Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, July 31, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
வன்னியில் தொடரும் இராணுவ நடவடிக்கையால் விவசாயிகள், மாணவர்கள் பெரிதும் பாதிப்பு
[31 - July - 2008] [Font Size - A - A - A]
வன்னியில் பல பகுதிகளிலும் தொடரும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக விவசாயிகளும் மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

படையினரின் தாக்குதல்கள் காரணமாக முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு, துணுக்காய் போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பயிர்ச் செய்கைகள் யாவும் கைவிடப்பட்டுள்ளன.

வவுனிக்குளத்தின் கீழ் இவ்வாண்டு 3500 ஏக்கர் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது. இப்பகுதி மீது படையினர் மேற்கொண்ட தொடர் தாக்குதல்களால், இப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட 3500 ஏக்கர் சிறுபோக நெற்செய்கை விவசாயிகளால் கைவிடப்பட்டு அழிவடைந்துள்ளது.

இதனைவிட, துணுக்காய், உயிலங்குளம், ஆலங்குளம், ஐயங்கன்குளம் போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கைகளும் சிறு தானிய செய்கைகளும் தோட்டப் பயிர்ச் செய்கைகளும் விவசாயிகளால் கைவிடப்பட்டு அழிவடைந்துள்ளன. இதனால், விவசாயிகள் பெரும் இழப்புகளைச் சந்தித்துள்ளனர்.

இது இவ்வாறிருக்க, படையினரின் தாக்குதல்களால் இடம்பெயர்ந்த பாடசாலைகள் முல்லைத்தீவு, திருமுறிகண்டி இந்து வித்தியாலயத்தில் இணைப்புப் பாடசாலைகளாக பெரும் இடர்களின் மத்தியில் இயங்கி வருகின்றன.

படையினரின் தாக்குதல் காரணமாக இடம்பெயர்ந்த பாலிநகர் மகா வித்தியாலயம், பாண்டியன்குளம் மகா வித்தியாலயம், யோகபுரம் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளும் அனிஞ்சியன்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, கல்விளான் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, வவுனிக்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, பனங்காமம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, மூன்று முறிப்பு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, கூத்திமூலை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை போன்ற பாடசாலைகளும் இடம் பெயர்ந்து திருமுறிகண்டி இந்து வித்தியாலயத்தில் இணைப்புப் பாடசாலைகளாக இயங்கி வருகின்றன.

திரு முறிகண்டி இந்து வித்தியாலயத்தில் ஏற்கனவே 429 மாணவர்கள் கல்வி கற்று வந்தனர். தற்போது இடப்பெயர்வுகள் காரணமாக இடம்பெயர்ந்த 620 மாணவர்களும் இங்கு இணைந்து கல்வி கற்று வருகின்றனர்.

இந்நிலையில், குடிதண்ணீர், கழிப்பறை வசதிகளின்மை, வகுப்பறைகள் பற்றாக்குறை எனும் பல்வேறு நெருக்கடிகளின் மத்தியில் இப்பாடசாலையில் மாணவர்கள் தமது கற்றல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

இராணுவ நடவடிக்கை காரணமாக வன்னியில் 55 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதும் தெரிந்ததே.

