Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, July 31, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
அரசியல் ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சமூகமாக மலையக சமூகம் மாற்றமடைய வேண்டும்
[31 - July - 2008] [Font Size - A - A - A]
* இரத்தினபுரியில் அமைச்சர் சந்திரசேகரன்

மலையக சமூகத்தை மத்தியதர வர்க்கத்துக்கு மாற்றியமைக்க வேண்டுமாயின் அரசியல் ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சமூகமாக மாறவேண்டும் என்று தெரிவித்துள்ள மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ.சந்திரசேகரன், எவ்வித மாற்றமும் காணாவிடின் எமது எதிர்கால சந்ததியினரின் நிலை கேள்விக்குறியாகிவிடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

ஏனைய சமூகத்தவர்கள் எம்மை ஏளனமாக எடைபோடுவதற்கு நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் பழைமையான லயன் அமைப்பு முறைகளே பிரதான காரணமாக உள்ளது .

1994 ஆம் ஆண்டு எனது ஒரு வாக்கினால் அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா அரசாங்கம் அமைத்தபோது எனக்கு வர்த்தக, வாணிபத் துறை பிரதி அமைச்சு வழங்கப்பட்டது.

ஆனாலும், இந்த அமைச்சின் ஊடாக எமது சமுதாயத்துக்கு பிரயோசனமான எதுவுமே செய்ய முடியாது என்பதனால் இரண்டு மாதங்களில் அந்த அமைச்சை மாற்றி தோட்ட வீடமைப்பு பிரதி அமைச்சராகி சுமார் 50 ஆயிரம் தனித்தனி வீடுகளை அமைப்பதற்கு அத்தியாரம் இட்டேன்.

இன்று இவ்வாறான தனித்தனி வீடுகளில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை, தேவைகள் எல்லாமே மாறிவிட்டன.

வெள்ளைக்காரர் நிர்வாகத்தின்போது நன்கு பராமரிக்கப்பட்ட பல தோட்டங்களும் பாதைகளும் இன்று காடாகி சீரழிந்து போயுள்ளன.

எமது சமூகத்தை ஒட்டுமொத்தமான ஒரு மாற்றத்துக்கு வழிகாட்டாவிட்டால் எம்மால் எமது எதிர்கால சந்ததியினருக்கு பதில் கூற முடியாது.

எமது அடுத்த சந்ததியையாவது நாம் இந்நாட்டில் தலை நிமிர்ந்து வாழவைக்க வேண்டிய நிலையில் உள்ளோம். இதற்காக எமது இளைஞர்களை நாம் இன்றே தயார் செய்ய வேண்டும்.

எமது இளைஞர்கள் தமக்குரிய அரசியல் உரிமைகளைப் பற்றி சிந்திக்க வேண்டும். நாம் ஒரு சமூகமாக அங்கீகரிக்கப்படுவதற்கு, எமது தனித்துவம் பேணப்படுவதற்கு, அடுத்தவர்களிடம் மண்டியிடாதவர்களாக எமது அடுத்த சந்ததியினர் வாழ்வதற்கு, எமது அவல வாழ்க்கை எம்முடனேயே முடிந்து அடுத்த சந்ததிக்கு அது தொடராமல் இருப்பதற்கு நாம் எமது இளைஞர் சமுதாயத்தை அரசியல் பார்வையுள்ளவர்களாக மாற்ற வேண்டும்.

நான் அரசாங்கத்தில் அமைச்சராக இருக்கின்ற போதிலும் மலையக மக்கள் முன்னணி அரசாங்கத்துடன் இணைந்துள்ளது என்பதற்காக நாம் தனியாக போட்டியிடுவதை தவிர்க்கவில்லை.

அரசாங்கத்தின் அங்கமாக இருந்துகொண்டே இங்கு நாம் தனித்து போட்டியிடுகிறோம் என்றால் அது எமது சமூகத்தின் தனித்துவம் சம்பந்தமானது.

எனவே, இரத்தினபுரி மாவட்டத்தில் வாழும் எமது மக்கள் இந்தத் தேர்தலை ஒரு சமூக சவாலாக ஏற்று மலையக மக்கள் முன்னணிக்கு பெருமளவில் வாக்களிக்க வேண்டும் என்றும் கூறினார்.

