* ஆகஸ்ட் 6 இல் பரீட்சைகள் ஆரம்பம்
இவ்வருடம் நடைபெறவுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இப்பரீட்சைக்கு 109,062 பாடசாலைப் பரீட்சார்த்திகளும் 94,757 தனியார் பரீட்சார்த்திகளுமாக மொத்தம் 2,03,819 பேர் தோற்றவுள்ளனர்.
ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகும் இப்பரீட்சை 21 ஆம் திகதி வரை நடைபெற்று சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாண சபைத் தேர்தல் நடைபெற்று முடிந்ததும் மீண்டும் 25 ஆம் திகதி ஆரம்பித்து செப்டெம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இப்பரீட்சைக்காக 1818 பரீட்சை நிலையங்களும் 281 இணைப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, 2008 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இப்பரீட்சைக்கு இவ்வருடம் 5 இலட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தோற்றவுள்ளனர்.
5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும் பரீட்சை நிலையங்களுக்கு எந்தக் காரணம் கொண்டும் மாணவர்களின் பெற்றோர் அனுமதிக்கப்படமாட்டார்கள் என பரீட்சைத் திணைக்களம் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.