Email this page Your Opinion Print this page
இந்திய, பாகிஸ்தான் தலைவர்கள் நாளை வருகை
சார்க் உச்சி மாநாட்டு பாதுகாப்புக்காக நாளை முதல் ஞாயிறு வரை குடாநாட்டுக்கான பயணிகள் விமானசேவை இடைநிறுத்தம்
கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கொய்ராலாவை அனுப்ப நேபாளக் கட்சிகள் இணக்கம்
அரசியலுக்கே ஊடகங்களில் அதிக முக்கியத்துவம் அபிவிருத்திக்கு முன்னுரிமை அளிப்பதில்லை
"யுத்தத்தை தோற்றுவித்தோரே சமாதானத்தை உருவாக்க வேண்டும்'
மீனவர் பிரச்சினை தீர்வுக்கு கொழும்பு செல்லும் இந்திய பிரதமர் அழுத்தம் கொடுக்கவேண்டும்
சார்க்கின் புதிய அவதானிகளாக அவுஸ்திரேலியா, மியான்மார்
சார்க் மகாநாட்டால் இலங்கைக்கு கிடைக்கும் நன்மையை அரசால் பட்டியலிட முடியுமா?
தெற்காசிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கை முழுமையாக அமுலாகும் சாத்தியம் இல்லை
கூட்டமைப்பு எம்.பி. கனகசபையின் மெய்ப்பாதுகாவலர் மீது துப்பாக்கிச்சூடு
வடபகுதி மோதலில் 4 படையினர் பலி
தொண்டமானுக்கு ஜனாதிபதி மன்னிப்பு
மக்களை வீடுகளிலிருந்து வெளியேற்றியதை எதிர்த்தோருக்கு வெள்ளைவான் அச்சுறுத்தல்
இரணைமடுப் பகுதியில் கடும் விமானத் தாக்குதல்
சட்டவிரோத குடியிருப்புகளை எந்த நேரத்திலும் அகற்றும் அதிகாரம் அரசுக்கு இருக்கிறது
சார்க் மாநாட்டுக்கு புறம்பாக இந்திய பாகிஸ்தான் தலைவர்கள் சந்திப்பது தொடர்பாக எதுவும் தெரியாது
அமைச்சர்கள் குழு மடுவுக்கு விஜயம் ஆயர் இல்லத்தில் திருச்சொரூபத்தை வழிபட்டனர்
கல்கிசை பகுதியில் தீவிர தேடுதல்
நீதிமன்றம் வந்த மெய்ப்பாதுகாவலர்கள்
சுதந்திர ஊடகஅமைப்பின் பிரதிநிதிகள் வர்த்தக கூட்டமைப்பினருடன் சந்திப்பு
தப்பிவந்த கடற்படை வீரர் பொலிஸாரால் கைது
சிறைக்கூடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் குற்றச்செயல்களை தடுக்க அனைவரும் முன்வரவேண்டும்
குருவிட்டவில் மனித உரிமைகள் தொடர்பான செயலமர்வு
மாவிட்டபுரம் தேர் உற்சவத்தை முன்னிட்டு தெல்லிப்பழை சோதனைச் சாவடியில் கருமபீடம்
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம்
வன்னியில் தொடரும் இராணுவ நடவடிக்கையால் விவசாயிகள், மாணவர்கள் பெரிதும் பாதிப்பு
சிறுமி பாலியல் துஷ்பிரயோக வழக்கு இராணுவ வீரருக்கு 14 வருட கடுங்காவல் சிறை
ஆட்டோவில் பயணித்த இருவர் சுட்டுக் கொலை
கரையோர ரயில்களில் சோதனைகள்
நாளை பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணை விடுமுறை
படையினரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டும் தேசிய வனத்தில் வேட்டைக்காரர் அதிகரிப்பு
பிபிலை,மெதகமவில் அசுத்தமான குடிநீர் விநியோகிக்கப்படுவதாக விசனம்
உரியவரின் பெயர், முகவரியில்லாத சிம் அட்டைகள் கல்முனை பிரதேசத்தில் பொலிஸாரால் பறிமுதல்
க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு இம்முறை 2,03,819 மாணவர்கள் தோற்றவுள்ளனர்
படைத்தளபதியாகவிருந்த போது முறைகேடாக பணம் உழைத்திருந்தால் சகல இடங்களிலும் வீடு வாங்கியிருப்பேன்
வடக்கு கிழக்கு கிராமசேவையாளர் வெற்றிடங்களை நிரப்புமாறு கோரிக்கை
தமிழ் முஸ்லிம் சமூகங்களின் ஐக்கியத்தை சீர்குலைக்கும் அரசியல் நடவடிக்கைகளுக்கு இடமளிக்கக்கூடாது
மூன்று சமூகங்களும் ஒற்றுமையுடன் வாழ்வதன் மூலமே கிழக்கு மாகாணத்தில் சமாதானத்தை கட்டியெழுப்ப முடியும்
சார்க் மகாநாட்டின் மூலம் வறிய மக்கள் பயன்பெறும் திட்டமாகவே சார்க் கிராமம் அமைந்துள்ளது
ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்பட வாய்ப்பிருந்தாலே நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியும்
அரசியல் ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சமூகமாக மலையக சமூகம் மாற்றமடைய வேண்டும்
முகத்துவாரம் சங்கமத்தில் இந்துக்கள் பிதிர்க்கடன்களை நிறைவேற்ற அனுமதி
சட்டத்தை மீறும் வர்த்தகர்களுக்கெதிராக சுற்றிவளைப்புக் குழுக்கள் அதிகரிப்பு
கந்தளாய் சீனித் தொழிற்சாலையை மீண்டும் திறக்குமாறு ஜே.வி.பி. அரசிடம் கோரிக்கை
தனிநபர் விடும் தவறு ஒரு நிறுவனத்தையே தோல்விக்கு இட்டுச்செல்வதை விளக்கும் படம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com