Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, July 31, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்பட வாய்ப்பிருந்தாலே நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியும்
[31 - July - 2008] [Font Size - A - A - A]
*மாத்தளை மாநகரசபை எதிர்க்கட்சித் தலைவர்

எமது நாட்டில் ஊடக சுதந்திரம் முழுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் கூறி வருகின்றபோதும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிக்கும் ஊடகவியலாளர்கள் விரட்டி விரட்டி அடிக்கப்படுகின்றனர். ஒரு அரசாங்கம் தவறான வழியில் செல்லும் போது எதிர்க்கட்சியினர் ஊடகவியலாளர்களுடன் கூட்டு சேர்ந்து செயல்பட்டே அரசாங்கத்தை சரியான வழியில் இட்டு செல்ல வேண்டுமென வரலாறுகள் கூறுகின்றபோதும் எமது நாட்டில் அவ்வாறு செயற்பட முடியாமலுள்ளது. ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயல்படுவதற்காச்ன வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலமே நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாக்க முடியும். எனவே, எமது நாட்டு ஊடகவியலாளர்களுக்கு அத்தகைய வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது இன்றைய அரசாங்கத்தின் தார்மீக கடமையாகும். இவ்வாறு மாத்தளை மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் டல்ஜித் அலுவிகார தெரிவித்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாத்தளை மாநகர சபையின் மாதாந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். மேற்படி கூட்டம் மாத்தளை மாநகர பிதா முஹமது ஹில்மி கரீம் தலைமையில் நகர கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்;

ஆரம்பகாலத்தில் கொழும்பு பிரதேசங்களில் மட்டுமே காணப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு எதிரான அரச பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் படிப்படியாக மாகாணங்களுக்கும் பரவி தற்போது மாத்தளை மாநகரசபை நிர்வாகத்துக்குள்ளும் ஊடுருவியுள்ளது. அண்மையில் மாத்தளை மாநகர சபை ஆணையாளர் ஊடகவியலாளர் ஒருவரைத் தாக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. இது உண்மையெனில் கட்டாயமாக கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

எமது நகரசபையின் மாதாந்த கூட்டத்தில் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானமும் அமுல்படுத்தப்படுவதில்லை. மாதாந்த கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களை நிறைவேற்ற முடியாத நிலையில் கூட்டங்களை நடத்தி கால நேரத்தை வீண் விரயமாக்குவது அர்த்தமற்ற செயலாகும். எனவே, கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை செயற்படுத்த நகரபிதா நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் மாதாந்த கூட்டங்கள் நடத்தப்படுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

தற்போது எமது நகரசபைக்குள் ஊழல்கள், வீண்விரயங்கள், சட்டவிரோத செயற்பாடுகள் பெருமளவில் அதிகரித்துள்ளன. நகரசபை ஆணையாளர் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை தக்கமுறையில் பயன்படுத்துவாரானால் இவ்வாறான முறைகேடான நடவடிக்கைகள் ஏற்பட வாய்ப்புக்கிட்டாது.

நகரசபையின் தற்போதைய செயலாளரின் ஆலோசனையை நகரபிதா பெற்று செயல்படுவதன் மூலம் சிறந்த முறையில் செயலாற்ற முடியும் என்றார்.

நகரசபை உறுப்பினர் ரொஷான் டி சில்வா உரையாற்றும் போது;

இது ஒரு பௌத்த நாடாக இருந்தபோதும் ஊடகவியலாளர்களைப் போன்றே தமது உரிமைகளுக்காக போராட்டம் நடத்திவரும் பௌத்த பிக்குகளும், விரட்டியடிக்கப்படுகின்றனர்.

இவ்வாறான செயற்பாடுகள் அரசாங்கத்துக்கே பெரும் அபகீர்த்தியை ஏற்படுத்தி வருகின்றன.

சுற்றாடலுக்கும் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அதிக ஒலியுடன் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தக் கூடாதென உயர்நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளபோதும் கடந்த போயா தினங்களின் போது இச்சட்டத்தை மீறும் வகையிலான செயல்பாடுகள் ஒரு சில பௌத்த விகாரைகளில் இடம்பெற்றன. எனவே, நீதிமன்ற சட்டதிட்டங்களை கொச்சைப்படுத்தும் செயல்பாடுகளை தடுத்துநிறுத்த நகரபிதா நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

