்படுத்துவதாக "ஏக்கம்' அமைந்தது. "ஒருநாள்'குறும்படம் அலுவலகத்தில் ஒருநாள் பணி எவ்வாறு அமைகிறது என்பதை சுயவிமர்சனம் செய்வதாக இருப்பதாக செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார். வடக்கு மாகாண பண்பாட்டுத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் திருமதி என்.ஸ்ரீதேவி, "ஒருநாள்' குறும்படத்தின் முதலாவது இறுவட்டை முதன்மை விருந்தினரான பிரதம செயலாளர் ரங்கராஜாவிடம் கையளித்தார்.

"இக்குறும்படம் நிறுவன நிர்வாகத்திற்குத் தாக்கமான கருத்துகளை வெளியிடுவதாக திறமையாக தயாரிக்கப்பட்டுள்ளது. நிர்வாகத்தினரான நாமே இக்குறும்படத்தில் இலக்குவைக்கப்பட்டுள்ளோம். எம்மை நாமே சுயவிமர்சனம் செய்வதாக அமைந்திடும் இப்படம் யாரையும் புண்படுத்துவதாக அமையவில்லை. குறும்படத்தில் காண்பிக்கப்பட்ட குறைகளை நிராகரிக்க முடியாது. ஆனால், நிர்வாகத்தில் சம்பந்தப்பட்டவர்கள் எல்லோரும் அவ்வகையைச் சேர்ந்தவர்கள் அல்லர். எமது நிர்வாகத்தில் அவ்வாறான ஒருவர் இருந்தால் போதும் ஏனையோரும் அவப்பெயரைப் பெறுகின்றனர். "ஒருநாள்' குறும்படம் நிதானமான கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளது. அலுவலகத்திற்கு ஒரு பணியாளர் நேரம் பிந்தி வருகின்றார். ஆனால், நேரம் முந்தி மாலையில் அலுவலகத்திலிருந்து வீட்டுக்குப் புறப்படுகின்றார். அலுவலகத்தின் நிர்வாக அதிகாரியின் "கருணை' இதற்குக் காரணமாகிறது என்ற கருத்தைக் கோர்வையாக "ஒருநாள்' குறும்படம் விவரிக்கிறது. படம் சிறப்பாக அமைந்துள்ளது' என்று பிரதம செயலாளர் ரங்கராஜன் தெரிவித்தார்.

வடக்கு மாகாணப் பண்பாட்டுத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் திருமதி என்.ஸ்ரீதேவி நன்றியுரையில் இக்குறும்படத் தயாரிப்பில் பிரதம செயலாளர், கல்விச் செயலர் உட்பட நிர்வாகமே பூரண ஆதரவளித்ததாகக் குறிப்பிட்டார். 23 நிமிடங்கள் 35 விநாடிகள் மட்டுமே ஓடும் இப்படத்தை வடக்கு மாகாண சபையின் அமைச்சுச் செயலாளர்கள், வடமாகாண ஆளுநரின் செயலாளர், உயரதிகாரிகள், பணியாளர்களும் பார்த்தனர்.