Email this page Your Opinion Print this page
இந்திய, பாகிஸ்தான் தலைவர்கள் நாளை வருகை
சார்க் உச்சி மாநாட்டு பாதுகாப்புக்காக நாளை முதல் ஞாயிறு வரை குடாநாட்டுக்கான பயணிகள் விமானசேவை இடைநிறுத்தம்
கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கொய்ராலாவை அனுப்ப நேபாளக் கட்சிகள் இணக்கம்
அரசியலுக்கே ஊடகங்களில் அதிக முக்கியத்துவம் அபிவிருத்திக்கு முன்னுரிமை அளிப்பதில்லை
"யுத்தத்தை தோற்றுவித்தோரே சமாதானத்தை உருவாக்க வேண்டும்'
மீனவர் பிரச்சினை தீர்வுக்கு கொழும்பு செல்லும் இந்திய பிரதமர் அழுத்தம் கொடுக்கவேண்டும்
சார்க்கின் புதிய அவதானிகளாக அவுஸ்திரேலியா, மியான்மார்
சார்க் மகாநாட்டால் இலங்கைக்கு கிடைக்கும் நன்மையை அரசால் பட்டியலிட முடியுமா?
தெற்காசிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கை முழுமையாக அமுலாகும் சாத்தியம் இல்லை
கூட்டமைப்பு எம்.பி. கனகசபையின் மெய்ப்பாதுகாவலர் மீது துப்பாக்கிச்சூடு
வடபகுதி மோதலில் 4 படையினர் பலி
தொண்டமானுக்கு ஜனாதிபதி மன்னிப்பு
மக்களை வீடுகளிலிருந்து வெளியேற்றியதை எதிர்த்தோருக்கு வெள்ளைவான் அச்சுறுத்தல்
இரணைமடுப் பகுதியில் கடும் விமானத் தாக்குதல்
சட்டவிரோத குடியிருப்புகளை எந்த நேரத்திலும் அகற்றும் அதிகாரம் அரசுக்கு இருக்கிறது
சார்க் மாநாட்டுக்கு புறம்பாக இந்திய பாகிஸ்தான் தலைவர்கள் சந்திப்பது தொடர்பாக எதுவும் தெரியாது
அமைச்சர்கள் குழு மடுவுக்கு விஜயம் ஆயர் இல்லத்தில் திருச்சொரூபத்தை வழிபட்டனர்
கல்கிசை பகுதியில் தீவிர தேடுதல்
நீதிமன்றம் வந்த மெய்ப்பாதுகாவலர்கள்
சுதந்திர ஊடகஅமைப்பின் பிரதிநிதிகள் வர்த்தக கூட்டமைப்பினருடன் சந்திப்பு
தப்பிவந்த கடற்படை வீரர் பொலிஸாரால் கைது
சிறைக்கூடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் குற்றச்செயல்களை தடுக்க அனைவரும் முன்வரவேண்டும்
குருவிட்டவில் மனித உரிமைகள் தொடர்பான செயலமர்வு
மாவிட்டபுரம் தேர் உற்சவத்தை முன்னிட்டு தெல்லிப்பழை சோதனைச் சாவடியில் கருமபீடம்
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம்
வன்னியில் தொடரும் இராணுவ நடவடிக்கையால் விவசாயிகள், மாணவர்கள் பெரிதும் பாதிப்பு
சிறுமி பாலியல் துஷ்பிரயோக வழக்கு இராணுவ வீரருக்கு 14 வருட கடுங்காவல் சிறை
ஆட்டோவில் பயணித்த இருவர் சுட்டுக் கொலை
கரையோர ரயில்களில் சோதனைகள்
நாளை பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணை விடுமுறை
படையினரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டும் தேசிய வனத்தில் வேட்டைக்காரர் அதிகரிப்பு
பிபிலை,மெதகமவில் அசுத்தமான குடிநீர் விநியோகிக்கப்படுவதாக விசனம்
உரியவரின் பெயர், முகவரியில்லாத சிம் அட்டைகள் கல்முனை பிரதேசத்தில் பொலிஸாரால் பறிமுதல்
க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு இம்முறை 2,03,819 மாணவர்கள் தோற்றவுள்ளனர்
படைத்தளபதியாகவிருந்த போது முறைகேடாக பணம் உழைத்திருந்தால் சகல இடங்களிலும் வீடு வாங்கியிருப்பேன்
வடக்கு கிழக்கு கிராமசேவையாளர் வெற்றிடங்களை நிரப்புமாறு கோரிக்கை
தமிழ் முஸ்லிம் சமூகங்களின் ஐக்கியத்தை சீர்குலைக்கும் அரசியல் நடவடிக்கைகளுக்கு இடமளிக்கக்கூடாது
மூன்று சமூகங்களும் ஒற்றுமையுடன் வாழ்வதன் மூலமே கிழக்கு மாகாணத்தில் சமாதானத்தை கட்டியெழுப்ப முடியும்
சார்க் மகாநாட்டின் மூலம் வறிய மக்கள் பயன்பெறும் திட்டமாகவே சார்க் கிராமம் அமைந்துள்ளது
ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்பட வாய்ப்பிருந்தாலே நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியும்
அரசியல் ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சமூகமாக மலையக சமூகம் மாற்றமடைய வேண்டும்
முகத்துவாரம் சங்கமத்தில் இந்துக்கள் பிதிர்க்கடன்களை நிறைவேற்ற அனுமதி
சட்டத்தை மீறும் வர்த்தகர்களுக்கெதிராக சுற்றிவளைப்புக் குழுக்கள் அதிகரிப்பு
கந்தளாய் சீனித் தொழிற்சாலையை மீண்டும் திறக்குமாறு ஜே.வி.பி. அரசிடம் கோரிக்கை
தனிநபர் விடும் தவறு ஒரு நிறுவனத்தையே தோல்விக்கு இட்டுச்செல்வதை விளக்கும் படம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com