Email this page Your Opinion Print this page
இந்திய, பாகிஸ்தான் தலைவர்கள் நாளை வருகை
சார்க் உச்சி மாநாட்டு பாதுகாப்புக்காக நாளை முதல் ஞாயிறு வரை குடாநாட்டுக்கான பயணிகள் விமானசேவை இடைநிறுத்தம்
கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கொய்ராலாவை அனுப்ப நேபாளக் கட்சிகள் இணக்கம்
அரசியலுக்கே ஊடகங்களில் அதிக முக்கியத்துவம் அபிவிருத்திக்கு முன்னுரிமை அளிப்பதில்லை
"யுத்தத்தை தோற்றுவித்தோரே சமாதானத்தை உருவாக்க வேண்டும்'
மீனவர் பிரச்சினை தீர்வுக்கு கொழும்பு செல்லும் இந்திய பிரதமர் அழுத்தம் கொடுக்கவேண்டும்
சார்க்கின் புதிய அவதானிகளாக அவுஸ்திரேலியா, மியான்மார்
சார்க் மகாநாட்டால் இலங்கைக்கு கிடைக்கும் நன்மையை அரசால் பட்டியலிட முடியுமா?
தெற்காசிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கை முழுமையாக அமுலாகும் சாத்தியம் இல்லை
கூட்டமைப்பு எம்.பி. கனகசபையின் மெய்ப்பாதுகாவலர் மீது துப்பாக்கிச்சூடு
வடபகுதி மோதலில் 4 படையினர் பலி
தொண்டமானுக்கு ஜனாதிபதி மன்னிப்பு
மக்களை வீடுகளிலிருந்து வெளியேற்றியதை எதிர்த்தோருக்கு வெள்ளைவான் அச்சுறுத்தல்
இரணைமடுப் பகுதியில் கடும் விமானத் தாக்குதல்
சட்டவிரோத குடியிருப்புகளை எந்த நேரத்திலும் அகற்றும் அதிகாரம் அரசுக்கு இருக்கிறது
சார்க் மாநாட்டுக்கு புறம்பாக இந்திய பாகிஸ்தான் தலைவர்கள் சந்திப்பது தொடர்பாக எதுவும் தெரியாது
அமைச்சர்கள் குழு மடுவுக்கு விஜயம் ஆயர் இல்லத்தில் திருச்சொரூபத்தை வழிபட்டனர்
கல்கிசை பகுதியில் தீவிர தேடுதல்
நீதிமன்றம் வந்த மெய்ப்பாதுகாவலர்கள்
சுதந்திர ஊடகஅமைப்பின் பிரதிநிதிகள் வர்த்தக கூட்டமைப்பினருடன் சந்திப்பு
தப்பிவந்த கடற்படை வீரர் பொலிஸாரால் கைது
சிறைக்கூடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் குற்றச்செயல்களை தடுக்க அனைவரும் முன்வரவேண்டும்
குருவிட்டவில் மனித உரிமைகள் தொடர்பான செயலமர்வு
மாவிட்டபுரம் தேர் உற்சவத்தை முன்னிட்டு தெல்லிப்பழை சோதனைச் சாவடியில் கருமபீடம்
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம்
வன்னியில் தொடரும் இராணுவ நடவடிக்கையால் விவசாயிகள், மாணவர்கள் பெரிதும் பாதிப்பு
சிறுமி பாலியல் துஷ்பிரயோக வழக்கு இராணுவ வீரருக்கு 14 வருட கடுங்காவல் சிறை
ஆட்டோவில் பயணித்த இருவர் சுட்டுக் கொலை
கரையோர ரயில்களில் சோதனைகள்
நாளை பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணை விடுமுறை
படையினரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டும் தேசிய வனத்தில் வேட்டைக்காரர் அதிகரிப்பு
பிபிலை,மெதகமவில் அசுத்தமான குடிநீர் விநியோகிக்கப்படுவதாக விசனம்
உரியவரின் பெயர், முகவரியில்லாத சிம் அட்டைகள் கல்முனை பிரதேசத்தில் பொலிஸாரால் பறிமுதல்
க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு இம்முறை 2,03,819 மாணவர்கள் தோற்றவுள்ளனர்
படைத்தளபதியாகவிருந்த போது முறைகேடாக பணம் உழைத்திருந்தால் சகல இடங்களிலும் வீடு வாங்கியிருப்பேன்
வடக்கு கிழக்கு கிராமசேவையாளர் வெற்றிடங்களை நிரப்புமாறு கோரிக்கை
தமிழ் முஸ்லிம் சமூகங்களின் ஐக்கியத்தை சீர்குலைக்கும் அரசியல் நடவடிக்கைகளுக்கு இடமளிக்கக்கூடாது
மூன்று சமூகங்களும் ஒற்றுமையுடன் வாழ்வதன் மூலமே கிழக்கு மாகாணத்தில் சமாதானத்தை கட்டியெழுப்ப முடியும்
சார்க் மகாநாட்டின் மூலம் வறிய மக்கள் பயன்பெறும் திட்டமாகவே சார்க் கிராமம் அமைந்துள்ளது
ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்பட வாய்ப்பிருந்தாலே நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியும்
அரசியல் ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சமூகமாக மலையக சமூகம் மாற்றமடைய வேண்டும்
முகத்துவாரம் சங்கமத்தில் இந்துக்கள் பிதிர்க்கடன்களை நிறைவேற்ற அனுமதி
சட்டத்தை மீறும் வர்த்தகர்களுக்கெதிராக சுற்றிவளைப்புக் குழுக்கள் அதிகரிப்பு
கந்தளாய் சீனித் தொழிற்சாலையை மீண்டும் திறக்குமாறு ஜே.வி.பி. அரசிடம் கோரிக்கை
தனிநபர் விடும் தவறு ஒரு நிறுவனத்தையே தோல்விக்கு இட்டுச்செல்வதை விளக்கும் படம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com