Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, July 31, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
முகத்துவாரம் சங்கமத்தில் இந்துக்கள் பிதிர்க்கடன்களை நிறைவேற்ற அனுமதி
[31 - July - 2008] [Font Size - A - A - A]
கொழும்பு முகத்துவாரம் சங்கமத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு எதிர்வரும் 2 ஆம் திகதி சனிக்கிழமை இந்துக்கள் தமது பிதிர்க்கடன்களை மேற்கொள்வதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பாதுகாப்புக் காரணங்களுக்காக முகத்துவாரம் சங்கமம் மற்றும் அதனை அண்மித்த கடற்கரைப் பிரதேசங்களுக்கு பொதுமக்கள் செல்வது 2006 நவம்பர் 25 ஆம் திகதியிலிருந்து படையினரால் தடை செய்யப்பட்டுள்ளது. இது பொதுமக்களின் அடிப்படை உரிமை மீறலெனத் தெரிவித்து இதற்கெதிராக கிராண்ட்பாஸ் ஞான வைரவர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ பால ரவிசங்கர சிவாச்சாரியார் உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தார்.

அவர் அவ்வழக்கில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொலிஸ் மா அதிபர், கடற்படைத் தளபதி, விமானப்படைத் தளபதி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரை பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டிருந்தார்.

நேற்று முன்தினம் 29 ஆம் திகதி இவ்வழக்கு உயர்நீதிமன்றில் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா மற்றும் நீதியரசர்கள் நிமால் காமினி அமரதுங்க பி.ஏ. ரட்னாயக்கா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தில் வாழும் இந்துக்கள் ஆடி அமாவாசை விரதத்தை முன்னிட்டு முகத்துவாரம் சங்கமத்தில் தமது மூதாதையர்களுக்கு பிதிர்க்கடன்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் இதற்கு பாதுகாப்புத் தரப்பினர் அனுமதி மறுத்துள்ளதாகவும் தெரிவித்த மனுதாரர், இந்துக்கள் எந்தவித தடையுமின்றி பிதிர்க்கடன்களை நிறைவேற்ற அனுமதிக்குமாறும் தமது மனுவில் கோரியிருந்தார்.

இதற்கு அனுமதி வழங்க சட்டமா அதிபரின் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி இணக்கம் தெரிவித்தார்.

அதேநேரம், பிதிர்க்கடன்களை நிறைவேற்ற வரும் பொதுமக்கள் தமது அடையாள அட்டை, பொலிஸ் பதிவுச் சான்றிதழ் மற்றும் மாற்று ஆடைகளுடன் மாத்திரம் வருமாறும் வேறு பொருட்களைக் கொண்டு வருவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், தீர்த்தக்கரைக்குச் செல்பவர்கள் சோதனை செய்யப்பட்டே அனுமதிக்கப்படுவரெனவும் எதிர்வரும் 2 ஆம் திகதி சனிக்கிழமை காலை 5.30 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணிவரை மாத்திரமே இதற்கு அனுமதிக்கப்படுவரெனவும் நீதிபதி தெரிவித்தார்.