Email this page Your Opinion Print this page
இந்திய, பாகிஸ்தான் தலைவர்கள் நாளை வருகை
சார்க் உச்சி மாநாட்டு பாதுகாப்புக்காக நாளை முதல் ஞாயிறு வரை குடாநாட்டுக்கான பயணிகள் விமானசேவை இடைநிறுத்தம்
கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கொய்ராலாவை அனுப்ப நேபாளக் கட்சிகள் இணக்கம்
அரசியலுக்கே ஊடகங்களில் அதிக முக்கியத்துவம் அபிவிருத்திக்கு முன்னுரிமை அளிப்பதில்லை
"யுத்தத்தை தோற்றுவித்தோரே சமாதானத்தை உருவாக்க வேண்டும்'
மீனவர் பிரச்சினை தீர்வுக்கு கொழும்பு செல்லும் இந்திய பிரதமர் அழுத்தம் கொடுக்கவேண்டும்
சார்க்கின் புதிய அவதானிகளாக அவுஸ்திரேலியா, மியான்மார்
சார்க் மகாநாட்டால் இலங்கைக்கு கிடைக்கும் நன்மையை அரசால் பட்டியலிட முடியுமா?
தெற்காசிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கை முழுமையாக அமுலாகும் சாத்தியம் இல்லை
கூட்டமைப்பு எம்.பி. கனகசபையின் மெய்ப்பாதுகாவலர் மீது துப்பாக்கிச்சூடு
வடபகுதி மோதலில் 4 படையினர் பலி
தொண்டமானுக்கு ஜனாதிபதி மன்னிப்பு
மக்களை வீடுகளிலிருந்து வெளியேற்றியதை எதிர்த்தோருக்கு வெள்ளைவான் அச்சுறுத்தல்
இரணைமடுப் பகுதியில் கடும் விமானத் தாக்குதல்
சட்டவிரோத குடியிருப்புகளை எந்த நேரத்திலும் அகற்றும் அதிகாரம் அரசுக்கு இருக்கிறது
சார்க் மாநாட்டுக்கு புறம்பாக இந்திய பாகிஸ்தான் தலைவர்கள் சந்திப்பது தொடர்பாக எதுவும் தெரியாது
அமைச்சர்கள் குழு மடுவுக்கு விஜயம் ஆயர் இல்லத்தில் திருச்சொரூபத்தை வழிபட்டனர்
கல்கிசை பகுதியில் தீவிர தேடுதல்
நீதிமன்றம் வந்த மெய்ப்பாதுகாவலர்கள்
சுதந்திர ஊடகஅமைப்பின் பிரதிநிதிகள் வர்த்தக கூட்டமைப்பினருடன் சந்திப்பு
தப்பிவந்த கடற்படை வீரர் பொலிஸாரால் கைது
சிறைக்கூடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் குற்றச்செயல்களை தடுக்க அனைவரும் முன்வரவேண்டும்
குருவிட்டவில் மனித உரிமைகள் தொடர்பான செயலமர்வு
மாவிட்டபுரம் தேர் உற்சவத்தை முன்னிட்டு தெல்லிப்பழை சோதனைச் சாவடியில் கருமபீடம்
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம்
வன்னியில் தொடரும் இராணுவ நடவடிக்கையால் விவசாயிகள், மாணவர்கள் பெரிதும் பாதிப்பு
சிறுமி பாலியல் துஷ்பிரயோக வழக்கு இராணுவ வீரருக்கு 14 வருட கடுங்காவல் சிறை
ஆட்டோவில் பயணித்த இருவர் சுட்டுக் கொலை
கரையோர ரயில்களில் சோதனைகள்
நாளை பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணை விடுமுறை
படையினரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டும் தேசிய வனத்தில் வேட்டைக்காரர் அதிகரிப்பு
பிபிலை,மெதகமவில் அசுத்தமான குடிநீர் விநியோகிக்கப்படுவதாக விசனம்
உரியவரின் பெயர், முகவரியில்லாத சிம் அட்டைகள் கல்முனை பிரதேசத்தில் பொலிஸாரால் பறிமுதல்
க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு இம்முறை 2,03,819 மாணவர்கள் தோற்றவுள்ளனர்
படைத்தளபதியாகவிருந்த போது முறைகேடாக பணம் உழைத்திருந்தால் சகல இடங்களிலும் வீடு வாங்கியிருப்பேன்
வடக்கு கிழக்கு கிராமசேவையாளர் வெற்றிடங்களை நிரப்புமாறு கோரிக்கை
தமிழ் முஸ்லிம் சமூகங்களின் ஐக்கியத்தை சீர்குலைக்கும் அரசியல் நடவடிக்கைகளுக்கு இடமளிக்கக்கூடாது
மூன்று சமூகங்களும் ஒற்றுமையுடன் வாழ்வதன் மூலமே கிழக்கு மாகாணத்தில் சமாதானத்தை கட்டியெழுப்ப முடியும்
சார்க் மகாநாட்டின் மூலம் வறிய மக்கள் பயன்பெறும் திட்டமாகவே சார்க் கிராமம் அமைந்துள்ளது
ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்பட வாய்ப்பிருந்தாலே நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியும்
அரசியல் ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சமூகமாக மலையக சமூகம் மாற்றமடைய வேண்டும்
முகத்துவாரம் சங்கமத்தில் இந்துக்கள் பிதிர்க்கடன்களை நிறைவேற்ற அனுமதி
சட்டத்தை மீறும் வர்த்தகர்களுக்கெதிராக சுற்றிவளைப்புக் குழுக்கள் அதிகரிப்பு
கந்தளாய் சீனித் தொழிற்சாலையை மீண்டும் திறக்குமாறு ஜே.வி.பி. அரசிடம் கோரிக்கை
தனிநபர் விடும் தவறு ஒரு நிறுவனத்தையே தோல்விக்கு இட்டுச்செல்வதை விளக்கும் படம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com