Email this page Your Opinion Print this page
இந்திய, பாகிஸ்தான் தலைவர்கள் நாளை வருகை
சார்க் உச்சி மாநாட்டு பாதுகாப்புக்காக நாளை முதல் ஞாயிறு வரை குடாநாட்டுக்கான பயணிகள் விமானசேவை இடைநிறுத்தம்
கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கொய்ராலாவை அனுப்ப நேபாளக் கட்சிகள் இணக்கம்
அரசியலுக்கே ஊடகங்களில் அதிக முக்கியத்துவம் அபிவிருத்திக்கு முன்னுரிமை அளிப்பதில்லை
"யுத்தத்தை தோற்றுவித்தோரே சமாதானத்தை உருவாக்க வேண்டும்'
மீனவர் பிரச்சினை தீர்வுக்கு கொழும்பு செல்லும் இந்திய பிரதமர் அழுத்தம் கொடுக்கவேண்டும்
சார்க்கின் புதிய அவதானிகளாக அவுஸ்திரேலியா, மியான்மார்
சார்க் மகாநாட்டால் இலங்கைக்கு கிடைக்கும் நன்மையை அரசால் பட்டியலிட முடியுமா?
தெற்காசிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கை முழுமையாக அமுலாகும் சாத்தியம் இல்லை
கூட்டமைப்பு எம்.பி. கனகசபையின் மெய்ப்பாதுகாவலர் மீது துப்பாக்கிச்சூடு
வடபகுதி மோதலில் 4 படையினர் பலி
தொண்டமானுக்கு ஜனாதிபதி மன்னிப்பு
மக்களை வீடுகளிலிருந்து வெளியேற்றியதை எதிர்த்தோருக்கு வெள்ளைவான் அச்சுறுத்தல்
இரணைமடுப் பகுதியில் கடும் விமானத் தாக்குதல்
சட்டவிரோத குடியிருப்புகளை எந்த நேரத்திலும் அகற்றும் அதிகாரம் அரசுக்கு இருக்கிறது
சார்க் மாநாட்டுக்கு புறம்பாக இந்திய பாகிஸ்தான் தலைவர்கள் சந்திப்பது தொடர்பாக எதுவும் தெரியாது
அமைச்சர்கள் குழு மடுவுக்கு விஜயம் ஆயர் இல்லத்தில் திருச்சொரூபத்தை வழிபட்டனர்
கல்கிசை பகுதியில் தீவிர தேடுதல்
நீதிமன்றம் வந்த மெய்ப்பாதுகாவலர்கள்
சுதந்திர ஊடகஅமைப்பின் பிரதிநிதிகள் வர்த்தக கூட்டமைப்பினருடன் சந்திப்பு
தப்பிவந்த கடற்படை வீரர் பொலிஸாரால் கைது
சிறைக்கூடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் குற்றச்செயல்களை தடுக்க அனைவரும் முன்வரவேண்டும்
குருவிட்டவில் மனித உரிமைகள் தொடர்பான செயலமர்வு
மாவிட்டபுரம் தேர் உற்சவத்தை முன்னிட்டு தெல்லிப்பழை சோதனைச் சாவடியில் கருமபீடம்
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம்
வன்னியில் தொடரும் இராணுவ நடவடிக்கையால் விவசாயிகள், மாணவர்கள் பெரிதும் பாதிப்பு
சிறுமி பாலியல் துஷ்பிரயோக வழக்கு இராணுவ வீரருக்கு 14 வருட கடுங்காவல் சிறை
ஆட்டோவில் பயணித்த இருவர் சுட்டுக் கொலை
கரையோர ரயில்களில் சோதனைகள்
நாளை பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணை விடுமுறை
படையினரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டும் தேசிய வனத்தில் வேட்டைக்காரர் அதிகரிப்பு
பிபிலை,மெதகமவில் அசுத்தமான குடிநீர் விநியோகிக்கப்படுவதாக விசனம்
உரியவரின் பெயர், முகவரியில்லாத சிம் அட்டைகள் கல்முனை பிரதேசத்தில் பொலிஸாரால் பறிமுதல்
க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு இம்முறை 2,03,819 மாணவர்கள் தோற்றவுள்ளனர்
படைத்தளபதியாகவிருந்த போது முறைகேடாக பணம் உழைத்திருந்தால் சகல இடங்களிலும் வீடு வாங்கியிருப்பேன்
வடக்கு கிழக்கு கிராமசேவையாளர் வெற்றிடங்களை நிரப்புமாறு கோரிக்கை
தமிழ் முஸ்லிம் சமூகங்களின் ஐக்கியத்தை சீர்குலைக்கும் அரசியல் நடவடிக்கைகளுக்கு இடமளிக்கக்கூடாது
மூன்று சமூகங்களும் ஒற்றுமையுடன் வாழ்வதன் மூலமே கிழக்கு மாகாணத்தில் சமாதானத்தை கட்டியெழுப்ப முடியும்
சார்க் மகாநாட்டின் மூலம் வறிய மக்கள் பயன்பெறும் திட்டமாகவே சார்க் கிராமம் அமைந்துள்ளது
ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்பட வாய்ப்பிருந்தாலே நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியும்
அரசியல் ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சமூகமாக மலையக சமூகம் மாற்றமடைய வேண்டும்
முகத்துவாரம் சங்கமத்தில் இந்துக்கள் பிதிர்க்கடன்களை நிறைவேற்ற அனுமதி
சட்டத்தை மீறும் வர்த்தகர்களுக்கெதிராக சுற்றிவளைப்புக் குழுக்கள் அதிகரிப்பு
கந்தளாய் சீனித் தொழிற்சாலையை மீண்டும் திறக்குமாறு ஜே.வி.பி. அரசிடம் கோரிக்கை
தனிநபர் விடும் தவறு ஒரு நிறுவனத்தையே தோல்விக்கு இட்டுச்செல்வதை விளக்கும் படம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com